வாட்ஸ் அப் - ல் லைக் பட்டன் வசதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேப்போல் கணினி பதிப்பான வாட்ஸ் அப் வெப் - ம் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.
செல்பேசியில் பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலி மூலம் எழுத்து, படம், காணொளி ஆகிய வடிவில் செய்திகளை அனுப்பலாம்.
இது தற்போது உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் செய்தி தொடர்பு செயலியாக ஸ்மார்ட் போன்களில் வலம் வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல், வாட்ஸ் அப் செயலியானது கணினியில் பயன்படுத்தக்கூடிய வசதியை வழங்கியது. ஆனால், செல்பேசியில் உள்ள வசதிகள் அனைத்தும் கணினி பதிப்பில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.
தற்போது, வாட்ஸ் அப் தனது கணினி பதிப்பை மேம்படுத்தியுள்ளது.
அதன் படி, ஸ்டேடஸ் மாற்றலாம், ஃப்ரபைல் படத்தை மாற்றியமைக்கலாம். அரட்டையை நீக்கலாம், ஆவணப்படுத்தலாம், குழுவை நிர்வகிக்கலாம்.
வாட்ஸ் அப்பில் லைக் பட்டன்
கூடுதல் தகவலாக, வாட்ஸ் அப்பில் பார்த்து படித்த செய்தியை படிக்காததாக குறிக்கவும் வகையில் வசதிகளை மேம்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதேப்போல், லைக் பட்டன் வசதியையும் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Services
- Home
- AnnaUnivNews
- Cricket News
- தமிழில் தொழில்நுட்ப தகவல்கள்
- School News
- Examination Tips
- Health Tips
- Samaiyal Tips
- Facebook Tricks
- Blogger Tips
- Computer Tricks
- SIM details
- Celebrity Birthdays(Daily)
- Cinema News
- watch trailers
- Colleges Info(தமிழ்நாடு)
- Langauges Learning
- GTA Save Games
- Earn Money Online
- Model Letters
- Dote News
- General Knowledge
- Placement Info
- Gate Books
- About
- Contact
- Privacy Policy
Saturday 11 July 2015
Whatsapp Like Button
Sunday 28 June 2015
பெண்களுக்கு இணையதள கல்வி : கூகிளின் புதிய திட்டம் தொடக்கம்
-----------------------------------------
இந்திய கிராமப்புற பெண்கள் இடையே இணையதள விழிப்புணர்வை ஏற்படுத்த கூகிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிராம பெண்களுக்கு இணையதள கல்வியை வழங்கும் திட்டத்தை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இணையதளத்தை எப்படி பயன்படுத்துவது என்றும், இதனால் கிடைக்கும் பயன்கள் குறித்தும் பெண்களுக்கு சொல்லித் தரப்படும் என்றும் கூகிள் நிறுவன இயக்குனர் சந்தீப் மேனன் தெரிவித்தார். கிராமப்புறங்களை சேர்ந்த 5 லட்சம் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் இணையதள கல்வி அடுத்த 2 மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
புத்தகத்துக்கு குட்பை
புத்தகத்துக்கு குட்பை : கணினி மூலம் மாணவர்களுக்கு கல்வி புதிய திட்டம் துவக்கம்
------------------------------------------------------
பெங்களூரு: கர்நாடக மாநில அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் இல்லாமல் கணினி மூலம் பாடம் நடத்தும் புதிய திட்டத்தை கல்வி இயக்குனரகம் மேற்கொண்டுள்ளது. பொதுவாக அரசு பள்ளிகளில் தரமான கல்வி கிடைப்பதில்லை என்பதால், வசதிப்படைத்தவர்கள் தொடங்கி கூலி வேலை செய்வோர் வரை தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்.
நகரபுறங்களில் மட்டுமே இருந்த இக்கலாச்சாரம், தற்போது ஊரக பகுதியிலும் வேரூன்றி உள்ளது. அரசு பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால், நடப்பு கல்வியாண்டில் 3 ஆயிரத்து 173 கன்னட பள்ளிகளை மூடிவிட அரசு முடிவு செய்தது. இதற்கு பல தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, பள்ளிகளை மூடும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Computer knowledge - kerala first
இந்தியாவில் கணினி அறிவில் கேரளா முதலிடம்!
--------------------------------------------------
கொச்சி: இந்திய அளவில் கணினி கல்வி பெற்ற மாநிலங்களின் பட்டியலில் கேரளா முதல் இடத்தில் உள்ளது. கேரளாவில் 49% குடும்பங்களில் வீட்டிற்கு ஒருவர் கணினி கல்வி பயின்றவராக உள்ளார். கடந்த வாரம் வெளியான 2014 ஆம் ஆண்டிற்கான கல்வி அறிக்கையில் கல்வி சார்ந்த பல முக்கிய விவரங்கள் வெளியிடப்பட்ட்து. இதன்படி, இந்தியாவில் 22 சதவீத குடும்பங்களில் வீட்டிற்கு ஒருவர் கணினி கல்வி பயின்றவராக உள்ளனர்.
மாநில அளவில் 49 சதவீதத்தினர், அதாவது 39.17 லட்சம் குடும்பங்களில் ஒருவருக்கு கணினி அறிவு இருப்பதால் கேரளா கணினி கல்வியறிவில் நாட்டின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. கேரளாவை அடுத்து பஞ்சாப், சிக்கிம் மாநிலங்கள் 47% மற்றும் 43% பெற்று அடுத்தடுத்த இடத்தை பெற்றுள்ளன.
கேரளாவில் 97 சதவீத கிராமங்கள் ஒவ்வொன்றிலும் இண்டர்நெட் மையங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Thursday 14 May 2015
விரைவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10
மேக் ஓஎஸ், லினக்ஸ் என பல இயங்குதளங்கள் இருந்தாலும் பெருவாரியான மக்கள் பயன்படுத்துவது மைக்ரோசாப்ட்-டின் விண்டோஸ் இயங்குதளத்தைதான்.
மைக்ரோசாப்ட் வெளியிட்ட விண்டோஸ் 8.1 பதிப்பு பெரும்பாலான பயனர்களை திருப்தி படுத்தவில்லை. அதனால் விரைவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான விண்டோஸ் 10 ஓ.எஸ்-ஐ வெளியிடவுள்ளது.
இதற்கான அனைத்து வேலைகளும் மும்முரமாக நடந்து கொண்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஓஎஸ் மார்க்கெட்டில் பெரும் வெற்றி அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
நிக்ஸான் சிகாஹோவில் நடந்த நிறுவனத்தின் சந்திப்பில் மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரி ஜெர்ரி நிக்ஸன் மற்றும் டெவலப்பர் ஈவன்ஜெலிஸ்ட் "விண்டோஸ் 10 இந்த ஓ.எஸ்-ன் இறுதி பதிப்பு, இதற்கான வேலைகள் இது வரை மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது" என்று கூறினர்.
அத்துடன் விண்டோசின் புதிய சிறப்பம்சங்கள் குறித்தும் தெரிவித்தனர்.
நிறுவனம் ஏற்கனவே உள்ள விண்டோஸ்-ஐ மேம்படுத்தப்பட்டதாக உருவாக்கி கொண்டிருக்கிறது. உதாரணமாக start மெனு மற்றும் செயலிகள்(apps) துரிதமாக செயல்படும் வண்ணம் தனித்தனியாக மேம்படுத்தப்படுகிறது.
இதனால் விண்டோஸ் 10 மேம்படுத்தப்பட்ட பதிப்பாக சிறந்த முறையில் வரும் என உறுதி அளித்துள்ளது
விண்டோஸ் 10 கணினி, மொபைல், டேப்லட், HoloLens, மற்றும் Xbox One போன்றவைகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இது பரிசோதனை கட்டத்தில் (Testing Stage) உள்ளது.
Thanx-Techmalar.com
கூகிள் மேப் – ல் இந்திய ரயில்வே கால அட்டவணைகள்
உலகமெங்கும் உள்ள பல தகவல்களை விரல் நுனியில் அறிந்து கொள்ள இணைய தளங்கள் பல சேவைகளை வழங்கி வருகின்றன. அவற்றில் கூகிள் வழங்கும் இலவச சேவைகள் மகத்தானவை.
அந்த வகையில் வீட்டில் இருந்து கொண்டே நாம் செல்ல வேண்டிய இடத்திற்கான மொத்த கிலோ மீட்டர் மற்றும் அதன் வழிகள் மற்றும் பல தகவல்கள் தெரிந்து கொள்ளும் உதவுவது கூகிள் மேப் https://maps.google.co.in/ இணையதளம்.
வெளியூரோ, உள்ளூரோ... பயணம் செய்யும் பெரும்பாலானவருக்கு இது பயனுள்ள ஒன்று. மொபைலில் GPS ஆன் செய்து கொண்டே கூகிள் மேப் உதவியுடன் நாம் விரும்பும் இடத்திற்கு செல்ல முடியும். உங்களில் பலரும் அதனை பயன்படுத்தி இருப்பீர்கள்.
தற்போது கூகிள் நிறுவனம் இதில் கூடுதலாக இந்திய ரயில்வேயில் உள்ள 12000 ரயிலின் கால அட்டவணைகளை கூகிள் மேப்-ல் அப்டேட் செய்துள்ளது. எந்த ரயில் எத்தனை மணிக்கு எந்த ஸ்டேசனுக்கு வரும்? எத்தனை மணிக்கு வரும்? சென்றடையும்? என எல்லா விபரங்களையும் காண முடியும்.
அகமதாபாத், பெங்களூர், சென்னை, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, டெல்லி மற்றும் புனே போன்ற 8 இந்திய நகரங்களில் பப்ளிக் டிரான்ஸ்போர்ட் தகவல்களை அப்டேட் செய்துள்ளது.
கூகிள் ட்ரான்சிட் (Google Transit) http://google.comtransit/ தளத்திற்கு சென்று புறப்படும் இடம், செல்லும் இடம் கொடுத்து பயன்படுத்தி பாருங்கள். கூகிள் மேப்-ன் கூடுதல் அம்சமான இது நமது பயணத்தை எளிதாக்கும் என்பதில் ஐயமில்லை.
கூகிள் மேப் தற்போது வரை உலக அளவில் 2,800 நகரங்களில் உள்ள 1 மில்லியன் நிறுத்தங்களுக்கான பப்ளிக் டிரான்ஸ்போர்ட் கால அட்டவணைகளை அப்டேட் செய்துள்ளது. இதில் நியூயார்க், டோக்கியோ, லண்டன் மற்றும் சிட்னி போன்றவை அடங்கும்.
Thanks : Techmalar.com
பேஸ்புக் தேடல் எந்திரம்...
வரப் போகிறதா...? கூகிளுக்கு போட்டியாக பேஸ்புக் தேடல் எந்திரம்...
கூகிள் நிறுவனம் பல சேவைகளை வழங்கி வந்தாலும் தேடல் எந்திரம்தான் (Search Engine) அவர்களின் அடிப்படை. யாகூ, பிங் என தேடல் எந்திரங்கள் போட்டி போட்டாலும் கூகிளை அசைக்க முடியவில்லை.
பேஸ்புக் தேடல் எந்திரம் துவக்கலாம் என்பது நீண்ட காலமாக வதந்தியாகவே இருக்கிறது. இப்போது அந்த வதந்திக்கு வலு சேர்க்கும் மற்றொரு தகவல்.
பேஸ்புக் சில IOS (Apple IPhone) பயனர்களுக்கு, Status, Photo/Video போடுவது போன்று "Add Link" என புதியதொரு வசதியை சோதனை முயற்சியாக வழங்கி உள்ளது.
இந்த வசதி மூலம் பயனர்கள் பேஸ்புக் உள்ளேயே வேண்டியவற்றை தேடி முடிவுகளை நாம் இடும் ஸ்டேடஸ்-களில் இணைத்துக் கொள்ள முடியும்.
இந்த வசதி அமெரிக்காவில் உள்ள சில பயனர்களுக்கு மட்டும் சோதனைக்காக வழங்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் படிப்படியாக எனைவருக்கும் வழங்கப்படும் எனவும் பேஸ்புக் அறிவித்து உள்ளது.
தேடல் முடிவுகளை தங்களிடம் பகிரப்பட்டு (Share) உள்ள 1 டிரில்லியன் பக்கங்களில் இருந்து வழங்குவதாக கூறி உள்ளனர்.
இது பேஸ்புக் தேடல் எந்திரத்திற்கான முன்னோட்டமா? என இணைய வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கூகிள் தேடல் எந்திரம் நிரலிகளால் தானியங்கியாக செயல்படுவது. பேஸ்புக் தேடல் எந்திரம் அளித்தால் தங்களிடம் ஷேர் செய்யப்பட்ட, லைக் செய்யப்பட்ட இணைய பக்கங்களில் இருந்து முடிவை காட்டுவார்கள். அது கூகிளை விட மேம்பட்டதாக, துல்லியமானதாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
கூகிளே சிறப்பாகத்தான் உள்ளது. பேஸ்புக் தேடல் எந்திரம் வந்தால் இணையம் மேலும் பயனுள்ளதாகும். எளிமையாகும்.
Thanx : techmalar.com
வருகிறது ஸ்மார்ட் வாட்ச்கள்
ஸ்மார்ட் போன்-கள் பிரபலமாகிவிட்ட நிலையில் அடுத்து மெதுவாக பரவலாகி வருகிறது ஸ்மார்ட் வாட்ச்கள்.
கால் செய்வது, ஈமெயில், பேஸ்புக் பார்ப்பது, உங்கள் பிட்னஸ்-ஐ டிராக் செய்வது, இசையை ரசிக்க என பல்வேறு உபயோகங்களுடன் ஸ்மார்ட் வாட்ச்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் Asus நிறுவனம் VivoWatch என்ற ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்டைன்லெஸ் ஸ்டீலால் ஆன, டச் வசதி கொண்ட இந்த வாட்ச் ஆண்டிராயிட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. இதில் உள்ள லைட் சென்சார் brightness அளவுகளை பல்வேறு லைட்டிங் கன்டிசனுக்கு ஏற்றார் போல் தானாக கட்டுப் படுத்துகிறது.
தினசரி ஆக்டிவாக எவ்வளவு நேரம் இருக்கிறீர்கள், ஓய்வு நிலை எவ்வளவு நேரம். தோராயமாக எவ்வளவு கலோரிகள் செலவழிக்கிறீர்கள், உங்கள் உறங்கும் நேரம் போன்றவற்றை கண்காணித்து பிட்னஸ் மானிட்டராக, உங்களை பிட்டாக வைத்துக் கொள்ள இந்த வாட்ச் உதவும். இது ஹாட் ரேட் சென்சாருடன் வருகிறது.
பார்ப்பதற்கு அழகாக உள்ள இந்த வாட்ச் பயன்படுத்த எளிமையாக இருக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. முக்கிய அம்சமாக இதன் பேட்டரி திறன் அதிகம். அதாவது இதன் சார்ஜ் 10 நாட்கள் வரை நிலைத்து நிற்க கூடியவை.
இது இன்னும் இந்தியாவில் வெளியாகவில்லை. இதன் விலை சுமாராக ரூ 9,700 இருக்கலாம் என்று ஊகிக்கப் படுகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
Thanx : Techmalar.com
Friday 12 December 2014
Tamil computer Tips-5
ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் மற்றும் விளையாட்டு அப்ளிகேஷன்களை கணினியில் இயக்க
மென்பொருளை தரவிறக்க சுட்டி
Tamil computer Tips-4
VMware workstation & VirtualBox- ஒரு பார்வை
VMware workstation பதிவிறக்க சுட்டி
VirtualBox பதிவிறக்க சுட்டி
Tamil computer Tips-3
MP3 கோப்புகளுக்கு படங்களை இணைக்க
மென்பொருளை தரவிறக்க சுட்டி
Tamil computer Tips-2
ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து கணினியில் பதிவிறக்கம் செய்ய
Tamil computer Tips-1
தளத்திற்கான சுட்டி 1
தளத்திற்கான சுட்டி 2