WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Monday 4 May 2015

ஆரஞ்சு – நெல்லிக்காய்

நமக்கு எளிதாகக் கிடைக்கும் எதையும் நாம் சட்டைசெய்ய மாட்டோம். மிகக்குறைந்த விலையில், ரோட்டோரக் கடைகளில் கிடைக்கும் நெல்லிக்காயை, நாம் பொருட்படுத்துவதே இல்லை. உள்ளூரில் கிடைக்கும் நெல்லிக்காயைவிட இறக்குமதி செய்யப்படும் ஆரஞ்சு மீதுதான் நமக்கு விருப்பம்.

அயலகப் பழங்களுக்குத் தந்த முக்கியத்துவத்தை, நெல்லிக்கனிக்கும் தந்திருந்தால் பல நோய்களிடம் இருந்து தப்பித்திருக்கலாம். விலை உயர்ந்த ஆரஞ்சுப் பழத்தை விட, விலை மலிவான நெல்லிக்காயில் அதிக சத்துக்கள் உள்ளன.

ஆரஞ்சு

ஒரு நடுத்தர (100 கி) அளவு ஆரஞ்சில் 44 கலோரிகள், 250 மி.கி பொட்டாசியம், 19 கிராம் கார்போஹைட்ரேட், உள்ளன.

ஒரு நாளுக்குத் தேவையான அளவைக் காட்டிலும் 30 சதவிகிதம் அதிகமான வைட்டமின் சிஐ அளிக்கிறது.

ஆரஞ்சில் தையமின், ரிபோஃபிளேவின், நியாசின், வைட்டமின் பி6 போன்ற வைட்டமின்கள், மற்றும் பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீசு, செலினியம் மற்றும் தாமிரம் நிறைவாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

தூக்கம், தசைகள் இயக்கம், நினைவாற்றல் போன்றவற்றுக்குத் தேவையான நுண்ஊட்டச்

சத்தான கோலின் (Choline)இதில் உள்ளது. மேலும் நியூரோடிரான்ஸ்மிட்டர்கள் செயல்திறனுக்கும் உதவுகிறது.

இதில் உள்ள ஃபோலிக் அமிலம் மூளை செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது. கர்ப்பிணிகள் இதை எடுத்துக்கொள்வதன் மூலம் குழந்தையின் மூளை நன்கு வளர்ச்சி அடையும்.

ஆரஞ்சில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது செரிமான மண்டலத்தைத் தூண்டுகிறது, மலச்சிக்கலைப் போக்குகிறது.

இதில் உள்ள ஃபிளவனாய்ட் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. கொழுப்பு அளவைக் குறைக்கிறது. இதய நோய்க்கான வாய்ப்புகள் குறைகின்றன.

நெல்லிக்காய்

ஆரஞ்சுப் பழத்தைவிட நெல்லிக்கனியில் வைட்டமின் சி 20 சதவிகிதம் அதிகம் உள்ளது.

கர்ப்பிணிகளுக்கு தலைச்சுற்றல், வாந்தி அடிக்கடி வரும். அவர்கள் முழு நெல்லிக்காய் எடுத்துக்கொள்ளாமல் அதைத் துண்டுகளாக்கி தலைச்சுற்றல் ஏற்படும் போது எடுத்துக்கொண்டால் நல்ல பலன் தரும்.

நெல்லிக்காயை ‘ஒன் மேன் ஆர்மி’ எனலாம். இதில் இருக்கும் எம்ப்ளிகானின் ஏ (EmblicaninA) செல்களைப் புதியதாக உற்பத்தி செய்யும்; பாதிப்படைந்த செல்களை மறு சீரமைக்கும்.

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டுவந்தால் உடல் புத்துணர்வோடும் இளமையோடும் இருக்கும். இதயத்தையும் சிறுநீரகத்தையும் பலப்படுத்தும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து, குடித்துவந்தால் பார்வைக் குறைபாடுகள் மறையும்.

நெல்லிக்காய் சாறுடன், பாகற்காய் சாறு கலந்து சாப்பிட்டால் இன்சுலின் செயல்திறனை மேம்படுத்தும்.

கொழுப்பைக் கரைக்கும் தன்மை உள்ளதால் இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

செரிமான மண்டலத்தின் செயல்திறனை மேம்படுத்தி, மலச்சிக்கல், வயிறு எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு வயிறு தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கிறது.

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் செல்லவே வேண்டாம் என்று பழமொழி உண்டு. ‘’தினம் அரை நெல்லிக்காய் சாப்பிட்டால், டாக்டரிடம் செல்ல வேண்டாம்” என்று மாற்றி விடலாம்.

நன்றி: செந்தில்வயல்.காம்

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...