WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Saturday, 2 May 2015

நெல்லி ஜாமூன்

தேவையானவை:

பெரிய நெல்லிக்காய் - 50,
தேன் - ஒன்றரை கிலோ,
பனங்கற்கண்டு - அரை கிலோ.

செய்முறை:

நெல்லிக்காயை நன்கு கழுவவும். பிறகு, சுத்தமான ஊசியால்... ஒவ்வொரு நெல்லிகாய் முழுவதிலும் சிறு சிறு துளைகள் இடவும். கண்ணாடி பாட்டிலில் தேனை விட்டு, அதில் துளையிட்ட நெல்லிக்காய், பனங்கற்கண்டு போட்டு ஊற விடவும். கண்ணாடிப் பாட்டிலின் மேல் பகுதியில், மெல்லிய காட்டன் துணியைக் கட்டி.. வெயிலில் ஒரு வாரம் வரை வைத்தெடுத்தால், நெல்லி ஜாமூன் ரெடி!

குறிப்பு:

முதுமையை விரட்டும் அற்புத மருந்து இது. தினம் தவறாமல் சாப்பிட... உயர் ரத்த அழுத்தம், ஒபிஸிட்டி போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும். சளி, இருமல், தலைவலி விலகும், கண்பார்வை மேம்படும்.

குதிரைவாலி - புதினா பணியாரம்

தேவையானவை

குதிரைவாலி அரிசி - ஒரு கப்.
இட்லி அரிசி - ஒரு கப்
வெந்தயம் - 3 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
புதினா - ஒரு கட்டு
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு

செய்முறை

அரிசி வகைகள், வெந்தயம், உளுத்தம்பருப்பு ஆகிய மூன்றையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். புதினாவை சுத்தம் செய்து கொள்ளவும். பச்சைமிளகாய் மற்றும் இஞ்சியை நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் சிறிது நெய்விட்டு புதினா, இஞ்சி மற்றும் பச்சைமிளகாயை வதக்கி அரைத்துக்கொள்ளவும். இந்தக்கலவை மற்றும் உப்பு சேர்த்து மாவில் ஒன்றாக கலக்கவும். பணியாரக்குழியில் நெய்விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வெந்தபின் எடுக்கவும்.

பாகற்காய் ஜூஸ்

தேவையான பொருட்கள் :

பெரிய பாகற்காய் - 1
எலுமிச்சம்பழம் - பாதி
காய்ச்சிய பால் - 1/2 கப்
எண்ணெய்‍ - 1 தேக்க‌ர‌ண்டி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
மிளகு தூள் - 1 ஸ்பூன்

தாளிக்க :

சோம்பு - 1/4 தேக்க‌ர‌ண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்க‌ர‌ண்டி
பட்டை - 1
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

பாகற்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் அலசி சிறிது மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு வேக விட வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சோம்பு, உளுத்தம் பருப்பு, பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். அத்துடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். இத்துடன் வெந்த பாகற்காய் போட்டு கிளறி தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும்.

அதனுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும்.

கடைசியாக பால் சேர்த்து கொத்துமல்லி தூவி பரிமாற வேண்டும்.

இந்த ஜூஸை குடித்தால், நீரிழிவு கட்டுப்படுவதோடு, உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்துவிடும். ஒரு வேளை அளவுக்கு அதிகமான அளவில் கசப்பு தெரிந்தால், அதை தயாரிக்கும் போது, சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து செய்தால், கசப்புத் தன்மையை குறைக்கலாம்.

தினை-வெந்தய இட்லி

தேவையான பொருட்கள்:

தினை அரிசி - 1 கப்
தேங்காய் - 1 கப் (துருவியது)
வெந்தயம் - 1 டீஸ்பூன்
தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக தட்டியது)
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் தினை அரிசியை நீரில் போட்டு, குறைந்தது 6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் மற்றொரு பாத்திரத்தில் வெந்தயத்தைப் போட்டு தயிர் ஊற்றி, கரண்டி கொண்டு நன்கு கலந்து, இதையும் 6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். ஆறு மணிநேரம் ஊற வைத்தப் பின்னர் மிக்ஸியில் துருவிய தேங்காய் மற்றும் ஊற வைத்துள்ள வெந்தயக் கலவையை போட்டு நன்கு மென்மையாக அரைத்து, அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து ஊற வைத்துள்ள தினை அரிசியை நன்கு அரைத்து, அதனை அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையில் சேர்த்து, நன்கு கலந்து, பின் வெல்லத்தை சேர்த்து நன்கு கரண்டி கொண்டு கலந்து, மாவை மூடி வைக்க வேண்டும். கலவையானது நன்கு பொங்கி வந்த பின்னர், அதில் உப்பு சேர்த்து நன்கு கலந்து, பின் இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி எடுத்தால், சுவையான தினை-வெந்தய இட்லி ரெடி!

இது தக்காளி மற்றும் வெங்காய சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

வல்லாரை கீரை பூரி

"பத்து வல்லாரை இலைகளை எடுத்து ஐந்து மிளகு சேர்த்து" அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூன்று மாதத்தில் மூளை திசுக்கள் வலுப்பெற்று, நரம்பு தளர்ச்சியை நீக்கி, தளர்வுற்ற தேகத்தை இறுகிப் பலம் பெற செய்யும்.

அளவில்லா மருத்துவ குணங்கள் நிறைந்த வல்லாரை கீரையை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, கொஞ்சம் தண்ணீர் கலந்து மிக்சியில் விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு கோதுமை மாவுடன் இந்த வல்லாரை கீரை விழுதையும் சேர்த்து பிசைந்து வழக்கம் போலவே பூரியாக செய்யலாம்.. இதில் எண்ணெய் ஒட்டாது... நன்றாக உப்பி வரும்.. மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

வல்லாரை கீரை மட்டுமில்லாமல் புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லி, முடக்கத்தான், தூதுவளை என எந்த மூலிகை கீரையையும் இப்படி விழுதாக அரைத்து பூரி (அ) சப்பாத்தி செய்யலாம்...

இதேபோல கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை போன்றவற்றில் விதவிதமாக செய்யப்படும் இட்லி, தோசை போன்றவற்றிலும் இந்த மூலிகை கீரை விழுதை கலந்து செய்யலாம். இதனால் சாதாரணமான உணவு வகைகள் சுவையுடன் மருத்துவ குணங்களும் நிரம்பி உடலுக்கு ஆரோக்கியம் தரும்..

இதற்கு தொட்டுக் கொள்ள அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சாம்பார், காளான் கிரேவி, பட்டாணி குருமா என செய்துகொள்ளலாம்... வித்தியாசமாக கலருடன் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்...
மூலிகை கீரைகளின் பயன்களை பற்றி நாம் ஏற்கெனவே பல்வேறு தகவல்களை பதிவிட்டிருக்கிறோம்.. அதை எப்படி சாப்பிடலாம் என்றும் சொல்லி விட்டோம்...இனி உங்கள் குடும்ப ஆரோக்கியம் உங்கள் முயற்சியிலும் ஆர்வத்திலும்தான் இருக்கிறது...

Related Posts Plugin for WordPress, Blogger...