WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Monday 4 May 2015

தினை அரிசி காலிஃப்ளவர் சாதம்

தேவையான பொருட்கள்:

தினைஅரிசி – 1 குவளை (150 கிராம்)
தண்ணீர் – 2 1/2 குவளை
காலி ஃப்ளவர் துண்டுகள் – 1 குவளை (100கிராம்)
பச்சை பட்டாணி – 1/4 குவளை (25 கிராம்)
தக்காளி – 2 அல்லது 3 (நடுத்தர அளவு)
சீரகம் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – 2 சிட்டிகை
எலுமிச்சை – 1/2 துண்டு
கொத்தமல்லி தழை – 2 தேக்கரண்டி
புதினா இலைகள் – 8
இஞ்சி – 1/2 இன்ச் (துருவியது)
மிளகு – 6 முதல் 8 எண்ணிக்கை
நல்லெண்ணை – 2 தேக்கரண்டி
பிரியாணி இலை – 1
இந்துப்பு – சுவைக்கு ஏற்ப

செய்முறை:

வாணலியில் தினைஅரிசியை 3 நிமிடம் வறுத்துக் கொள்ளவும். பின் அரிசியைக் குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி அதனுடன் சில துளிகள் எண்ணை மற்றும் சிறிதளவு இந்துப்பு சேர்த்து வேக வைக்கவும். குக்கர் முதல் விசில் வந்ததும், தீயை மிதமான சூட்டிற்கு குறைக்கவும். பின் 8 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். குக்கரில் ஆவி போன பின்னர், 10 நிமிடங்கள் கழித்து சாதத்தை முள் கரண்டியால் கிளறி விட்டு, சாதத்தை தனியே வைக்கவும். காலிஃப்ளவர் சுத்தப்படுத்தி, சற்று பெரிய துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும். வெந்நீரில் 10 நிமிடங்கள் இரண்டு காய்கறிகளையும் ஊற வைக்கவும். பின்னர் நீரை வடிகட்டி, காய்கறியை தனியே வைக்கவும்.

வாணலியில் எண்ணையை ஊற்றி, அது காய்ந்ததும் சீரகம் போடவும். பின் இஞ்சி துருவல், புதினா போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சள் தூள் போட்டு நன்றாக வதக்கவும். பின்னர் ஊற வைத்த காலிஃப்ளவர் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். இப்பொழுது பச்சை பட்டாணியை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி முக்கால் பங்கு வேக வைக்கவும் (காய்கறிகள் முழுவதும் வெந்து விட்டால் குழைந்து விடும்). பின்னர் வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும். மிளகை பொடித்து சாதத்தில் சேர்க்கவும். எலுமிச்சம் பழத்தை பிழிந்து ஊற்றவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கொத்தமல்லி தழையை தூவி, ஏதாவது ஒரு வகை ராய்தாவுடன் பரிமாறவும்.

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...