WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Showing posts with label Health Tips. Show all posts
Showing posts with label Health Tips. Show all posts

Monday 18 May 2015

சூரியன் வைட்டமின் டி

சூரியன்

வைட்டமின் டி என பொதுவாக சொல்லபட்டாலும் அதில் இரு வகைகள் உண்டு. ஒன்று தாவரங்களில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி2. இன்னொன்று சூரியன் மூலம் நமக்கு கிடைக்கும் வைட்டமின் டி3. இந்த இரண்டையும் ஒப்பிடவே முடியாது. டி2வால் நமக்கு எப்பலனும் கிடையாது. ஆனால் டி3 இருக்கே? அதுமட்டும் ஒரு மருந்தாக கடையில் விற்க்கபட்டால் அதை கண்டுபிடித்தவருக்கு நோபல் பரிசே கிடைக்கும் எனும் அளவுக்கு முக்கிய மருந்து இது

டயபடிஸ் என்பது இப்போது வைட்டமின் டி3 குறைபாட்டால் வருவது என கண்டறிந்து வருகிறார்கள். டைப் 1 டயபடிஸ் ஏன் வருகிறது, எதற்கு வருகிறது என புரியாமல் முழித்தார்கள். ஆனால் குழந்தை பிறந்தவுடன் அதை மதியம் வெயிலில் காட்டி எடுத்தால் அக்குழந்தைக்கு டைப் 1 டயபடிஸ் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. அதேபோல பிள்ளையின் தாய்க்கு வைட்டமின் டி3 பற்றாகுறை இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு டைப்1 டயபடிஸ் வரும் வாய்ப்பும் அதிகம்.

இது குறித்து பின்லாந்தில் ஒரு ஆய்வு நடத்தபட்டது. பின்லாந்து மிக குளிரான நாடு. சூரியன் அடிக்கடி எட்டிபார்க்காத தேசம். இங்கே தான் உலகிலேயே அதிக அளவில் டைப் 1 டயபடிஸ் இருக்கிறது. 1960ல் குழந்தைகளுக்கு தினம் 2000 ஐயு அளவு டி3 வைட்டமின் கொடுக்க பரிந்துரை செய்யபட்டது. 30 வருடம் கழித்து மறுஆய்வு செய்ததில் டைப்1 டயபடிஸ் வந்த குழந்தைகளின் தாய்மார்கள் பலரும் அவர்களுக்கு வைட்டமின் டி3 சப்ளிமெண்ட் கொடுக்கவேண்டும் என்பதே தமக்கு தெரியாது எனகூறீனார்கள்.

அதேசமயம் டி3 வைட்டமின் டைப் 1 டயபடிஸ் வராமல் தடுக்குமே ஒழிய, வந்த டைப் 1 டயபடிஸை குணபடுத்தாது. ஆக டைப்1 வராமல் தடுக்க வைட்டமின் டி3 மிக, மிக அவசியம்,..பிள்ளைக்கும், தாய்க்கும்.

சூரிய ஒளி நம் தோலில் படுகையில் நம் தோல் அதை வைத்து டி3 வைட்டமினை தயாரிக்கிறது. ஆனால் மருந்து, மாத்திரையில் கிடைக்கும் வைட்டமின் டி3க்கும் நம் உடல் உற்பத்தி செய்யும் டி3க்கும் இடையே வேறுபாடு உள்ளது. டி3 என்பது கொழுப்பில் கரையும் வைட்டமின். ஆக டி3 மாத்திரை எடுத்தால் அதனுடன் உறைகொழுப்பும் சேர்த்து எடுத்தால் தான் அது உடலில் சேரும். ஆனால் சூரிய ஒளியால் கிடைக்கும் டி3க்கு இச்சிக்கல் எல்லாம் இல்லை. உடல் நேரடியாக அதை ஹார்மோனாகவே தயாரிக்கிறது. அதனால் மருத்துவர்கள் இதை "சூரிய ஹார்மோன்" என அழைக்கிறார்கள். டி3 ஹார்மோன் தய்ராய்டு ஹார்மோன், டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோன் போல உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் மிக அவசியமான ஹார்மோன். அது நம் உடலில் சேர உறைகொழுப்பு எல்லாம் அவசியமில்லை.

கொழுப்பில் கரையும் ஹார்மோன் என்பதால் டி3 அளவுகள் அதிகரித்தால் அது சிறுநீரில் கலந்து வெளியே வந்துவிடாது. ஆக ஓவர்டோஸ் ஆகும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் சூரிய ஒளியால் கிடைக்கும் டி3ல் இப்பிரச்சனையும் இல்லை. நம் உடலுக்கு போதுமான அளவு டி3 கிடைத்தவுடன் உடல் தானாக டி3யை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடும்.

டி3 கால்ஷியம் மேலாண்மை மற்றும் க்ளுகோஸ் மேலாண்மையில் பெரும்பங்கு வகிக்கிறது. கால்ஷியம் இருந்தால் எலும்புகள் வலுப்பெறும் என முன்பு நம்பினார்கள். ஆனால் டி3 குறைபாடு இருந்தால் அதன்பின் நீங்கள் லிட்டர் லிட்டராக பால் குடித்தாலும் அதனால் பலனில்லை. பாலில் உள்ள கால்ஷியம் முழுக்க எலும்புகள், பற்களில் சென்று சேராமல் கிட்னி, இதயம் என படிந்துவிடுவதால் எலும்புகள் பலமிழந்து ஆத்ரைட்டிஸ், ஒஸ்டிரியோபொசிஸ் வரும்.

ஒருவருக்கு மாரடைப்பு ரிஸ்க் வருகிறதா என்பதை எப்படி அறிவது? கால்ஷியம் ஸ்கான் எடுத்தால் போதும். இதயநரம்பு சுவர்களில் கால்ஷியம் படிந்தால் அவருக்கு மாரடைப்பு வரும் என அறியலாம். ஆக ஆச்டிரியோபொசிஸ் சொசைட்டி இப்பல்லாம் "ஆச்டிரியோபொசிஸ் வராமல் இருக்க பால் குடி" என சொல்வதில்லை. மக்னிசியம், டி3, பி6 எடு எனத்தான் சொல்லிவருகிறது. இவை மூன்றும் இருந்தால் குறைந்த அளவு கால்ஷியம் எடுத்தாலும் நம் எலும்புகள் பலமாக இருக்கும். ஆதிமனிதன் பாலை குடித்ததே கிடையாது. அவனுக்கு ஏன் எலும்புகள் உறுதியாக இருந்தன? நமக்கு ஏன் இல்லை? டி3, மக்னிசியம், பி6 எனும் மும்மூர்த்திகளே இதற்கு காரணம்.

க்ளுகோஸ் மேலாண்மைக்கும் டி3 அவசியம் என்பதால் டி3 பற்றாகுறை டைப்1, டைப்2 என டயபடிஸ் வருவதில் பெரும்பங்கு வகிக்கிறது. ஜெர்மனியில் நிகழ்ந்த ஆய்வு ஒன்றில் டி3 வைட்டமினை கொடுத்து எடை குறையுமா என ஆய்வு செய்ததில் ஆய்வாளர்களே எதிர்பாராவிதமாக டி3 உட்கொண்ட ஆண்களுக்கு ஆண்மைதன்மையை அதிகரிக்கும் டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோனும் கணிசமாக அதிகரித்தது. ஆக ஆண்மைகுறைபாட்டுக்கும் டி3 அருமருந்து.

மற்றபடி டி3யின் பெருமைகளை முழுக்க விவரிப்பது சாத்தியமே இல்லை..ஆயிரம் நாவு படைத்த ஆதிசேஷனால் மட்டுமே அதைசெய்ய முடியுமே ஒழிய சாதாரண மனிதர்களான நம்மால் முடியாது. நாம் அடிப்படையில் ஆதிபகவனான சூரியனை நம்பி இருக்கும் உயிரினம். சூரியன் தன் பேரருளை நமக்கு டி3 மூலம் வழங்குகிறது.

டி3 நமக்கு முழுமையாக கிட்ட

ஆன்Dராய்டில் "டி மைன்டர்" எனும் ஆப்பை டவுன்லோடு செய்யுங்கள். உங்கள் ஊரில் எந்தெந்த சமயம் சூரிய ஒளியில் டி3 கிடைக்கும் என்பதை காட்டும்

சூரிய கதிர்களில் இருவகை புற ஊதா கதிர்கள் உண்டு. அல்ட்ராவயலட் ஏ, பி என. இதில் உச்சிவெயில் சமயம் இருக்கும் பி கதிரே நமக்கு டி3யை அள்ளிவழங்கும் அன்னதாதா. அல்ட்ராவயலட் ஏவால் பெரிதாக பலனில்லை. டி மைன்டரில் காலை 9 மணிக்கு வைட்டமின் டி கிடைக்கும் என கூறபட்டாலும் அதை நம்பவேண்டாம். உச்சிவெயிலில் 10 நிமிடம் நிற்பதே போதுமானது. அப்படி நிற்கையில்:

தலைக்கு தொப்பி அணியுங்கள். வெறும் வயிற்றில், தன்ணிகூட குடிக்காமல் சூரியனை பார்த்தபடி நின்று மயக்கம் போட்டுவிழுந்து பழியை என் மேல் போடவேண்டாம்

நிழலில் அமர்ந்து கை, காலை மட்டுமாவது காட்டலாம்.

நேரடி தோலில் சூரிய வெளிச்சம் படவேண்டும். கண்ணாடிக்கு பின்னிருந்து காட்டுவது கான்சரை தான் வரவழைக்கும்

எத்தனை தோல் எக்ஸ்போஸ் ஆகிறதோ அந்த அளவு டி3 உற்பத்தி கனஜோராக நடக்கும்

வைட்டமின் டியுடன், வைட்டமின் ஏ அளவுகளும் சரியாக இருப்பது அவசியம். வாரம் 1 முறை ஈரல் சாப்பிடுங்கள். தினம் முட்டை சாப்பிடுங்கள்.

குத்து மதிப்பாக சொல்வதெனில் தொப்பி, அரைகை சட்டை, ஆப்டிராயர் அணிந்திருந்தால் 25 நிமிடம் வெயிலில் நின்றால் போதும். சட்டை இல்லையெனில் 15 நிமிடம். சும்மா ஒரே நிமிடம் நின்றால் கடையில் விற்கும் டி3 மாத்திரையில் இருக்கும் அளவு டி3 கிடைத்துவிடும்....

அதிகாலை சூரிய ஒளி, மாலை சூரிய ஒளி இதமாக இருந்தாலும் அதனால் எப்பலனும் கிடையாது. அவற்றை தவிர்க்கவும்

என்ன டி3யை கனஜோராக வரவேற்க தயாராகிவிட்டீர்களா?

பசியின்றி சோர்வாக இருந்தால் பசி ஏற்பட என்ன சாப்பிடலாம்?

பசியின்றி சோர்வாக
இருந்தால் பசி ஏற்பட
என்ன சாப்பிடலாம்?.
பசியில்லாமல்
சோர்வாக இருந்தால்
சாப்பிடாமல்
பட்டினி கிடப்பதே
நல்லது. நமது
உடலின்
சக்தியானது நமது
உடலை இயக்காமல்
வேலை நிறுத்தம்
செய்யவில்லை. உள்
உறுப்புக்களை
பழுதுபார்க்கவும்
கழிவுகளை
வெளியேற்றவும்
தன் சக்தியை
பயன்படுத்துகிறத
ு. நன்றாக ஓய்வு
எடுங்கள். தாகம்
எடுத்தால் நீர்
அருந்துங்கள் .
மலச்சிக்கல்
இருந்தால் எனிமா
எடுத்துக்
கொள்ளுங்கள். பசி
எடுக்க
ஆரம்பித்ததும்
பழங்களை மட்டும்
உணவாக
சாப்பிடுங்கள்.
சிறிது சிறிதாக
தினசரி உணவிற்கு
வாருங்கள்.
பசிக்காமல்
சாப்பிடும் உணவு
ருசிக்காது. நாக்கே
வேண்டாமென்கிறது
. சிலருக்கு
வாய்க்கசப்பு
ஏற்படும். எந்த
உணவும் கசப்பு
சுவையுடனேயே
இருக்கும்.
அதையும் தாண்டி
சாப்பிட்டால்
செரிமானக்கோளாறு
ஏற்படும்.
நோய்களை
வரவேற்பதாக
அமைந்துவிடும்.
நீங்கள் கட்டாயம்
வேலை செய்தே
தீரவேண்டுமெனில்
வேலை செய்ய
துவங்கினால்
உடலின் சக்தி
பழுதுபார்க்கும்
வேலையை
நிறுத்திவிட்டு
உங்கள் வேலைக்கு
உதவியாக வந்து
சேரும். பசி
எடுக்கும். ஆனால்
நீங்கள் உங்கள்
வேலையை
முடித்துவிட்டோ
அல்லது
எப்படியேனும்
உடலுக்கு ஓய்வை
கொடுத்து
விரதத்லை
அனுசரிக்க
வேண்டும். இந்த
அறிகுறிகள்
சாதாரணமாக
தோன்றினாலும்
பின்னால் காய்ச்சல்
பேதி போன்ற
தொந்தரவுகள்
ஏற்பட்டு கட்டாய
ஓய்வுக்கு
ஆளாக்கிவிடும்.
இது வேறு
பசியுடன் சோர்வாய்
இருப்பது வேறு.
பசியின்றி
சுறுசுறுப்புடன்
இருப்பது வேறு.
எனவே உடலின்
மொழியை புரிந்து
கொண்டு அதற்க்கு
ஒத்துழைப்போம்.

சளி, சைனஸ், ஆஸ்துமா, அடுக்குத் தும்மல் - எளிய தீர்வு (அக்குபிரஷர்):

ஒவ்வாமை எனப்படும் அலர்ஜிகளில் அதிகமாக நமக்கு மன உளைச்சல் தரக் கூடியது கண் மற்றும் மூக்கு சம்பந்தமான அலர்ஜிகளால் தான். கோடை காலத்திலும் சளி, அடுக்குத் தும்மல் தொல்லைகளால் ஏராளமானோர் அவதிப்படுப்படுகிறார்கள். சைனஸ்களின் சிற்றறைகளில் இருந்து வெளியே வர வேண்டிய நீர், சளியாக மாறி, கட்டியாக அடைத்துக் கொள்வதால், மூக்கடைப்பு, மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. சுவாச மண்டலம் பாதிக்கப்படுகிறது. நமது தவறான உணவுப் பழக்கம், சுற்றுப்புற சூழ்நிலையுள்ள மாசு, பூக்களின் மகரந்தம், மின் விசிறி, ஏசியின் பில்டரில்களில் படியும் தூசி, நாய், பூனை உள்ளிட்ட வீட்டு செல்லப் பிராணிகள் எச்சம் மற்றும் முடி, தரமற்ற ஐஸ்கிரீம் போன்றவற்றால் அலர்ஜி, சைனஸ் பாதிப்பு வர முக்கிய காரணங்களாக அமைகின்றன. காது, மூக்கு, தொண்டைக்கும் தொடர்புண்டு. இதனால் ஒன்றில் ஏதாவது பாதிப்பு வந்தாலும், அடுத்தடுத்த பகுதிகளையும் பாதிக்கும். மூக்குத் தண்டு வளைவு இருந்தாலும், மூக்கு, தொண்டைக்கு மேல் உள்ள, 'அடினாய்டு' அடைப்பு, வீக்கத்தினாலும் (குறிப்பாக குழந்தைகளுக்கு) சைனஸ் பிரச்னை ஏற்படும். பல் சொத்தையும் சைனஸ் தொல்லைகளை உண்டாக்கலாம். பற்களின் வேர்களின் அருகில் தான் மாக்ஸீலரி சைனஸ் அறைகள் உள்ளன. தீவிரமான, ஆழமான பல் சொத்தை வேர் வரை பரவும் போது, பக்கத்தில் இருக்கும் சைனஸ் அறைகளையும் தாக்கும். தூக்கமின்மை, தலைபாரம், தலைவலி, கண்களை சுற்றியும் வீக்கம் வலி, கண்களின் பின்பக்கம், தலையின் முன்புறம், பின்புறம் வலி, பல்வலி, மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், அடுக்குத் தும்மல், தொண்டை வலி, ருசி உணரமுடியத நிலை, தலைக்கு குளிக்கும் அன்று கட்டாயம் தலைவலி, குனிந்தாலும், நிமிர்ந்தாலும் தலை விண் விண் என்று தெறிக்கிற வலி, இரண்டு மூன்றுமுறை பல்துலக்கினாலும் வாயில் தொடர்ந்து துர்நாற்றம் வருதல் ஆகியவை நோயின் பாதிப்புகளாக அமைகின்றன. இப்படியான பலவித தொல்லைகளை தரும் அலர்ஜிகள் வராமல் தடுக்கவும், வந்திருந்தால் குணமாக்கவும் நம் உணவில் பழங்கள், முருங்கைக்காய், முள்ளங்கி, பூண்டு அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிரிட்ஜில் வைத்த குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், மைதாவால் ஆன உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மது, புகை இரண்டும் அறவே கூடாது. அலர்ஜி உண்டாக்கும் தூசி, கொசுவை விரட்ட பயன்படும் வத்திகள் கூடாது. பகலில் தூங்கக்கூடாது. இவ்விதமான அலர்ஜிகளில் இருந்து விடுபட அக்குபிரஷர் முறையில் மிக எளிமையான வழி இருக்கிறது... கைகளில் இருக்கும் பத்து விரல்களையும் சீராக அழுத்தம் கொடுக்க வேண்டும். காலை, மாலை என இரண்டு வேளையும் பத்து நிமிடங்கள் அழுத்தம் கொடுத்து வர சளி, சைனஸ், ஆஸ்துமா, அடுக்குத் தும்மல் தொல்லைகளில் இருந்து வெளி வரலாம். இதை இன்னும் எளிமையாக செய்ய படத்தில் காட்டி இருப்பது போல வளையங்கள் சந்தையில் கிடைக்கும்.. அதனை வாங்கி, அனைத்து விரல்களில் நன்கு பதியும் படியாக நிதானமாக முன்னும் பின்னும் உருட்டுவதன் மூலம் சீரான அழுத்தம் கிடைக்கும். கூடுதல் நலமும் தொல்லைகளில் இருந்தும் நிரந்தர தீர்வும் காணலாம். கோபம், பரபரப்பு, கவலைகளை தவிர்த்து ‘கபாலபாதி’ மட்டும் சரியான முறையில் செய்து வந்தால் சைனஸ் காணாமல் போவது மட்டுமல்லாமல், எல்லா விதமான சளி தொந்தரவுகளில் இருந்தும் விடுபட முடியும்.

வயிற்றுப்புண், மலச்சிக்கல் போக்கும் திராட்சை!

திராட்சைப்பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச ஒண்ணுதான். ஆனா அதுக்குள்ள மருத்துவக்குணம் சிலபேருக்கு தெரிஞ்சிருக்கும், சில பேருக்கு தெரியுறதுக்கு வாய்ப்பில்லை. தெரிஞ்சாலும், தெரியலைன்னாலும் ஏதோ பழம் சாப்பிடணும்னு சாப்பிடுவோம், அவ்வளவுதான்.

அல்சர், அல்சர்னு அவதிப்படுறவங்களுக்கு இந்த திராட்சை அற்புதமான மருந்து. காலையில எழுந்திரிச்சதும் வெறும் திராட்சை ஜூஸ் (வீட்டுல தயாரிச்சது) குடிச்சி பாருங்க... அல்சருக்கே அல்சர் வந்துரும். அதேமாதிரி தலைசுற்றல், மலச்சிக்கல், கை - கால் எரிச்சல் உள்ளவங்க திராட்சையை சாப்பிட்டு வந்தா கைமேல் பலன் கிடைக்கும். நிறைய நோய்களுக்கு மலச்சிக்கல்தான் காரணமாயிருக்கு.

மலச்சிக்கல் போகணும்னா அப்பப்போ காய்ஞ்ச திராட்சை சாப்பிடுங்க. இதே பிரச்சினை குழந்தைகளுக்கு இருந்தா கொஞ்சம் தண்ணியில காய்ஞ்ச திராட்சையை ராத்திரி ஊறப்போட்டுட்டு காலைல எழுந்திரிச்சதும் அதை நசுக்கி அந்த சாறை குடுங்க, பிரச்சினை சரியாயிரும். இது எத்தனை வயசு குழந்தைக்கும் கொடுக்கலாம். குழந்தை உண்டானவங்களுக்கு வாய்க்குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும். அப்போ திராட்சை சாப்பிட்டா பலன் கிடைக்கும்.

எடை குறைவா இருக்குறவங்க, உடம்புல சூடு அதிகம் உள்ளவங்களும் கண்ணை மூடிக்கிட்டு திராட்சையை சாப்பிடுங்க. இந்த திராட்சை புற்றுநோயைக்கூட சரிப்படுத்தும்னு ஆராய்ச்சியில நிரூபிச்சிருக்காங்க. எல்லாம் நம்ம கையிலதான் இருக்கு. முக்கியமா விதை உள்ள கருப்பு திராட்சை எல்லா திராட்சைகளையும்விட விஷேசமானது.

Thanks-VikatanEmegazine

குளிர்ச்சி தரும் விளக்கெண்ணை

தமிழ்நாட்டுக் கிராமப்புறங்களில் பரவலாகப் பயிரிடப்படும் தாவரம் ஆமணக்கு. கொட்டைமுத்துச் செடி என்றும் இது அழைக்கப்படும்.

குத்துச் செடியாக வளரும் இதன் இலைகள் முரடாகவும் சற்று அகலமாகவும் இருக்கும். இலைகளின் விளிம்பு சற்றுக் கூர்மையாக இருக்கும். வளமற்ற மண்ணிலும் வளர்ந்து பலன் கொடுக்கும் ஆமணக்கின் தண்டுப்பகுதி கூரை வேயவும், எரி பொருளாகவும் பயன்படுகின்றது.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்

விதைகளில் ஆவியாகாத எண்ணெய் உள்ளது. இதில் கிளைசைரைடுகள், புரதம் மற்றும் ஆல்கலாய்டுகள் உள்ளன. ஆமணக்கு இலைகள், வேர்ப்பட்டை மற்றும் விதைகள் மருத்துவ பயன் உடையவை.

ஆமணக்கு வேலி

மிளகாய்ப் பயிரின் பாத்திகளிலும் ஆமணக்குச் செடியை வளர்ப்பர். ஆமணக்குச் செடியின் இலைகள் தரும் நிழல், கடும் வெயிலிலிருந்து மிளகாய்ச் செடியைப் பாதுகாக்கும் என்பதன் அடிப்படையில் கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகாய் போன்றவை பயிரிடும்போது, வரப்பைச் சுற்றிலும் ஆமணக்கு முத்துகளை ஊன்றிவைப்பர். காற்றைத் தடுக்கும் வேலி போல் இது அமையும்.

தோலில் கட்டி மற்றும் புண்கள் ஏற்பட்டால் அவற்றின் மீது ஆமணக்கு செடியின் இலைகளை வதக்கி கட்டினால் அவை உடையும், வலி குறையும். வேர்ப்பட்டை பேதி மருந்தாகவும், தோல் வியாதி மருந்தாகவும் பயன்படும்.

கொட்டைமுத்து, காய்கள்

ஆமணக்குச் செடியின் முக்கியப் பயன்பாடாக அமைவது இதன் காய்கள். பச்சை நிறமாக இருக்கும் காய்கள் முற்றியதும் வெளிறிய வெள்ளை நிறத்துக்கு மாறிவிடும். ஆங்காங்கே கூர்மையாக முள் போன்று இருக்கும். வெயிலில் காயப்போட்டால் காய்கள் வெடித்துச் சிதறி விதைகள் வெளிப்படும்.

இவ்விதைகளையே 'ஆமணக்கு முத்து' என்பர். விதைகள் நச்சுச்தன்மை கொண்டவை. இரண்டு விதைகளை தின்றால் கூட மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இதிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்பட்ட பின்னர் நச்சு கலப்பதில்லை.

குளிர்ச்சி தரும் விளக்கெண்ணெய்

விதைகளில் இருந்து எடுக்கப்படும் விளக்கெண்ணெய் பேதியைத் தூண்டும். நாலாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இதன் மருத்துவப்பயன் தெரியவந்துள்ளது. குழந்தைகளை அடிக்கடி இந்த எண்ணெயை குடிக்கச்செய்து வயிற்றினை சுத்தமாக வைப்பர். குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு மார்பகங்களின் மீது விளக்கெண்ணெயை தேய்த்து விட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

குளிர்ச்சியைத் தரும் ஆற்றல் விளக்கெண்ணெய்க்கு உண்டு. இதனால் சிறு குழந்தைகளின் தலையில் விளக்கெண்ணெயைத் தடவுவர். வெயிலில் அதிக நேரம் நடந்து சென்றாலோ, நின்று பணியாற்றினாலோ ஏற்படும் சூட்டைத் தணிக்க உள்ளங்காலில் விளக்கெண்ணெயைத் தடவிக்கொண்டு உறங்குவர். சூட்டினால் ஏற்படும் வயிற்று வலியைப் போக்க அடிவயிற்றில் விளக்கெண்ணெயைத் தடவுவர்.

சாதாரண மலச்சிக்கலுக்கு இரவில் உறங்கப்போகும் முன்னர் நாட்டு வாழைப்பழத்தை விளக்கெண்ணெயில் முக்கி உண்பர். குடல் சுத்திகரிப்புக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் குடிப்பர்.

பண்டைய பயன்பாடு

ஆமணக்கு முத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டது. விளக்கெரிக்க இவ்வெண்ணெயைப் பயன்படுத்தியதால் விளக்கெண்ணெய் என்று பெயர் வந்ததாக பண்டித அயோத்திதாசர் என்பவர் தெரிவித்துள்ளார். மேலும் சமண முனிவர்கள் விளக்கெண்ணெயின் பயன்பாட்டைக் கண்டுபிடித்ததாகக் குறிப்பிடுகிறார்.

இதன் வழவழப்பான தன்மையினால் மசகு எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகிறது. மாட்டு வண்டிகளில் சக்கரங்கள் சுழலும்போது அச்சுப் பகுதியில் ஏற்படும் உராய்வைத் தடுக்க, வைக்கோலை எரித்து அதன் சாம்பலை விளக்கெண்ணெயில் கலந்து மைபோலாக்கி அச்சுப் பகுதியில் தடவுவர். இது நம் முன்னோர்கள் கண்டுபிடித்த 'கிரீஸ்' ஆகும்.

பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்!

‘பாய்’ என்ற இந்த வார்த்தைக்குப்பின்னால் விதவிதமான அருமையான தகவல்கள் இருக்கின்றன.

மூலிகையின் பெயர் -: கோரை.
தாவரப் பெயர் -: CYPERUS ROTUNDUS.
தாவரக் குடும்பப் பெயர் -: CYPERACEAE.
பயன்தரும் பாகங்கள் -: கிழங்கு.
வேறு பெயர்கள் -: முத்தக்காசு, எருவை, கோரா, கோரைக்கிழங்கு மற்றும் ஆங்கிலத்தில் Coco-grass, nut sedge, nut grass, purple nut sedge, red nut sedge முதலியன.
இதில் சிறு கோரை, பெருங்கோரை என இரு வகையுண்டு.

மருத்துவப்பயன்கள்:

கோரைக்கிழங்கு சிறுநீர், வியர்வை ஆகியவற்றைப் பெருக்குதல், உடல் பருமனைக் குறைத்து தாது வெப்பு அகற்றி பலமுண்டாக்குதல், இதயம், மூளை, வயித்துக்கு சக்தி, மாதவிடாய் தொல்லை, காச்சல், வாயுத்தொல்லை குணமடையச் செய்தல், கர்பப்பை கோளாறு குணப்படுத்தல், மார்பு வளர்ச்சி மற்றும் தாய் பால் சுத்தம் செய்தல் ஆகியவை செய்யும். இதன் தாயகம் ஆப்பிரிக்கா, தென் ஆசியா, தென் மற்றும் மத்திய ஐரோப்பா, பிரான்ஸ், சைனா மற்றும் இந்தியாவுக்குப் பரவிற்று. தரைமட்டத்திலிருந்தே தோன்றியுள்ள தட்டையான நீண்ட இலைகளையுடையது. முட்டை வடிவ சிறு கிழங்குகளைப் பெற்றிருக்கும். வளர்ந்த் உச்சியில் மூன்று பிறிவாக சிறு பூக்கள் கொண்டிருக்கும். இக்கிழங்குகளே மருத்துவப் பயனுடையது. பெரும் கோரைக்குக் கிழங்குள் கிடையாது வேர் மட்டும். மணற்பாங்கான இடம், வயல் மற்றும் வளமான நிலம் மற்றும் பயிர்களுக்கு இடையே களையாகவும் வளர்ந்திருக்கும். பன்றிகள் இதன் கிழங்கை விரும்பித் தின்னும். கிழங்குகள் வெளிப்பாகம் கறுப்பாக இருக்கும். உட்புறம் வெள்ளையாக இருக்கும். இது கசப்புத் தன்மையுடையது. ஆனால் நறுமணமாக இருக்கும். பெருங்கோரையை வயல்களில் வளர்த்திப் பெரிதாக வளர்ந்த பின் அதை பாயாகப் பின்னுவார்கள். கோரையின் சல்லி வேர்கள் பக்கவாட்டில் பரவி அதிகமாக உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும், விதை மூலமும் உற்பத்தியாகும். (நன்றி : மூலிகை வளம் தளம் ) கோரை புற்களை கொண்டு பாய் தயாரிக்கின்றனர், அது மட்டுமே மருத்துவ குணம் கொண்டதா என்றால் இல்லை…..

அந்த காலத்தில் அதை நெய்வதற்கு இருந்த நூல் கூட மருத்துவ குணம் கொண்டது தெரியுமா ? ஊரைச்சுற்றி உள்ள கற்றாழை வேலிகளில் உள்ள கற்றாழைக் குருத்துகளை ஒடித்து வந்து, அதை ஒரு பலகை மற்றும் ‘தரஸ்கு’ (இருபுறமும் கைப்பிடியுள்ள கூரான நீள்வசமான அரிவாள்) என்ற கருவியில் இழைத்து எடுத்து அதில் இருந்து ‘மறல்’ எடுப்பார்கள். இது கிழவியின் நரைத்த தலை முடி மாதிரி நீளமாக இருக்கும். இந்த மறலைப்பிரித்த பின் அதையே கொட்டையாக (முடியாக) கட்டி அதிலிருந்து ‘கதிர்’ என்ற கருவி மூலம் நூல் நூற்பார்கள். இப்போது பாய் நெய்யத் தேவையான மூலப்பொருள்களான கோரையும், நூலும் தயார்.

வீட்டில் சாணம் மெழுகிய வெற்றுத் தரையில் படுத்து உறங்கிய ஆதிமனிதன், சற்று சுகமாகப் படுத்து உறங்க வேண்டி பாய்களைப் பின்ன ஆரம்பித்தான்.

முதன்முதலில் தென்னை ஓலையில் இருந்துதான் பாய்களைத் தயாரித்தார்கள். முற்றாத இளம் தென்னை ஓலையை வெட்டி எடுத்து, நடுவில் உள்ள தண்டு போன்ற மட்டையை இரண்டாக வெட்டிப்பிளந்துவிட்டால் மட்டையுடன் கூடிய இரண்டு துண்டு ஓலைகள் கிடைக்கும்.

இரண்டு துண்டுகளில் மட்டைப்பகுதிகளும், வெளிப்புறமாக வரும்படி வைத்து ஓலைகளைப் பின்னினால் நமக்கு தென்னம் பாய் கிடைக்கும்.

இளம்பச்சை (தென்னை) ஓலைகளால் பின்னப்பட்ட இந்தத் தென்னம்பாய் படுப்பதற்கு சுகமாக இருக்கும். குளிர்ச்சியாகவும் இருக்கும்.

இதே போல இளம் பனை ஓலையை வெட்டி, அதையும் மட்டைப்பகுதியில் இரண்டாக வெட்டிப்பிளந்து (முழு ஓலையையும்) விசிறி மாதிரி விரித்து அதன் மேல் மண்ணை அல்லது மணலை அள்ளிப் போட்டு வைத்தால் படுப்பதற்குப் பனை ஓலையால் ஆன இரண்டு பாய்கள் கிடைத்துவிடும்.
ஆட்டுக்கிடையில் காவலுக்கு இருப்பவர்கள் இத்தகைய பனை ஓலையைப் பயன்படுத்துவார்கள். பனையின் குருத்து ஓலையை வெட்டி, அதைப் பக்குவமாக நீரில் நனைய வைத்து ஓலை இதழ்களை மட்டும் கிழித்தெடுத்து ஒருவிதப் பாய்களை முடைவார்கள்.

இந்தப் பனை ஓலைப் பாய்களைச் சுருட்டியும் வைத்துக் கொள்ளலாம். குருத்து ஓலை இலக்குகளால் (இதழ்களால்) நெய்யப்படும் இந்தப் பனை ஓலைப் பாய்களும் படுப்பதற்கு சுகமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.

கொஞ்சம் வசதி வாய்ப்புள்ளவர்கள் தாழை மடல்களால் பின்னப்பட்ட பாய்களில் படுப்பார்கள். இது மெத்தை போன்று படுப்பதற்கு மிகவும் சுகமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். தாழை மடல்களை வெட்டித் தண்ணீரில் ஊறவைத்து, அதை இலக்கு (இதழ்)களாகப் பிரித்து அதிலிருந்து தாழம்பாய்களைப் பின்னுவார்கள்.

நாணல் புல் நீண்டு வளரும். அதை அறுத்து வந்து மிதமாகக் கையை வைத்து, அவைகளைப் பனை நாரால் கோத்து ஒருவிதப் பாயை உருவாக்குவார்கள். இதற்கு நாணல் பாய் என்று பெயர்.

இதே நாணலை வைத்து, மழைக்காலத்தில் நனையாமல்
போட்டுக் கொள்ள ‘கொங்காணி’களையும் இந்த நாணல் தட்டையில் இருந்து தயாரிக்கிறார்கள். நாணல் பாய் மெத்தைபோல் படுப்பதற்கு ‘மெத்,மெத்’ என்று சுகமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.

தொழில்நுட்பம் வளர்ந்த பின்தான் கோரைப்பாய் நெய்தார்கள். ஆற்றோரத்தில் நீரோட்டம் உள்ள இடங்களில் கோரைப்புற்கள் வளர்கின்றன. இந்தக் கோரைகள் முளைத்ததில் இருந்து அறுவடை ஆகும் வரை நீர்ப்பிடிப்பான நிலத்தில் நின்று வளர்வதால், இதிலிருந்து செய்யப்படுகிற பாய்கள் படுப்பதற்கு, சுகமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கின்றன.

இதுவரை, நாம் பார்த்த பாய்கள் எல்லாம், தென்னை, பனை, தாழை, நாணல், கோரைப்புல் போன்ற தாவரங்களால் தயாரிக்கப்பட்டவைதான்.

தாவரங்களில் இருந்து தயாரிக்கப்பட்டதால் இந்தப் பாய்களில் படுத்து எழுந்தால் உடலின் வெப்பம் குறையும். உடல் வலியும் போகும். ஒரு விதத்தில் மறைமுகமான மருத்துவக்குணமாகும் இது.

இன்றைக்கு நமக்கு பன்னாட்டு நுகர் கலாச்சாரத்தால் கிடைக்கிற போம் மெத்தைகள் உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும். உடம்பில் மேலும் அலுப்பை ஏற்படுத்தும்.
மேலே கண்ட பாய்கள் பச்சைத் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதோடு அவையாவும் ஒருவிதை இலைத் தாவரங்கள் என்பதையும் நாம் இங்கு எண்ணிப்பார்க்க வேண்டும். ஒற்றை விதை இலைத்தாவரங்கள் (புல் முதல் பனை வரை) யாவும் குளிர்ச்சியைத் தருவன என்பது அறிவியல் பூர்வமான உண்மையாகும்.

இன்றைக்குப் பாயின் பயன்பாடு நகர்ப்புற வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுக் கொண்டே வருகிறது. பாய் நெசவு என்ற தொழிலும் இன்று இயந்திரமாகிவிட்டதால் வீட்டில் தறிப்போட்டு பாய்களை நெய்து வந்த ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் இன்று வேலை இன்றி தெருவில் நிற்கிறார்கள்.
தென்மாவட்டங்களில் வாழும் இஸ்லாமியர்களே பெரும்பாலும் பாய் நெசவுத்தொழிலைச் செய்து வந்தார்கள். அவர்கள் வாழும் பகுதிகளில் ஆற்றோரம் உள்ள கோரைகளை அறுத்து வந்து முதலில் இரண்டாகக் கீறுவார்கள். இதற்கு சூரிக்கத்தி என்ற இருபுறமும் கூரான கத்தி பயன்படுத்தப்படும். இப்படிக் கீறிய கோரைகளை ‘முடி’களாக (கட்டுகளாக) கட்டி வெயிலில் காய வைப்பார்கள்.

பிறகு அக்கட்டுகளை ஆற்றுநீரில் அல்லது குளத்து நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைப்பார்கள். இப்போது இரண்டாகக் கீறப்பட்ட கோரைகள் சற்று உப்பி இருக்கும். எனவே அதை மீண்டும் இரண்டாக சூரிக்கத்தி வைத்துக் கீறுவார்கள்.
பிறகு அக்கோரைகளை முடிகளாக(கட்டுகளாக) முடிந்து வெயிலில் காய வைப்பார்கள். காய்ந்த கோரைகளை மூன்றடி உயரம், நான்கடி உயரம் என்று உயர அளவுப்படி பிரித்துக் கொள்வார்கள். மொத்தக் கோரையில் பத்தில் ஒரு பங்குக்கோரையைப் பிரித்து எடுத்து அதில் பச்சை, சிவப்பு, மஞ்சள் என்று தனித்தனியாகச் சாயம் ஏற்றிக்கொள்வார்கள்.
ஊரைச்சுற்றி உள்ள கற்றாழை வேலிகளில் உள்ள கற்றாழைக் குருத்துகளை ஒடித்து வந்து, அதை ஒரு பலகை மற்றும் ‘தரஸ்கு’ (இருபுறமும் கைப்பிடியுள்ள கூரான நீள்வசமான அரிவாள்) என்ற கருவியில் இழைத்து எடுத்து அதில் இருந்து ‘மறல்’ எடுப்பார்கள். இது கிழவியின் நரைத்த தலை முடி மாதிரி நீளமாக இருக்கும்.

இந்த மறலைப்பிரித்த பின் அதையே கொட்டையாக (முடியாக) கட்டி அதிலிருந்து ‘கதிர்’ என்ற கருவி மூலம் நூல் நூற்பார்கள். இப்போது பாய் நெய்யத் தேவையான மூலப்பொருள்களான கோரையும், நூலும் தயார். இந்த இரண்டு மூலப் பொருள்களையும் நெசவாளர்கள், இயற்கைத் தாவரங்களில் இருந்து (கோரைப்புல், கற்றாழை) எளிய உழைப்பு மூலம் பெற்றுக் கொண்டார்கள்.

இனி, பாய் நெசவு செய்ய, முக்காலி மிதிபட்டை, அன்னகுழல், குச்சாலி, இழுத்துக்கட்ட கயிறுகள், இருந்து நெசவு செய்யச் சிறிய நீள்வச பெஞ்சுகள் முதலிய எளிய கருவிகள்தான் தேவை.

இப்படித் தென் மாவட்டங்களில் இயற்கையாய்க் கிடைக்கும் தாவர மூலப்பொருள்களில் இருந்து கோரைப்பாய்களும், ஓலைப்பாய்களும், தாழம்பாய்களும் தயாரிக்கப்பட்டன.

பாய்களை இன்று பிளாஸ்டிக் கோரைகளால் இயந்திரங்களைக் கொண்டு தயாரிக்கிறார்கள். இத்தகைய செயற்கை இழைகளால் ஆன பாய்கள் நம் உடல்நலத்திற்கும், தட்பவெப்பத்திற்கும் ஏற்றதல்ல.

‘பாய்’ என்ற உடன் பலரின் நினைவிற்கு பத்தமடைப் பாய்தான் நினைவுக்கு வருகிறது. பத்தமடைப்பாய்கள் மெல்லிய கோரைகளைக் கொண்டும், பருத்தி நூலைக் கொண்டும், கடினமான உழைப்பைக் கொண்டும் முக நுட்பமான வேலைப்பாடுகளுடன், கலையழகுடன் நெய்யப்படுகிறது.
இத்தகைய பத்தமடைப் பாய்கள் இன்று ஆடம்பரப் பொருள்களாகவும் கலைப்படைப்பாகவும் மாறி விட்டது. இப்பாய்களையும் பத்தமடை என்ற ஊரிலும், அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் இஸ்லாமியச் சமுதாயத்தவர்களால் நெய்யப்படுகிறது.

ஓலைகளால் பாய்கள் பின்னப்படும். கோரைகளால் பாய்கள் நெய்யப்படும். (தமிழனின் கலைச் சொல்லாட்சி எவ்வளவு அருமையாக உள்ளது பார்த்தீர்களா…)

பாய் ஓய்வின் குறியீடு, இல்லற இன்பத்தின் அடையாளம். ‘பாய் விரிக்க புன்னை மரமிருக்க’ என்ற பாடல் வரிகளில் காதல் உணர்வுடன் ‘பாய்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தென் மாவட்ட மக்கள் தான் மகளைக் கட்டிக் கொடுக்கும் போது பலவித சீர் செனத்திகளைக் கொடுக்கிறார்கள். அத்தோடு மறக்காமல் ஒரு பாயையும், தலையணையையும் கொடுக்கிறார்கள். மகளை மருமகனுக்குக் கட்டிக் கொடுக்கிறபோது கூடவே பாயையும் கொடுத்து அனுப்புவதில் வாழ்வியல் சார்ந்த உள்அர்த்தம் வாசகர்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

தமிழ்க்கலாச்சாரத்தோடும், பண்பாட்டோடும், இயற்கையோடும் இயைந்த ‘பாய்’ என்ற பயன்பாட்டு அம்சம் நம்மை விட்டு விடைபெற்றுச் சென்றுகொண்டிருக்கிறது.

படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை “மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

கம்பளிப் படுக்கை - குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.
கோரைப்பாய் - உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.
பிரம்பு பாய் - சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.
ஈச்சம்பாய் - வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.
மூங்கில் பாய் - உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.
தாழம்பாய் - வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.
பேரீச்சம்பாய் - வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.
இலவம்பஞ்சு படுக்கை - உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.
மலர்ப்படுக்கை - ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.
இரத்தினக் கம்பளம் - நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

இப்படியும் பயன்படுகிறது பாய்

பனைஓலை பாய் பலசரக்கு வெல்லமண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும்.
மூங்கில்நார் பாய் வீடு,அலுவலகங்களில் தடுப்புசுவர்,மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்.
நாணல்கோரை பாய் மக்கள் பயன்படுத்தும் எளிமையான படுக்கை விரிப்பாகும்.

கோரைப் பாயில் படுத்து உறங்குவது உடல் நலத்திற்கு நல்லதாகும். கோரையினை இரண்டாகக் கிழித்துப் பார்த்தால் அதன் உள்ளே ஒருவகையான பஞ்சு போன்ற பகுதி இருக்கும். இதில் சிறுசிறு துளைகள் காணப்படும். இது வெப்பத்தினைத் தணிக்கும் தன்மை கொண்டதாகும். இதனால் உடலின் வெப்பம் சீராக்கப்படுகிறது; உடல் நலம் பாதுகாக்கப்படுகிறது. குறைந்த விலைக்கு இக்கோரைப் பாய்கள் கிடைக்கின்றன.

Related Posts Plugin for WordPress, Blogger...