WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Showing posts with label Health Tips. Show all posts
Showing posts with label Health Tips. Show all posts

Monday 18 May 2015

பசும் பால் மனித உணவு அல்ல

பசும் பால் மனித உணவு அல்ல##### ஆம் . பொதுவாகவே பால் என்பது குழந்தைப் பருவ உணவே ஒழிய வளர்ந்தவர்களின் உணவாகாது. பசுவின்பால் கன்றுக் குட்டிக்காகவே இறைவனால் படைக்கப்பட்டது. மனிதனைத் தவிற எந்த மிருகமும் அடுத்த மிருகத்தின் பாலை திருடுவதில்லை. அசைவ உணவு உண்பதில்லை என்பவர்கள் கூட பாலை அருந்துகின்றனர். இது எந்த விதத்தில் அவர்களுக்கு சரியாக தோன்றுகிறதோ?. இறைவனே பசுவிற்கு கன்றுக்குட்டிக்கு போக அதிக பாலை பசுவின் மடியில் நமக்காக படைத்துள்ளார் என்பர் சிலர். ஆனால் அது உண்மையல்ல. மனிதனுக்கு வாழ்நாளெல்லாம் பால் தேவைப்படுமேயானால் தாய்க்குதான் வாழ்நாளெல்லாம் பால் சுரக்க வைத்திருப்பான். பசுவிற்கு பேசும் சக்தியிருந்தால் அது கேட்டிருக்கும் "உனது தாயின் மடியில் எனது கன்றுக்காக பால் கறக்க நீ ஒத்துக்கொள்வாயா" என. ஏன் இதை தாய்மார்கள்கூட சிந்திப்பதில்லை. பசும் பால் எளிதில் ஜீரணமாகாது . பால் சாப்பிடுவதால் அதிக கால்சியம் கிடைக்கும் என்பது பொய்ப்பிரச்சாரம். பால் சாப்பிட்டால் கால்சியம் பற்றாக்குறையே உருவாகும். கெட்ட கொழுப்புகள் உருவாகி உடல் பருமன் ஏற்படும். செரிமான உறுப்பு பாதிக்கப்படும். பாலுணவுகள் விரைவில் கெட்டுவிடும். குடலில் தங்கி கழிவாக எளிதில் உடலில் பரவும். குழந்தைகளுக்கு அடிக்கடி சளி காய்ச்சல் வரும். டைப் 1 நீரழிவு உண்டாகும். உடலில் நாளமில்லா சுரப்பிகள் பிரச்சனை தரும். தைராய்டு ஏற்படும். சிறு வயதிலேயே பருவமடைவர். நீரழிவு , இரத்த அழுத்தம், இதய நோய்களை உண்டாக்கும். பெண்களுக்கு வெள்ளைப்படுதலை உண்டாக்கும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இவை போன்றவை இயற்கை மருத்துவர்களால் சொல்லப்படுகிறது. சரி இதை எப்படி நம்புவது என நீங்கள் கேட்கலாம். இதை நீங்களே பரிசோதித்து நோயிலிருந்து விடுதலை பெற்று நம்பலாம். ஆங்கில மருத்துவர்கள் சித்த மருத்துவர்களால் இதை ஏற்றுக் கொள்வது கடினமே. ஜீவ காருண்யம் பேசும் பலர் பசு கொட்டகையில் கட்டப்பட்டு சில நேரங்களில் கன்றுக்கு கூட பால் விடாமல் கறக்கப்படுவதை தெரிந்தும் பாலை அருந்துகின்றனர். பசும்பால் மனிதனின் இயற்கை உணவு அல்ல. பசும்பால் நோயை உருவாக்கும் காரணி . பாவங்களின் விளைவினாலேயே நாம் நோயாளியாகி துன்பப்படுகிறோம். மேலும் பசுகன்றுகளின் பாவங்கள் பசும் பால் மனித உணவு அல்ல##### ஆம் . பொதுவாகவே பால் என்பது குழந்தைப் பருவ உணவே ஒழிய வளர்ந்தவர்களின் உணவாகாது. பசுவின்பால் கன்றுக் குட்டிக்காகவே இறைவனால் படைக்கப்பட்டது. மனிதனைத் தவிற எந்த மிருகமும் அடுத்த மிருகத்தின் பாலை திருடுவதில்லை. அசைவ உணவு உண்பதில்லை என்பவர்கள் கூட பாலை அருந்துகின்றனர். இது எந்த விதத்தில் அவர்களுக்கு சரியாக தோன்றுகிறதோ?. இறைவனே பசுவிற்கு கன்றுக்குட்டிக்கு போக அதிக பாலை பசுவின் மடியில் நமக்காக படைத்துள்ளார் என்பர் சிலர். ஆனால் அது உண்மையல்ல. மனிதனுக்கு வாழ்நாளெல்லாம் பால் தேவைப்படுமேயானால் தாய்க்குதான் வாழ்நாளெல்லாம் பால் சுரக்க வைத்திருப்பான். பசுவிற்கு பேசும் சக்தியிருந்தால் அது கேட்டிருக்கும் "உனது தாயின் மடியில் எனது கன்றுக்காக பால் கறக்க நீ ஒத்துக்கொள்வாயா" என. ஏன் இதை தாய்மார்கள்கூட சிந்திப்பதில்லை. பசும் பால் எளிதில் ஜீரணமாகாது . பால் சாப்பிடுவதால் அதிக கால்சியம் கிடைக்கும் என்பது பொய்ப்பிரச்சாரம். பால் சாப்பிட்டால் கால்சியம் பற்றாக்குறையே உருவாகும். கெட்ட கொழுப்புகள் உருவாகி உடல் பருமன் ஏற்படும். செரிமான உறுப்பு பாதிக்கப்படும். பாலுணவுகள் விரைவில் கெட்டுவிடும். குடலில் தங்கி கழிவாக எளிதில் உடலில் பரவும். குழந்தைகளுக்கு அடிக்கடி சளி காய்ச்சல் வரும். டைப் 1 நீரழிவு உண்டாகும். உடலில் நாளமில்லா சுரப்பிகள் பிரச்சனை தரும். தைராய்டு ஏற்படும். சிறு வயதிலேயே பருவமடைவர். நீரழிவு , இரத்த அழுத்தம், இதய நோய்களை உண்டாக்கும். பெண்களுக்கு வெள்ளைப்படுதலை உண்டாக்கும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இவை போன்றவை இயற்கை மருத்துவர்களால் சொல்லப்படுகிறது. சரி இதை எப்படி நம்புவது என நீங்கள் கேட்கலாம். இதை நீங்களே பரிசோதித்து நோயிலிருந்து விடுதலை பெற்று நம்பலாம். ஆங்கில மருத்துவர்கள் சித்த மருத்துவர்களால் இதை ஏற்றுக் கொள்வது கடினமே. ஜீவ காருண்யம் பேசும் பலர் பசு கொட்டகையில் கட்டப்பட்டு சில நேரங்களில் கன்றுக்கு கூட பால் விடாமல் கறக்கப்படுவதை தெரிந்தும் பாலை அருந்துகின்றனர். பசும்பால் மனிதனின் இயற்கை உணவு அல்ல. பசும்பால் நோயை உருவாக்கும் காரணி . பாவங்களின் விளைவினாலேயே நாம் நோயாளியாகி துன்பப்படுகிறோம். மேலும் பசுகன்றுகளின் பாவங்கள் தேலையா?

அவரைக்க்காயின் மருத்துவ குணங்கள்:-

அவரை கொடி வகையைச் சேர்ந்தது. குறிப்பாக தென்னிந்தியாவில் வீடுகள்தோறும் பயிரிடப்படும் செடியாகும். இன்றும் கிராமப்புறங்களில் வீட்டின் கொல்லைப் புறத்தில் அவரை பயிரிடப் படுவதைக் காணலாம். ஆடி மாதம் விதை விதைத்தால் அதன் பயன் தை மாதத்தில்தான் கிடைக்கும். இது கொடியாக வளர்ந்து காய் காய்ப்பதற்கு ஆறு-மாத காலமாகும். இந்த அவரைக் கொடிக்கு அழகான பந்தல் போடுவார்கள். அந்த பந்தலின் மேல் இந்த கொடி படர்ந்து காணப்படும். அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது.

அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.

நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.

காமச்சிந்தனை, அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.

பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் பிஞ்சு வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.

அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

அதுபோல் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை மட்டுப்படும்.

· மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும்.

· மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

· சிறுநீரைப் பெருக்கும்

· சளி, இருமலைப் போக்கும்

· உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்

· சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும்

· இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.

முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.

முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும்.

கணையம் செயல்படாததே நீரழிவுக்கு காரணமா?

கணையம் செயல்படாததே நீரழிவுக்கு காரணமா?#####30 வருடமாக சரியாக வேலை செய்து வந்த
ஒரு உறுப்பு மட்டும் திடீரென காரணமின்றி வேலை செய்ய முடியாமல் போய்விட்டது என்பது அறிவுக்கு ஒத்துவராத வாதமாகும். கணையம் இன்சுலின் சுரக்காததே நீரழிவுக்கு காரணம் என்பது மேலே குறிப்பிட்ட அறிவுக்கு ஒவ்வாத கூற்று ஆகும். அந்த கணையம் மீண்டும் சரியாகாது என்பது மக்களிடம் பரப்பப்பட்டு வரும் பொய்ப் பிரச்சாரமாகும். அறிவுடைய சிந்திக்கக் கூடிய எவரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
உடலில் வயதாகும் காலத்தில் ஒவ்வொரு உறுப்பாக செயல்திறன் குறைந்து அத்தியாவசியமான உறுப்புக்கள் மட்டும் நன்கு இயங்கும். இங்கு கணையம் அத்தியாவசிய உறுப்பு ஆகும். கணையம் இயங்கவில்லையெனில் அது நோயினால் பாதிப்புக்குள்ளாகி இருக்க வேண்டும். அவ்வாறு நோயினால் தாக்கப்பட்டிருந்தால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அந்த நோயை குணமாக்கி விடும். கணையமானது நமது தவறான உணவுப் பழக்கத்தால் அதிக பணிச்சுமையால் செயல் குன்றிப் போயிருக்கும். உணவுப்பழக்கங்களை சரிசெய்யும்போது கணையம் தன்னை புதுப்பித்துக் கொள்ளும். இதுவே நாம் அறிவு ரீதியாக ஏற்றுக்கொள்ளுமாறு இருக்கிறது. இதனடிப்படையிலேயே டயபடீஸ் நேட்சுரல் தெரபி சிகிச்சை செய்யப்படுகிறது. மேலும் விவரங்கள் பெற 9698662522 அனுகலாம். எனவே நீரழிவை கட்டுப்பாட்டில் வைக்க மருந்துகளை எடுத்து ஏமாற வேண்டாம். இதுநாள்வரை சரியாக இயங்கிவந்த எந்த உறுப்பும் காரணமின்றி தன் செயல்பாட்டை நிறுத்தாது. அவ்வாறு சொல்லும் மருந்து கம்பனிகளின் டாக்டர்களை நம்பாதீர்.

சிறுநீரகக் கல்... இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!

இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.

கை மருத்துவத்தில் சிறந்தது சுக்கு

சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

Thanks:Dinakarannewspaper

எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் முறை:


சுத்தமான நல்லெண்ணெய் 10 ml அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம்.
பற்களின் இடைவெளிகளுக்குள் எண்ணெய் போகும்படி செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் எண்ணெய் நுரைத்து, வெண்மையாகி நீர்த்துப் போகும். அப்போது அதை உமிழ்ந்து விட வேண்டும். அதன் பிறகு வாயை நன்கு கழுவிக் கொள்ளவும்.
எந்த நேரத்தில் செய்ய வேண்டும்?
இந்த எண்ணெய் மருத்துவம் செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை.
எவ்வளவு காலம் செய்ய வேண்டும்?
நல்ல பசி, ஆழ்ந்த அமைதியான உறக்கம், நல்ல மனநிலை ஆகியவை வரும்வரைக்கும் எண்ணெய்க் கொப்பளிப்பு தொடர்ந்து செய்ய வேண்டும்.
ஆனால் 9 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை எண்ணெய்க் கொப்பளிப்பு செய்வதை தொடர்ந்தால் உடலுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.
நன்மைகள்:
தோலின் மீது குழிகளும் வெடிப்புகளும் மறைந்து தோல் பளபளப்பாகிறது.
கை, கால், விரல்கள் மெருகுற்று இரத்த ஓட்டம் பெருகியதற்கான அறிகுறிகள் தெரியும்.
தோல் அரிப்புகள் படிப்படியாக குறைந்து 3 மாதங்களில் மறையும்.
Migraine எனப்படும் ஒற்றைத் தலைவலி தீரும்.
பொடுகு தொல்லை தீரும்.
பருக்கள் அனைத்தும் மறைந்து முகம் பொலிவு பெறும்.
பல் கூச்சம் நின்று பல்வலி மறையும்.
உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவதை நீங்கள் உணர முடியும்.
விஷ உணவுகளுக்கு விடை கொடுப்போம்!
பாரம்பரிய உணவுகளுக்கு உயிர்கொடுப்போம்!
சற்றே சிந்தித்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker

ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker மேல்..எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது.
யோசித்தேன் புரியவில்லை. google செய்தேன். அதிர்ச்சியாக இருந்தது.

PLU code (price lookup number) இதனை வைத்து நாம்
சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.

எவ்வாறு அறிவது:
1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி உரம் கலந்தது... (நான் அப்டியே shock ஆகிட்டேண் )

2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.

3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "9" என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.

இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.
அந்த sticker ம் ஆபத்தானதே. எடுத்து விட்டு சாப்பிடுங்க..!!

Sunday 17 May 2015

எந்த நோய்க்கு என்ன காய்கறி, பழங்களைச் சேர்க்கலாம்

- இயற்கை வைத்தியம்

உடல் பருமன்

முள்ளங்கி, முட்டைக்கோஸ், சுரைக்காய், பச்சைக் காய்கறிகள், உப்பு சேர்த்த எலுமிச்சை ஜூஸ், வெஜ் க்ளியர் சூப், மிதமான அளவு மா, பலா, வாழை, பப்பாளி, சப்போட்டா, ஆரஞ்சு, சாத்துக்குடி.

சர்க்கரை நோய்

தினமும் ஒரு கீரை சூப், சௌசௌ, முட்டைக்கோஸ், முள்ளங்கி, முருங்கைக்காய், கத்திரிப் பிஞ்சு, காலிஃப்ளவர், பாகற்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, நூல்கோல், கொத்தவரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, இஞ்சி, சின்ன வெங்காயம். சாத்துக்குடி, அன்னாசி, கொய்யா, ஆப்பிள், பேரிக்காய், தர்ப்பூசணி.

வயிற்று குடல் புண்

மணத்தக்காளிக்கீரை, முட்டைக்கோஸ், தேங்காய், வெள்ளரி, கேரட், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, சப்போட்டா, தர்ப்பூசணி, மாதுளை, ஆரஞ்சு.

மாதவிடாய்க் கோளாறுகள்

வாழைப்பூ, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, நெல்லிக்காய், வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், கோஸ், வெங்காயம், திராட்சை, மாதுளை, தர்ப்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை.

ஆஸ்துமா

கேரட், முருங்கை, புதினா, கொத்தமல்லி, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, திராட்சை, பேரீச்சை, தூதுவளை.

ஆஸ்டியோபொராசிஸ்

பாலக் கீரை, எலுமிச்சைச் சாறு, வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, சீதாப்பழம்.

ரத்தசோகை

பூசணி, பீட்ரூட், அவரை, புடலங்காய், பீர்க்கங்காய், பீன்ஸ், வெண்டைக்காய், முருங்கைக்காய், காலிஃப்ளவர், நெல்லிக்காய், கீரை வகைகள், பேரீச்சம்பழம்.

மலச்சிக்கல்

பாலக் கீரை, கறிவேப்பிலை, திராட்சை, அத்திப்பழம், எலுமிச்சை, வாழை, பப்பாளி, கொய்யா, மாம்பழம், பேரிக்காய், பைனாப்பிள், சப்போட்டா.

சிறுநீரகக் கல்

புதினா, கொத்தமல்லி, முள்ளங்கி, வெள்ளரி, கேரட், வாழைத்தண்டு, வாழைப்பூ, கற்றாழை, எலுமிச்சைச் சாறு, ஆப்பிள்.

மூலம்

பீட்ரூட், பீன்ஸ், முருங்கைக்காய், முட்டைக்கோஸ், கேரட், முள்ளங்கி, வாழைக்காய், கீரை வகைகள், மாங்காய், பப்பாளி, அத்திப்பழம், நெல்லிக்காய்.

ஹெர்னியா:

முட்டைக்கோஸ், முருங்கை, கொத்தமல்லி, கேரட், நெல்லிக்காய், அன்னாசி, பப்பாளி, திராட்சை, மாதுளை, வாழைப்பழம், ஆப்பிள்.

நரம்புக் கோளாறுகள்:

கொத்தமல்லி, வல்லாரை, முருங்கைக்காய், நெல்லி, மாதுளை, கேரட், செவ்வாழை, திராட்சை, ஆப்பிள், மா, பலா.

தீக்காயம் / கொதிக்கும் நீர் போன்றவற்றால் ஏற்படும் காயம்/ கொப்புளம்/ வடு

தீக்காயம் / கொதிக்கும் நீர் போன்றவற்றால் ஏற்படும் காயம்/ கொப்புளம்/ வடுக்களுக்கு இயற்கை மருத்துவம்:

• வாழைத்தண்டு சாறை எடுத்து தீப்புண் பட்ட இடத்தில் அடிக்கடி ஊற்றி வர தீப்புண் ஆறும்.

• உடலில் தீக்காயங்கள் ஏற்ப்பட்டால் தேங்காய் எண்ணெய் தீப்புண் மீது தடவி வந்தால் தீப்புண் ஆறும்.

• செம்பருத்தி இலை, பூ ஆகியவற்றை சேர்த்து அரைத்து தீப்பட்ட புண்ணின் மீது பூசி வந்தால் தீப்பட்ட புண்ணில் ஏற்படும் எரிச்சல், காந்தல் குறையும்....

• வேப்பங்கொழுந்து, ஆமணக்கு இலை இரண்டையும் அரைத்து தீப்புண்ணில் வைத்து தினமும் கட்டி வர தீப்புண் ஆறும்....

• வேப்பங்கொழுந்தை பசுமோர் விட்டு அரைத்துத் தீப்பட்ட புண்களின் மீது பூசிவந்தால் தீப்புண் குறையும்...

• 30 மில்லி தேங்காய் எண்ணெயுடன், 50 மில்லி தெளிந்த சுண்ணாம்பு நீரைக் கலந்து தீப்புண்ணின் மீது தடவி வந்தால் தீப்புண் குறையும்..

• குப்பை மேனி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு தேன் கலந்து புண்மேல் தடவி வந்தால் தீப்புண் குறையும்....

• நல்லெண்ணெயில் மருதாணி இலையைகளை துண்டுகளாக வெட்டி போட்டு வதக்கி அரைத்து புண் மீது கட்டி வந்தால் தீப்புண் ஆறும்...

• நல்லெண்ணெயில் மருதாணி இலையைகளை துண்டுகளாக வெட்டி போட்டு வதக்கி அரைத்து புண் மீது கட்டி வந்தால் தீப்புண் ஆறும்....

• துளசி சாற்றை தேனில் கலந்து தடவினால் தீப்புண் குறையும்....

• வாழை குருத்தை பிரித்து தீப்பட்ட இடத்தில் கட்ட கொப்பளங்கள் குணமாகும்...

• புளியம் மரத்துப் பட்டையை மென்மையாகப் பொடி செய்து புண் மேல் தூவி தேங்காய் எண்ணெய் விட்டு வர தீப்புண் ஆறும்.

• முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து இலேசாக அடித்து கலக்கி தீப்புண்கள் மீது தடவி வந்தால் தீப்புண்கள் மற்றும் எரிச்சல் குறையும்.....

• உதிரமர இலையை எடுத்து நன்கு அரைத்து புண்கள் மீது பற்று போட்டு வந்தால் எல்லாவிதமான புண் புரைகளும் குறையும்.

• வெந்தயத்தை பொடி செய்து தீப்பட்ட புண்ணின் மீது தடவினால் தீப்புண் குறையும்....

• உருளைக்கிழங்கை சாறு எடுத்து தீப்புண்களில் மீது தடவி வந்தால் தீப்புண் குறையும்....

• நாயுருவி செடியை சுத்தம் செய்து இடித்து பிழிந்து அதை துணியில் வைத்து புண்ணின் மீது கட்டி வந்தால் புண் குறையும்...

• அவுரி இலையை அரைத்து தீப்புண், தீயினால் ஏற்பட்ட கொப்புளங்கள் மீது பூச தீப்புண் குறையும்....

• தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்ட தீப்புண் குறையும்...

• துலுக்க சாமந்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து தீப்புண்களால் ஏற்பட்ட கொப்புளம் மேல் பூசி வந்தால் கொப்புளங்கள் குறையும்.

• பருப்புக் கீரையை நன்கு அரைத்து புண்கள் மீது தடவி வந்தால் தீயினால் ஏற்பட்ட புண்கள் ஆறும்.

• மாசிக்காய், இதனை தண்ணீர் விட்டு அரைத்து தீப்புண்ணிற்கு தடவிவர தீப்புண் குறையும்.

• மா இலைகளை உலர்த்தி காய வைத்து எரித்து சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்துத் தீப்புண்கள் மேல் பூசினால் புண்கள் குறையும்.

• புளியிலை, வேப்பிலை, இரண்டையும் இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி தினமும் புண்களை கழுவி வர புண்கள் ஆறும்.

• தேனை பஞ்சால் நனைத்து தீப்புண் பட்ட இடத்தில் தினமும் தடவி வர தீப்புண் ஆறும்....

• ம‌ஞ்ச‌ள்,வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து புண்ணில் தடவ புண் ஆறும்....

• உப்பு, மிளகாய் சம எடை எடுத்துத் தூள் செய்து வேப்ப எண்ணெயில் நன்றாக காய்ச்சி தடவ காயம்பட்ட புண் ஆறும்.

• வேப்பங் கொழுந்தை மோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண் மீது தடவ தீப்புண் ஆறும்.

• மருதாணி இலைகளைத் துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும். அடுப்பில் வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அதில் இலைகளைப் போட்டு சடசடவென வெடித்தவுடன் வாணலியை இறக்கி வைத்து ஆறவிடவும். பிறகு சுத்தமான அம்மியில் வைத்து அரைத்து பாட்டிலில் அடைத்து வைத்து கொள்ளவும். தேவையான அளவு துணியில் தடவி புண்ணின் மீது வைத்துக் கட்டி வந்தால் விரைவில் தீப்புண் ஆறும்.

• குங்கிலிய இலையை பிழிந்து சாறு எடுத்து போட தீப்புண் ஆறும்.

• கல்லுப்பு சிறிது எடுத்து தீப்புண் மீது தடவ தீப்புண் கொப்புளம் குறையும்.

• உப்பையும், நெய்யையும் சம அளவு எடுத்து குழைத்து சூடுபட்ட இடத்தில் தடவினால் கொப்புளங்கள் குறையும்.

• அல்லி இலையை நீர் விட்டுக் காய்ச்சி தீப்புண்களைக் கழுவினால் தீப்புண் குறையும்....

• அவரை இலைச்சாற்றுடன் மஞ்சள் பொடியை சேர்த்து விளக்கெண்ணெயில் குழப்பி புண்களில் பூசி வந்தால் புண் குறையும்.

• வேப்பம்பட்டையை எடுத்து நன்கு இடித்து கஷாயமாக்கி காய்ச்சி தீக்காயங்கள் மீது தடவி வந்தால் தீப்புண் குறையும்.

• புங்க எண்ணெய்யை லேசாக சூடாக்கி தீய்க்காயங்கள் மீது பூசி வர தீப்புண் குறையும்.

வடு மறைய இயற்கை மருத்துவம் :-

• வேப்பங்கொட்டையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக காய்த்து அந்த நீரை மத் தைக் கொண்டு சிலுப்பினால் நுரை உண்டாகும் அந்நுரையை தினமும் 3 வேளை தீப்புண் மீது பூச வடு மறையும்.

• வேப்பம் பட்டையை இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி கஷாயமாக்கி தீப்புண் வடு மீது தொடர்ந்து தடவி வர தீப்புண் வடுமாறும்.

• வாழைத்தண்டடை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவினால் தீப்புண் வடு குறையும்.

நன்றி - உணவே மருந்து

Related Posts Plugin for WordPress, Blogger...