அஜித், திரிஷா ஜோடியாக நடித்த
படம் மங்காத்தா. 2011–ல் இப்படம்
ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது.
வசூலும் குவித்தது. வெங்கட்
பிரபு இயக்கி இருந்தார்.
இதில் அஜித் வில்லத்தனமான
கேரக்டரில் நடித்து இருந்தார். மற்ற
கதாபாத்திரங்களும் வில்லனாகவே
சித்தரிக்கப்பட்டு இருந்தன.
வெளிநாட்டில் இந்த படத்தின்
கிளைமாக்ஸ் முடிவது போல்
எடுத்து இருந்தனர்.
மங்காத்தா படத்தின் 2–ம் பாகத்தை
எடுக்க வெங்கட் பிரபு தற்போது
திட்டமிட்டு உள்ளார். இது குறித்து
அவர் கூறும் போது, மங்காத்தா 2–ம்
பாகத்தை எடுக்க முடிவு
செய்துள்ளேன். அதற்குரிய நேரம்
வரும் போது அறிவிப்பேன் என்றார்.
இரண்டாம் பாகத்தை எடுப்பது
போன்று தான் கதையையும்
முடித்து இருந்தார்.
மங்காத்தா படத்தை இந்தியில் ரீமேக்
செய்யவும் முயற்சிகள் நடந்தன. அஜித்
கேரக்டரில் நடிக்க சயீப் அலிகான்,
ஜான் அபிரகாம் போன்றோரிடம்
வெங்கட் பிரபு பேச்சுவார்த்தை
நடத்துவதாகவும் பேசப்பட்டது.
ஆனால் திடீரென ரீமேக் திட்டம்
கைவிடப்பட்டு உள்ளது.
சூர்யாவை வைத்து வெங்கட்பிரபு
இயக்கிய ‘மாஸ்’ படம் நேற்று
ரிலீசானது. அடுத்து மங்காத்தா 2–ம்
பாகம் படவேலைகளில் இறங்க
இருக்கிறார்.
Services
- Home
- AnnaUnivNews
- Cricket News
- தமிழில் தொழில்நுட்ப தகவல்கள்
- School News
- Examination Tips
- Health Tips
- Samaiyal Tips
- Facebook Tricks
- Blogger Tips
- Computer Tricks
- SIM details
- Celebrity Birthdays(Daily)
- Cinema News
- watch trailers
- Colleges Info(தமிழ்நாடு)
- Langauges Learning
- GTA Save Games
- Earn Money Online
- Model Letters
- Dote News
- General Knowledge
- Placement Info
- Gate Books
- About
- Contact
- Privacy Policy
Saturday 6 June 2015
Mangatha-2
முட்டாள்த்தனம்
'மகா நடிகன்' படத்துல சத்தியராஜ்
நடிகராவே வருவார்...
அவர்க்கிட்ட
ரிப்போர்ட்டர் ஒருத்தர்
கேள்வி கேப்பார்...
'சார், உங்க படங்கள் எல்லாம் ஹிட் ஆகிட்டே இருக்கு. வேற
மொழி படங்கள்ல நடிப்பீங்களா...'?
'அய்யயோ...நான் எப்பவும் தமிழ்
படங்களில் மட்டும் தாங்க
நடிப்பேன்..ஏன்னா, இங்க தான்
இளிச்சி வாய ரசிகர்கள்
இருக்காங்க...
வெளியிலிருந்து வரவங்களுக்கு கோயில்
கட்டுவாங்க...
உள்ளூர்
நடிகர்களை செறுப்பால
அடிப்பாங்க'னு போட்டு தாக்குவார்...
இதே மாதிரி 'கோவை பிரதர்ஸ்'
படத்துல ஓப்பனிங் சீன்ல 'நீயும்
நானும் அண்ணன்
தம்பி டா'னு பாட்டு பாடிட்டு டான்ஸ்
ஆடிக்கிட்டு மார்கெட்
வழியா வருவாரு...
அப்போ அங்க மார்க்கெட்ல
வேலை செஞ்சிட்டு இருக்கிறவங்க
எல்லாரும் சத்தியராஜ்
பின்னாடி டான்ஸ்
ஆடுவாங்க...
உடனே சத்தியராஜ் டான்ஸ்
நிறுத்திட்டு பின்னாடி டான்ஸ்
ஆடினவங்கள பார்த்து....
'ஏண்டா டேய்....நடிக்கி
றது என்னோட தொழில். அதனால
நான் பாட்டு பாடிட்டு டான்ஸ்
ஆடிட்டு வரேன்...
நீங்க ஏண்டா உங்க வேலையவிட்டுட்டு என்
பின்னாடி வந்து ஆடுறீங்க...?'
'தலைவா..நீங்க
கருத்தா பாட்டு பாடிட்டு வந்தீங்க..அதான்
உங்க கூட ஆடினோம்...'
'ஹஹஹ்ஹாஹ....சரி, இப்ப நான்
'நீயும் நாணும் அண்ணன்
தம்பி'னு பாடுனேன்...எங்கே...எங்ககிட்ட ஒரு 2000 ரூபாய்
பணம் கேளு'
'தலைவா...ஒரு 2000 ரூபாய்
பணம் கொடு தலைவா...'
(சத்தியராஜ்
அவனை பளார்னு அறைஞ்சிட்டு)
'ஏண்டா டேய்...நான் பஞ்ச் டயலாக்பேசுறதும்,
கருத்தா பாட்டு பாடுறதும்
எல்லாம் கார் வாங்கவும்
பங்களா வாங்கவும் தான்...
இதுல
உனக்கு போய்
காசு தரனுமா...நீங்கலாம்
திருந்தவே மாட்டிங்களா...'?
இப்படி ஓப்பனா தன்னோட சக
நடிகர்களின் உண்மை முகத்தையும்
ரசிகர்களின் இளிச்சிவாய்த்தனத்தையும்
பட்டுனு உடைச்சி சொல்வார்...
# இதையே தான் நானும்
சொல்றேன்...நீங்க
யாருக்கு கொடி பிடிக்கிறீங்க..?
யாரை தலையில
தூக்கி வெச்சிட்டு ஆடுறீங்க...?
நடிகர்களுக்கு என்ன இல்ல...??
ஒரு ரசிகன் மாசம் 20 ஆயிரம்
ரூபாய் சம்பாதிக்கிறான்னு வெச்சிக்கிவோம்.
ஒரு வருஷத்துக்கு 2 லட்சத்து 40
ஆயிரம் ரூபாய். 25
வயசிலிருந்து 60 வயசு வரைக்கும்
சம்பாதிக்கும் பணம் 84 லட்ச
ரூபாய். சரி, இடையில் சம்பள
உயர்வு இருந்தாலும் கூட 1கோடி ரூபாய்னு வெச்சிக்குவோம்...
ஆனா, அந்த ரசிகனின் தலைவன்
ஒரு படத்திற்கு(5 மாதங்களில்)
வாங்கும் சம்பளம் 15 டூ 20கோடி. அதாவது, நீங்க ஆயுள்
முழுக்க சம்பாதிக்கும் பணத்தை,
உங்க தலைவன் 5 மாதத்தில் 20மடங்கு அதிகமாக
சம்பாதித்து விடுகிறார்...
அப்போ அவருடைய ஆயுள் முழுக்க எவ்வளவு சம்பாதிப்பார்...?
இவ்வளவு இருந்தும் இன்னும் இன்னும் ஏன்
அவங்களை தூக்கிக்கிட்டே இருக்கீங்க...
நடிகர்களை பாராட்டலாம்
ஆனா அவர் தான் எல்லாம்னு
மன்றங்கள், இயக்கங்கள்னு
உங்க வாழ்கையின் முக்கிய வேலைய
விட்டுட்டு சுத்துறது ஒரு மகா மகா மகா
#முட்டாள்த்தனம்
#thalabathy back in action #puli
புலி'யிலும் பாடகர் விஜய்!
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'புலி' படத்தில் வைரமுத்து எழுதியுள்ள பாடல் ஒன்றை பாடியிருக்கிறார் விஜய்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'புலி'. ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் விஜய்யோடு நடித்து வருகிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படங்களில் அவரே ஒரு பாடல் பாடுவது வழக்கம். அதே போல 'புலி' படத்திலும் வைரமுத்து எழுதியிருக்கும் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார் விஜய்.
அப்பாடல் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் ஸ்டூடியோவில் வைத்து பதிவு செய்யப்பட்டது. பாடல் பதிவின் போது இயக்குநர் சிம்புதேவன், தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன்ஸ் உடன் இருந்தார்கள்.
படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்து படக்குழுவிடம் விசாரித்த போது, "ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்த நாளன்று 'புலி' பர்ஸ்ட் லுக் வெளியிட தீர்மானித்திருக்கிறோம். விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினங்களை கணக்கில் கொண்டு செப்டம்பர் 17ம் தேதி படத்தை வெளியிட தீர்மானித்து இருக்கிறோம்" என்று தெரிவித்தார்கள்.
Wednesday 25 March 2015
62nd National Award Winners list is here...
62nd National Award Winners list is here...
The 62nd National Film Awards have been announced a while back and if you want to know the complete list of the award winners, here is it:
Best Actor: Vijay/ Nan Avanalla Avalu (Kannada)
Best Actress: Kangana Ranaut/ Queen (Hindi)
Best Bengali Film: Nirbashito
Best Hindi Film: Queen
Best Kannada Film: Harivu
Best Malayalam Film: Ain
Best Marathi Film: Killa
Best Odiya Film: Aadim Vichar
Best Punjabi Film: Punjab 1984
Best Tamil Film: Kuttram Kadithal
Best Telugu Film: Chandamama Kathalu
Best Rabha Film: Orong
Best Haryanvi Film: Pagdi The Honour
Best Educational Films: Komal, Behind The Glass Wall
Best Debut Film Of A Director: Asha Jaor Majhe (Bengali)
Best Popular Film Providing Wholesom Entertainment: Mary Kom (Hindi)
Best Film On Envrionment Conservation: Ottaal (Malayalam)
Best Direction: Chtotushkone (Bengali)/Srijith Mukherjee
Best Supporting Actor: Bobby Simha/ Jigarthanda (Tamil)
Best Supporting Actress: Baljinder Kaur/ Pagdi The Honour (Haryanvi)
Best Male Playback Singer: Sukhvinder Singh/ Haider (Hindi)
Best Female Playback Singer: Uttara Unnikrishnan/ Saivam (Tamil)
Best Costume Designer: Dolly Ahluvalia/ Haider (Hindi)
Best Music Direction: Vishal Bharadwaj/ Haider (Hindi)
Best Background Score: Gopi Sundar/ 1983 (Hindi)
Best Choreography: Haider (Hindi)
Best Assamese Film : Othello
Best Exploration/ Adventure Films: Life Force-India’s Western Ghats
Best Investigative Film: Phum Shang
Best Animation Film: Sound Of Joy
Best Short Fiction Film: Mitraa
Best Film Critic: Tanul Thakur
Best Writing On Cinema: Silent Cinema (1895-1930) by Pasupuleti Purnachandra Rao
Special Mentions:-
Feature Films: Ain (Malayalam), Nachom IA Kumpasar (Konkani), Killa (Marathi), Bhoothnath Returns (Hindi)
Best Writing On Cinema (Special Mention): Pride Of Tamil Cinema by G. Dhananjayan.
Friday 28 November 2014
திருமணமான நடிகைகளை ரசிகர்கள் ஒதுக்கவில்லை: அனுஷ்கா
தமிழில் ‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாகவும், என்னை அறிந்தால் படத்தில் அஜீத் ஜோடியாகவும் நடிக்கிறார் அனுஷ்கா. தெலுங்கில் ‘ருத்ரமா தேவி’, ‘பாகுபலி’ என இரு சரித்திர படங்களிலும் நடிக்கிறார். இந்த படங்களை தமிழிலும் வெளியிடுகிறார்கள்.
இந்த நிலையில் அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும் அடுத்த வருடம் திருமணம் நடக்கும் என்றும் பேசப்படுகிறது. இதனால் புது படங்களுக்கு அனுஷ்கா ஒப்பந்தம் ஆகவில்லை. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பாரா, மாட்டாரா என்று தெரியவில்லை.
திருமணமான நடிகைகளுக்கு சினிமாவில் வரவேற்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்து அனுஷ்கா கூறியதாவது:–
நடிகர்களில் 50, 60 வயது நிரம்பியவர்கள் கூட கதாநாயகனாக நடிக்கின்றனர். ஆனால் திருமணமான நடிகைகள் அதுபோல் கதாநாயகிகளாக நடிக்க முடியுமா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. திருமணமான நடிகைகளாலும் சாதிக்க முடியும். கதாநாயகிகளாகவும் நடிக்க முடியும்.
இந்தி நடிகைகள் கரீனாகபூர், ராணி முகர்ஜி, வித்யாபாலன் போன்றோருக்கு திருமணம் ஆகிவிட்டது. திருமணத்துக்கு பிறகு கூட அவர்கள் கதாநாயகிகளாக நடித்தக் கொண்டு இருக்கிறார்கள். எனவே திருமணமான நடிகைகளை ரசிகர்கள் ஒதுக்கவில்லை. ஏற்றுக் கொள்கிறார்கள்.
இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
கார்த்தியை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் ப்ரணிதா
இப்படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுவரும் வேளையில் ஒவ்வொரு நடிகர், நடிகைகளாக இணைந்து நடித்து வருகிறார்கள். தற்போது மேலும் ஒரு படியாக தெலுங்கு நடிகர்கள் ராணா, பிரபாஸ், ரவிதேஜா ஆகியோர் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
- இந்த நிலையில் மாஸ் படக்குழுவினருடன் ப்ரணிதாவும் இணைந்துள்ளார். இவர் இதற்கு முன் ‘உதயம்’, கார்த்தியுடன் இணைந்து ‘சகுனி’ படத்தில் நடித்திருந்தார். தற்போது மாஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யாவுடன் இணைந்து ப்ரணிதா நடிக்கவுள்ளார். ப்ரணிதா-சூர்யா நடிக்கும் காட்சிகளை படம்பிடிப்பதற்காக இப்படக்குழு இம்மாதம் பல்கேரியா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது - தமிழில் சினிமா செய்திகள்
இந்நிலையில், ஜெனிலியா கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. இத்தகவலை ரிதேஷ் தேஷ்முக், சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
ஜெனிலியாவும், ரிதேஷும் கடந்த 2003-ம் ஆண்டு ‘துஜே மேரி கசம்’ படம் மூலமாக இந்தியில் அறிமுகம் ஆனார்கள். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. மஸ்தி, தேரே நால் லவ் ஹோ கவா, லை பாரி ஆகிய படங்களிலும் அவர்கள் ஜோடியாக நடித்துள்ளனர்.
5000 திரையரங்குகளில் லிங்கா - இன்னொரு சாதனைக்கு தயாராகும் தயாரிப்பாளர் - தமிழில் சினிமா செய்திகள்
இதுவரை ஹிர்த்திக் ரோஷன் நடித்த பேங் பேங் படம் மட்டுமே 5000 திரையரங்குகளுக்கு மேல் வெளியானது. அந்த சாதனையை லிங்கா சமன் செய்ய உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் 5000 திரையரங்குகளில் லிங்காவை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
யுஎஸ்ஸில் 200 திரையரங்குகளுக்கு மேல் லிங்காவுக்கு ஒதுக்கப்பட உள்ளது. அங்கு இவ்வளவு அதிக திரையரங்குகளில் வெளியாகப் போகும் தென்னிந்திய படம் லிங்கா என்பது குறிப்பிடத்தக்கது.
அட்லி இயக்கத்தில் விஜய் - சுவாரஸிய தகவல்கள் - தமிழில் சினிமா செய்திகள்
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஹீரோயினாக நயன்தாரா நடிப்பார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. ராஜாராணியின் முக்கிய அட்ராக்ஷனாக இருந்தவர் நயன்தாரா. என்னை இதுவரை இயக்கியவர்களில் அட்லிதான் சிறந்தவர் என்று நயன்தாரா சான்றிதழ் தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரே படத்தில் பலரை தயாரிப்பாளர்களாக்கி ஒன்றுக்கு மேற்பட்டவர்களை சந்தோஷப்படுத்துவது ரஜினியின் வழக்கம். அதேபோல் இந்தப் படத்தை மூன்று பேர் தயாரிக்கிறார்கள். கலைப்புலி தாணு, த நெக்ஸ்ட் பிக் ஃபிலிம் மற்றும் விஜய் தொலைக்காட்சி மகேந்திரன்.
இதில் விஜய் தொலைக்காட்சி மகேந்திரன்தான் அட்லி ராஜாராணி படத்தை இயக்க காரணமாக இருந்தவர். அட்லி ராஜாராணி ஸ்கிரிப்டை தயார் செய்த போது அதில் நடிப்பதாக இருந்தவர் சிவ கார்த்திகேயன். காரணம், அட்லியின் குறும்படத்தில் அவர்தான் நடித்திருந்தார்.
நண்பா நாம சேர்ந்து படம் பண்ணுவோம் என்று சொன்ன அட்லி, ராஜாராணி படத்தின் கதையை மகேந்திரனிடம் கூற, அவர்தான் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா என பெரிய டீமை முருகதாஸ் மூலமாக அமைத்துக் கொடுத்தார். ஆர்யா, நயன் என்றதும் சிவ கார்த்திகேயனை போய்யா என்று அட்லி கழற்றிவிட்டது கலகல எபிசோட்.
2015 கோடையில் படம் தொடங்குகிறது.
Monday 24 November 2014
உடல் நலக்கோளாறில் இருந்து குணமாகி மீண்டும் நடிக்க வருவேன்: மனோரமா
உடல் நலக்கோளாறில் இருந்து குணமாகி மீண்டும் நடிக்க வருவேன்: மனோரமா
ஆச்சி என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் சிறந்த நடிகை மனோரமா.19 வயதில் தொடங்கிய இவரது திரையுலக வாழ்க்கை 50 ஆண்டுகளை கடந்தும் இன்றும் கம்பீரமாகவே காட்சியளிக்கிறது. தமிழ் சினிமாவில் இவர் போடாத வேஷங்கள் இல்லை.
மேடை நாடகங்களில் நடித்து வந்த மனோரமாவை ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் கவியரசு கண்ணதாசன் திரையுலகில் அறிமுகப்படுத்தினார். அஞ்சலை என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர் இதுவரை 1200 படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ‘பேராண்டி’ படத்தில் நடித்து வரும் மனோரமா எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் என தமிழ் சினிமா ஜாம்பவான்கள் மட்டுமின்றி இன்றைய இளைய தலைமுறை நடிகர்களுடனும் பல படங்களில் நடித்துள்ளார்.
நகைச்சுவை நடிகையாக கோலோச்சிய அவர் குணச்சித்திர வேடங்களிலும் தன்னை மிஞ்ச ஆள் இல்லை என்று பல படங்களில் நிரூபித்துள்ளார். பல படங்களில் தாய் வேடமானாலும் சரி, அக்காள் அல்லது தங்கை வேடமானாலும் சரி. அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.
இப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கும் மனோரமா கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்.
சர்க்கரை நோயுடன் மூட்டு வலியும் சேர்ந்து அவரை வாட்ட தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றார். தற்போது 2 மூட்டுகளிலும் ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுநீரக கோளாறு உள்ளது. டயாலிசிஸ் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மனோரமா வீட்டிலேயே தங்கி இருந்து ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில்தான் நடிகர் மன்சூர்அலிகான் தனது மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக மனோரமா வீட்டுக்கு சென்றார். அப்போது மனோரமாவின் நிலை குறித்து அவர் உருக்கமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
இந்நிலையில் மனோரமா எப்படி இருக்கிறார் என்பதை அறிவதற்காக தி.நகர் போக் ரோட்டில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றோம்.
பிரபல நடிகையின் வீடு என்ற எந்தவித பரபரப்பும் இல்லாமலேயே மனோரமாவின் வீடு காட்சி அளித்தது. வீட்டுக்குள் சென்றதும் அவரது மகன் பூபதி அழைத்து சென்றார்.
சிறிது நேரத்தில் சினிமாவில் நாம் கம்பீரமாக பார்த்து பழக்கப்பட்ட மனோரமா கொஞ்சம் நடை தளர்ந்த நிலையில் கண்களில் நீர் மல்க வந்து அமர்ந்தார்.
நா தழுதழுத்த நிலையில் மனோரமா மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:–
சினிமாவுக்கு வந்து 50 ஆண்டை தாண்டி விட்டேன். சிங்கள படம் ஒன்றில்தான் முதலில் நடித்தேன். அந்த வசனம் என்ன என்பது எனக்கு இப்போது ஞாபகம் இல்லை. பேராண்டி என்ற புதுப்படத்திலும், இன்னொரு தமிழ்ப்படத்திலும் நடித்து வருகிறேன்.
கடந்த சில மாதங்களாகவே வெளியில் எங்கும் செல்லாத நான் எஸ்.எஸ்.ஆர். இறந்து விட்டார் என்ற செய்தி கிடைத்ததும் அவரது வீட்டுக்கு சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தினேன். நான் உடல் நிலை சரியில்லாததை கேள்விப்பட்டு போனிலும் நேரிலும் பலர் உடல் நலம் விசாரித்த வண்ணம் உள்ளனர். எம்.ஜி.ஆர். நினைவு இல்லம், சிவாஜியின் வீட்டுக்கு வரும் ரசிகர்கள் எனது வீட்டுக்கும் வந்து என்னை பார்த்து விட்டு செல்கிறார்கள்.
இது எனக்கு மிகுந்த ஆறுதலாக உள்ளது. என்னை பார்க்க வரும் அனைத்து ரசிகர்களிடமும் சிறிது நேரம் பேசி விட்டுத்தான் நான் செல்கிறேன்.
திரையுலகைச் சேர்ந்த பலர் போனிலும் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். கமல் பிறந்த நாள் அன்று போனில் அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். அப்போது அவர் தாயில்லாத குறையை நீங்கள்தான் நிவர்த்தி செய்கிறீர்கள் என்று கூறினார். பிறந்த நாள் வாழ்த்து கூறியது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
தற்போது படப்பிடிப்புகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறேன். இப்போது எனது பொழுது போக்கு டி.வி. பார்ப்பது மட்டும்தான். நான் பாடிய பாடல்கள், நடித்த காட்சிகள் ஆகியவற்றை பார்க்கும் போது பழைய நினைவுகள் எல்லாம் வருகிறது.
குறிப்பாக ‘‘மஞ்சள் குங்குமம்’’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது சென்னையில் உள்ள கற்பகம் ஸ்டூடியோவில் வைத்து உடை மாற்றும் அறையில் புகுந்த பாம்பு ஒன்று என்னை கடித்து விட்டது. பின்னர் அந்த பாம்பை அடித்துக் கொன்றதும், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதும் இப்போதும் என் மனதில் அப்படியே இருக்கிறது.
எனது மகன் பூபதி பின்னால் நடப்பதை முன் கூட்டியே கணித்து சொல்வான். அவன் பாம்பு கடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அம்மா உனது உடலில் விஷம் ஏறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று கூறி இருந்தான். அவன் கூறியபடியே நடந்தது.
அதே போல ‘‘மாலையிட்ட மங்கை’’ படத்தில் சுடலை என்ற கதாபாத்திரத்தில் காக்கா ராதாகிருஷ்ணன் நடித்திருப்பார். அவர் ஒரு காட்சியில் ‘துப்பாக்கியால் உன்ன சுடல’ என்று வசனம் பேசுவார். அஞ்சலை என்ற கேரக்டரில் நடித்த நான் ‘அதற்கு நான் அஞ்சல…’ என்று சொல்வேன். அந்த காட்சியும் இன்னும் என் நினைவில் பசுமையாக உள்ளது.
சினிமாவில் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ள இந்த இடைவெளி தற்காலிகமானதுதான். உடல்நிலை தேறியதும் மீண்டும் பழைய வேகத்தில் சினிமாவில் நடிப்பேன். ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்பு நெகிழ வைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மனோரமா பேட்டியளித்துக் கொண்டிருந்த போது அவரை பார்ப்பதற்காக தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரேவதி, தேன்மொழி ஆகிய 2 ரசிகைகள் அங்கு வந்தனர். அவர்கள் மனோரமாவை பார்த்து விட்டு சென்ற சிறிது நேரத்தில் மலேசியாவில் இருந்து வந்த ரசிகைகள் தீபா, லட்சுமி, ஆனந்தவல்லி, ரசிகர் கார்த்திக் ஆகியோர் மனோரமாவை சந்திக்க ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினார்கள்.
அவர்கள் அனைவரும் மனோரமாவின் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டதுடன் மனோரமாவுடன் சேர்ந்து தங்கள் செல்போனில் போட்டோவும் எடுத்துக் கொண்டனர்.
ரசிகை தீபா கூறும்போது, ‘‘எனது தாய் எம்.ஜி.ஆர்., சிவாஜி, மனோரமா ஆகியோரின் தீவிர ரசிகை. இன்று மனோரமாவுடன் நான் எடுத்துக் கொண்ட போட்டோக்களை அவரிடம் சென்று காண்பித்தால் மிகவும் சந்தோஷப்படுவார். பழம் பெரும் நடிகையான அவரை சந்தித்ததில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும்’’ என்றார்.
தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரேவதி கூறும்போது, ‘‘மனோரமாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அவர் ரசிகர்களிடம் நிறைய பேச வேண்டும் என்று நினைக்கிறார். அவரது கண்களில் இருந்து வரும் கண்ணீரே அதனை உணர்த்துகிறது’’ என்றார்.
பின்னர் மனோரமாவிடம் உங்களுக்கு எத்தனை வயதாகிறது என்று கேட்டோம். அதற்கு பலமாக சிரித்துக் கொண்டே என்ன… 16 வயது இருக்குமா? என்று எதிர்கேள்வி கேட்டார்.
இந்த உற்சாகமும், சிரிப்புமே ஆச்சி மனோரமாவை இன்னும் நீண்ட நாட்கள் வாழ வைக்கும் என்பதில் ஐயமில்லை.