WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Saturday, 2 May 2015

அத்திப்பழப் பணியாரம்

தேவையானவை:

அத்திப்பழம் - 8,
சிறுதானிய சப்பாத்தி மாவு - 2 கப்,
கருப்பட்டித்தூள் - 2 கப்,
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை,
உப்பு, நெய் அல்லது எண்ணெய் - தேவைக்கேற்ப,
தேங்காய்ப் பால் - 1 கப்

செய்முறை:

அத்திப் பழத்தின் தோல் நீக்கி மசிக்கவும். சிறுதானிய சப்பாத்தி மாவுடன் உப்பு சேர்த்து கலக்கவும். அதில் கருப்பட்டித்தூளை பாகாகக் காய்ச்சி அதையும் விட்டு தேங்காய்ப் பால், ஏலக்காய் தூள் சேர்த்து அப்பம் மாவு பதத்துக்குக் கலக்கவும்.

குழிப்பணியாரக் கல்லில் நெய் அல்லது எண்ணெய் விட்டு மாவை ஊற்றி சுட்டு எடுக்கவும். வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

சிவப்பரிசி தேங்காய்ப் பால் கஞ்சி


தேவையானவை:

சிவப்பு அரிசி - ஒரு கப், முதல் தேங்காய்ப் பால் - அரை கப், இரண்டாம், மூன்றாம் தேங்காய்ப் பால் - தலா ஒரு கப், பூண்டு - 15 பல், சீரகம், வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், சுக்கு - சிறிய துண்டு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

சிவப்பரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, குக்கரில் சிவப்பு அரிசியுடன் இரண்டாம், மூன்றாம் தேங்காய்ப் பால், ஒரு டம்ளர் தண்ணீர், பூண்டு, சீரகம், வெந்தயம், சுக்கு, உப்பு சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கவும். பிறகு அதில் முதல் தேங்காய்ப்பால் சேர்த்துப் பரிமாறவும்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆற்றும் சத்தான கஞ்சி இது.

சிறுதானிய மசாலா கஞ்சி

தேவையான பொருட்கள்

வரகு, சாமை, தினை, பனிவரகு, குதிரைவாலி - தலா 1 தேக்கரண்டி (குருணையாக‌)
சின்ன வெங்காயம் - 6
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி மற்றும் புதினா - தலா 1 கைப்பிடி
இஞ்சி- பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை:

சிறு தானியங்களை ஒன்றாகச் சேர்த்து, அதில் தண்ணீர் விட்டு வேகவைக்கவும் அல்லது காய்ச்சவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், தக்காளி, உப்பு போட்டு நன்கு வதக்கவும். புதினா, கொத்தமல்லி சேர்க்கவும். நன்கு வதங்கியதும் வேகவைத்த சிறுதானிய கலவையை இதில் சேர்க்கவும். எளிதாக,சிறுதானிய மசாலா கஞ்சி தயார்!

உடலுக்குப் பொலிவூட்டும். இது ஒரு சத்தான உணவு. சரிவிகித உணவு. காலை உணவிற்கும் இரவு உணவிற்கும் ஏற்றது.

நன்றி: தாளாண்மை.

தினை தேங்காய் பால் கஞ்சி

தேவையானவை:

தினைப் புழுங்கல் அரிசி - 200 கிராம், பாசிப் பருப்பு - 100 கிராம், பூண்டு - 4 பல், மிளகு, வெந்தயம் - சிறிதளவு, தேங்காய்ப் பால் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

தினை மற்றும் பாசிப் பருப்பைக் கழுவிச் சுத்தம்செய்து, ஒன்றுக்கு ஆறு என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். இதனுடன் வெந்தயம், பூண்டு, மிளகு சேர்த்து 5 அல்லது 6 விசில் வரும் வரை குக்கரில் வேகவைக்க வேண்டும்.

இறுதியாக தேங்காய்ப் பால் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, குழைய வேகவைக்க வேண்டும்.

சுவையான தினை தேங்காய் பால் கஞ்சி தயார்.

நன்றி: பெட்டகம் .

பாப்கான் சாப்பிடுங்க ஆரோக்கியமா வாழலாம்

ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் இருந்தால், பாப்-கார்ன் வாங்கி சாப்பிடுங்கள். பாப்-கார்னில் அதிகமான அளவு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் பாப்-கார்ன் மக்காசோனத்தினால் செய்யப்படுகிறது. அதனால் அதன் சத்துக்கள் போய்விடுகின்றன என்று நிறைய பேர் நினைக்கின்றனர். ஆனால் அது தான் தவறு, பாப்-கார்னில் இனிப்பு அல்லது உப்பு என்று சுவைக்காக எதை சேர்த்தாலும், அதில் இருக்கும் சத்துக்கள் மாறாமல் இருக்கும். இப்போது அந்த பாப்-கார்னில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்று பார்ப்போமா

தானியங்களில் ஒன்றான மக்காசோளத்தால் செய்யப்படும் பாப்-கார்னில் அதிகமான அளவு நார்ச்சத்துக்கள், மற்ற பழங்கள் மற்றும் காய்களில் இருப்பதைப் போன்று, இதிலும் அடங்கியுள்ளன. ஆகவே ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது, சிப்ஸ் மற்றும் பர்கர் போன்றவைகளை சாப்பிடுவதை விட, இந்த பாப்-கார்ன் மிகவும் சிறந்தது.

மேலும் பாப்-பார்னில் பாலிஃபினால் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது என்றும் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற சத்துக்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இதில் இருக்கும் பாலிஃபினால் உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், பாப்-கார்னில் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான அளவு சத்துக்களில் 13% சத்துக்கள் கிடைக்கின்றது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பசியின்மை, புற்றுநோய், வயிற்றில் ஏற்படும் பிரச்சனை, இதய நோய் போன்றவை ஏற்படாமல் கட்டுப்படுத்தும். அதிலும் உடலில் செரிமானத் தன்மையை அதிகரிப்பதோடு, அழகான சருமத்தையும் தரும்.

நார்ச்சத்துக்களில் இரு வகைகளான கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் என்று இருக்கின்றன. அதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நீரில் கரையக்கூடியவை, கரையாத நார்ச்சத்துக்கள் நீரில் கரையாமல், அதனை பெருங்குடல் வழியாக உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றிவிடும். அத்தகைய கரையாத நார்ச்சத்துக்கள் பாப்-கார்னில் அதிகம் இருப்பதால், உடலில் செரிமான விரைவில் ஏற்படுவதோடு, மலச்சிக்கலையும் சரிசெய்யும். மேலும் இதனை சாப்பிடுவதால், அடிக்கடி பசிக்காமல் இருக்கும். இதனால் உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...