WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Saturday, 2 May 2015

தினை (இனிப்பு) பொங்கல்

தேவையான பொருட்கள்:

தினை அரிசி -250 கி
பாசிபருப்பு -100 கி
வெல்லம் -200 கி
நெய் -50 கி
முந்திரி -10 கி
திராட்சை -10 கி
ஏலக்காய் தூள் -2 சிட்டிகை
சுக்கு தூள் -1 சிட்டிகை

செய்முறை:

1 லிட்டர் நீரை கொதிக்க விட்டு அதில் ஊற வைத்த பாசிபருப்பை வெகவிடவும்,பாசிபருப்பு பாதி வெந்த்தும் அதனுடன் நன்றாக, கழுவி கல் அரித்த தினையரிசியை சேர்த்து நன்கு கலக்கவும். தினை அரிசி நன்கு வெந்து வரும் வரை கிளறவும்,பின் அதனுடன் துருவிய வெல்லத்தை சேர்த்து கலக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, திரட்சை சேர்த்து நன்கு கிளரவும்.பின் ஏலக்காய் தூள், சுக்கு தூள் சேர்த்து கொள்ளவும்.
சுவையும், சத்தும் நிறைந்த தினை இனிப்பு பொங்கல் தயார்.

ஹார்லிக்ஸ், காம்ப்ளான், பூஸ்ட், போர்ன்விட்டா வாங்குவதற்க்கு


அரை கிலோ கம்பு ,
அரை கிலோ இருங்கசோளம்,
கால் கிலோ வரவரிசி ,
ஒரு ஸ்பூனு உப்பு மூணு அச்சு வெள்ளம் ,
கொஞ்சம் பனைவெள்ளம் ஒண்ணா அறைச்சு ,

தினமும் ஒரு ஸ்பூனு காச்சுன பசும்பாலுல ,
கலந்து குடிச்சா ,

இந்த உலகத்துலயே இதை விட வேற பெரிய சத்து இல்ல..!

கவுனி அரிசி (இனிப்பு) பொங்கல்

தேவையான பொருட்கள் :
கவுனி அரிசி-2 கப்
நெய்- தேவையான அளவு
கருப்பட்டி தூள் -ஒன்றரை கப்
தேங்காய் துருவல்-கால் கப்

செய்முறை :

கவுனி அரிசியை நன்றாக சுத்தம் செய்து இரு முறை அலசி முதல் நாள் மதியமே ஊற வைத்து விட வேண்டும்.மறுநாள் மாலை அதை களைந்து எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் அரிசியைப் போட்டு 2 கப் அரிசிக்கு 4 கப் அதிகமாகவே தண்ணீர் விட வேண்டும்.ஏனென்றால் இந்த வகை அரிசி மட்டும் அவ்வளவு சீக்கிரத்தில் வேகாது.7,8 விசில்களுக்கு கூடவே வேக விட வேண்டும்.

விசில் அடங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு கீழே இறக்கி வைக்க வேண்டும்.ஸ்டீம் போனதும் திறக்க வேண்டும். (நல்ல மணத்துடன் வாசம் வரும்)முக்கால் பதமாக குழைந்திருக்க வேண்டும்.கையால் எடுத்து பார்க்கும் போதே நசுங்கும் பதமாக இருக்கும்.அப்படி வேகவில்லை என்றால் கூட 2 கப் தண்ணீர் விட்டு மறுபடியும் 5 விசில்களுக்கு வேக விட்டு எடுக்கலாம். தப்பில்லை.

இப்பொழுது கரண்டியால் கிளரிக் கொண்டே அதில் நெய்,கருப்பட்டி தூள் சேர்த்துக் கிளற வேண்டும்.கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்துக்கவும்.சூடாக பறிமாறவும்.

குறிப்பு :
கண்டிப்பாக முதல் நாளே அரிசியை ஊற வைக்க வேண்டும்.
சரியான பதம் வரும் வரை வேக விட வேண்டும்.
இதன் வாசமே சாப்பிட ஆவலை உண்டாக்கும்.

சூடாக பறிமாறினால் தான் நெய் கலவை உறையாது.

கம்பு பொங்கல்

தேவையான பொருட்கள்:

கம்பு - 100 கிராம்,
வெல்லம் - 200 கிராம், நெய் - 1 டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
முந்திரி, பாதாம் - சிறிதளவு.

செய்முறை:

கம்பை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் கழுவி, தண்ணீரை வடித்து, மிக்சியில் ஒரு சுற்று ஓட விடவும். ரொம்பவும் நைசாக அரைக்கக் கூடாது. பிறகு அதில் 3 பங்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து பிரஷர் குக்கரில் 5 விசில் வைத்தெடுக்கவும். வெல்லத்தில் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி, பொங்கலில் சேர்க்கவும். நெய்யில் முந்திரி, பாதாம் வறுத்துச் சேர்த்துப் பரிமாறவும்.

1. கம்புக்கு இயல்பிலேயே ஒரு நல்ல மணம் உண்டு என்பதால், வாசனைக்காக ஏலக்காய் கூடத் தேவையில்லை.
2. நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து என எல்லாம் நிறைந்தது இது.

தூதுவளை (Solanum trilobatum)

தூதுவளை (Solanum trilobatum)
பிணிபல நீக்கும் கற்பக மூலிகை தூதுவளை.
சித்தர்கள் உடலை கற்பமாக்க கற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர். மூலிகையில் உள்ள தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோ அல்லது உலோக உபரச உப்பு பொருட்களை சேர்த்தோ நன்கு பக்குவப்படுத்திபத்தியம் மேற்கொண்டு ஒரு மண்டலம்(நாட்கள்) சாப்பிட்டு வந்தால் பிணியில்லாப் பெருவாழ்வு வாழலாம் உடலை கற்பமாக்கும் இம் மூலிகைகள்தான் கற்ப மூலிகைகள்.
தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் காயகற்ப மருந்துகள் சிறப்பானதாகும்.
காயகற்பம் = காயம்+கற்பம். காயம் என்றால் உடல். கற்பம் என்றால் உடலை நோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து.
நரை, திரை, மூப்பு, பிணிநீக்கி, வயதுக்கு தகுந்தவாறு ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவைத்து நீண்டநாள் வாழச் செய்வது கற்பமாகும்
தூதுவளை ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும். இதன் இலை கரும்பச்சை நிறமானது. பூ ஊதா நிறமானது. சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும். இதன் கொடியிலும் இலையிலும் கூரிய முட்கள் காணப்படும். தூதுவளை இலை மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது.
ச‌ளி ‌பிடி‌ப்பதா‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு உட‌ல் உபாதைக‌ளி‌ல் இருமலு‌ம் ஒ‌ன்று. ச‌ளி போனாலு‌ம் இரும‌ல் போகாம‌ல் பாடு படு‌த்து‌ம். இருமலை‌ப் போ‌க்க எ‌ளிதான வ‌ழி உ‌ள்ளது. தூதுவளை‌‌ இலையை 4 அ‌ல்லது 5 எடு‌த்து அத‌ன் மு‌ட்களை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு கழு‌வி‌க் கொ‌ள்ளவு‌ம். இலை‌க்கு‌ள் 4 அ‌ல்லது 5 ‌மிளகு வை‌த்து வெ‌ற்‌றிலை‌ப் போ‌ல் மடி‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிட இர‌ண்டே நா‌ளி‌ல் மா‌ர்‌பு‌ச் ச‌ளி போ‌ய், தொட‌ர்‌ந்து வ‌ந்த கு‌‌த்த‌ல் இருமலு‌ம் காணாம‌ல் போகு‌ம்.
தூதுவளையை உளு‌த்த‌ம் பரு‌ப்பு, பு‌ளி வை‌த்து துவைய‌ல் செ‌ய்து‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். ச‌ளி இ‌ந்த துவையலை‌ செ‌ய்து கொடு‌த்தா‌ல் எ‌ந்த மரு‌ந்து‌க்கு‌ம் அசராத ச‌ளியு‌ம் கரை‌ந்து காணாம‌ல் போ‌ய் ‌விடு‌ம். தூதுவளை இலை உடலு‌க்கு உஷ‌்ண‌த்தை‌க் கொடு‌க்கு‌ம் எ‌ன்பதா‌ல், சூ‌ட்டு உட‌ம்பு‌க் கார‌ர்க‌ள் அ‌திகமாக சா‌ப்‌பிட‌க் கூடாது.

Related Posts Plugin for WordPress, Blogger...