-----------------------------------------
இந்திய கிராமப்புற பெண்கள் இடையே இணையதள விழிப்புணர்வை ஏற்படுத்த கூகிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிராம பெண்களுக்கு இணையதள கல்வியை வழங்கும் திட்டத்தை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இணையதளத்தை எப்படி பயன்படுத்துவது என்றும், இதனால் கிடைக்கும் பயன்கள் குறித்தும் பெண்களுக்கு சொல்லித் தரப்படும் என்றும் கூகிள் நிறுவன இயக்குனர் சந்தீப் மேனன் தெரிவித்தார். கிராமப்புறங்களை சேர்ந்த 5 லட்சம் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் இணையதள கல்வி அடுத்த 2 மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Services
- Home
- AnnaUnivNews
- Cricket News
- தமிழில் தொழில்நுட்ப தகவல்கள்
- School News
- Examination Tips
- Health Tips
- Samaiyal Tips
- Facebook Tricks
- Blogger Tips
- Computer Tricks
- SIM details
- Celebrity Birthdays(Daily)
- Cinema News
- watch trailers
- Colleges Info(தமிழ்நாடு)
- Langauges Learning
- GTA Save Games
- Earn Money Online
- Model Letters
- Dote News
- General Knowledge
- Placement Info
- Gate Books
- About
- Contact
- Privacy Policy
Sunday 28 June 2015
பெண்களுக்கு இணையதள கல்வி : கூகிளின் புதிய திட்டம் தொடக்கம்
பிளஸ் 2 தேர்வில் தோல்வி அல்லது குறைந்த மதிப்பெண்கள் எடுத்துள்ளீர்களா?
பிளஸ் 2 தேர்வில் தோல்வி அல்லது குறைந்த மதிப்பெண்கள் எடுத்துள்ளீர்களா? அடுத்து செய்யவேண்டிய சில வழிமுறைகள்
------------------------------------------------
சென்னை: பிளஸ் 2 தேர்வில் தோல்வி அல்லது குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்கும் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இத்துடன் சோர்ந்துவிடாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகள் நீங்கள் பின்பற்றலாம்.* தோல்வி ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து உங்கள் ஆசிரியர், பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் பேசுவதனால் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி சில நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்.
* உங்களின் அனைத்து வாய்ப்புகளையும் சற்று சிந்தித்துப் பாருங்கள், மீண்டும் தேர்வு எழுதுவது, படிக்கும் முறையை மாற்றம் செய்வது அல்லது துறையை மாற்றிக்கொள்வது ஆகியவற்றை பற்றி ஆலோசித்து முடிவெடுங்கள்.
* உங்கள் திறமை என்னவென்று சிந்தித்து உங்களுக்கு பிடித்த, உங்களால் சிறப்பாக செயல்படமுடிந்த துறை சார்ந்த படிப்புகளில் சேர்வது பற்றி யோசியுங்கள்.
* இந்த கல்லூரியில் தான் சேரவேண்டும் அல்லது இந்த துறையில் மட்டும் தான் சேர்வேன் என்று பிடிவாதத்துடன் இருக்காமல், கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பது பற்றி யோசியுங்கள்.
* அடுத்து செய்யவேண்டியது என்ன என்பது பற்றி சிந்திக்கும் வேளையில், நேர்மறை எண்ணத்துடனும் புத்துணர்ச்சியுடனும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுங்கள். வாழ்த்துக்கள்...
புத்தகத்துக்கு குட்பை
புத்தகத்துக்கு குட்பை : கணினி மூலம் மாணவர்களுக்கு கல்வி புதிய திட்டம் துவக்கம்
------------------------------------------------------
பெங்களூரு: கர்நாடக மாநில அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் இல்லாமல் கணினி மூலம் பாடம் நடத்தும் புதிய திட்டத்தை கல்வி இயக்குனரகம் மேற்கொண்டுள்ளது. பொதுவாக அரசு பள்ளிகளில் தரமான கல்வி கிடைப்பதில்லை என்பதால், வசதிப்படைத்தவர்கள் தொடங்கி கூலி வேலை செய்வோர் வரை தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்.
நகரபுறங்களில் மட்டுமே இருந்த இக்கலாச்சாரம், தற்போது ஊரக பகுதியிலும் வேரூன்றி உள்ளது. அரசு பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால், நடப்பு கல்வியாண்டில் 3 ஆயிரத்து 173 கன்னட பள்ளிகளை மூடிவிட அரசு முடிவு செய்தது. இதற்கு பல தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, பள்ளிகளை மூடும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Computer knowledge - kerala first
இந்தியாவில் கணினி அறிவில் கேரளா முதலிடம்!
--------------------------------------------------
கொச்சி: இந்திய அளவில் கணினி கல்வி பெற்ற மாநிலங்களின் பட்டியலில் கேரளா முதல் இடத்தில் உள்ளது. கேரளாவில் 49% குடும்பங்களில் வீட்டிற்கு ஒருவர் கணினி கல்வி பயின்றவராக உள்ளார். கடந்த வாரம் வெளியான 2014 ஆம் ஆண்டிற்கான கல்வி அறிக்கையில் கல்வி சார்ந்த பல முக்கிய விவரங்கள் வெளியிடப்பட்ட்து. இதன்படி, இந்தியாவில் 22 சதவீத குடும்பங்களில் வீட்டிற்கு ஒருவர் கணினி கல்வி பயின்றவராக உள்ளனர்.
மாநில அளவில் 49 சதவீதத்தினர், அதாவது 39.17 லட்சம் குடும்பங்களில் ஒருவருக்கு கணினி அறிவு இருப்பதால் கேரளா கணினி கல்வியறிவில் நாட்டின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. கேரளாவை அடுத்து பஞ்சாப், சிக்கிம் மாநிலங்கள் 47% மற்றும் 43% பெற்று அடுத்தடுத்த இடத்தை பெற்றுள்ளன.
கேரளாவில் 97 சதவீத கிராமங்கள் ஒவ்வொன்றிலும் இண்டர்நெட் மையங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Visual communication details
'அன்று படம்... இன்று பாடம்’ விஸ்வரூபமாக உருவெடுத்த விஷூவல் கம்யூனிகேசன்
-------------------------------------------------------
சினிமா.... அப்போதைய காலகட்டத்தில் சினிமா துறை சார்ந்து படிக்க தனியாக பாடங்கள் எதுவும் இல்லை. ஆனால், தற்போது வளர்ச்சியடைந்து வரும் நவீன காலத்தில் சினிமா, பத்திரிகை, அனிமேஷன், விளம்பரம் என பல்வேறு துறைகளுக்கு என தகுந்த படிப்புகள் உருவாகி உள்ளது. சமீப காலமாக கம்ப்யூட்டர் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக மாணவர்களிடம் கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளிலே ஆர்வம் அதிகரிக்க துவங்கியுள்ளது. பிளஸ் 2 படிப்பிற்கு பின் கல்லூரியில் எந்த துறையை தேர்வு செய்யலாம் என்பது மாணவர்களுக்கு ஒரு சவாலாகும். தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல் போன்று தற்போது மாணவர்களிடம் ஊடகத்துறை என்னும் விஷூவல் கம்யூனிகேஷன் பிரபலமாகி வருகிறது. சினிமா, ஊடகம், அனிமேஷன்
போன்ற பிரிவுகளை உள்ளடக்கிய இந்த பட்டப்படிப்பு தற்போது அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இந்த துறையை தேர்வு செய்து படித்தால் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும் என்கின்றனர் விஸ்காம் துறை பேராசிரியர்கள். பிளஸ் 2 வகுப்பில் அறிவியல், கலைப் பிரிவு என எந்தப் பிரிவை படித்தவர்களும் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கலாம். விஷூவல் கம்யூனிகேஷன் என்பது காட்சி ஊடகங்கள் மூலம் தொடர்பு கொள்ளுதலாகும். இதன் மூலம் சிந்தனைகளும், செய்திகளும் படித்து மற்றும் பார்த்து புரிந்து கொள்ளும் வடிவங்களாக காட்டப்படுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரிகளில் விஸ்காம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
விஸ்காம் பிரிவில் மீடியா தொடர்பான புகைப்படம் எடுத்தல், குறும்படம் எடுத்தல், அனிமேஷன், விளம்பர டிசைனிங் போன்ற பல்வேறு வகை பாடத்திட்டங்கள் உள்ளது. இதில் பிரின்ட் மீடியா, எலக்ட்ரானிக் மீடியா ஆகிய பாடத்திட்டங்களின் அடிப்படையில் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது. பிரின்ட் மீடியா பிரிவில் விசிட்டிங் கார்டுகள், வாழ்த்து அட்டைகள், அழைப்பிதழ்கள் தயாரித்தல் மற்றும் இதை கம்ப்யூட்டர் முறையில் உருவாக்கும் முறைகள், பத்திரிகை தொடர்பான தனித்திறமைகள் வளர்த்து கொள்ளுதல், செய்தி சேகரிக்கும் விதங்கள், செய்தி குறிப்பெடுக்கும் விதங்கள், செய்திகளை அளிக்கும் விதங்கள் குறித்து பயிற்சி மூலமாகவும், எழுத்து மூலமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
எலக்ட்ரானிக் மீடியா பிரிவில் கம்ப்யூட்டர் மூலமாக நியாண்டோ சாப்ட்வேர், சவுண்ட் போர்ஜ் சாப்ட்வேர், மேக்ரோ மீடியா பிளாஸ், கோரல் டிரா உள்ளிட்ட சில சாப்ட்வேர் தொழில்நுட்பங்கள் கற்றுத் தரப்படுகிறது. மேலும், செயல்முறையாக புகைப்படம் எடுத்தல், கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரைப்படம் உருவாக்கும் பயிற்சி, 2 டி மற்றும் 3 டி அனிமேஷன்கள் பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. ஒரு சில கல்லூரிகளை தவிர, பெரும்பாலான கல்லூரிகளில் இப்பாடப்பிரிவில் சேர தனியாக நுழைவு தேர்வுகள் எதுவும் இல்லை.
எதில் வாய்ப்பு?
இளங்கலை பிஎஸ்சி விஷூவல் கம்யூனிகேஷன் படித்து முடித்தவர்களுக்கு மல்டி மீடியா, அனிமேஷன் துறை, விளம்பர துறை, புகைப்படம் எடுத்தல், தொலைகாட்சி கிராபிக் துறைகள் போன்றவற்றில் வேலை வாய்ப்புகள் உள்ளது. இதில் பத்திரிகை துறை சார்ந்த படிப்புகளை படித்தவர்களுக்கு பல்வேறு பத்திரிகைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளது. திரைப்படம் சார்ந்த பிரிவை படித்தவர்கள் திரைப்படத்துறையில் சேரலாம். புகைப்படம் எடுத்தல் தொடர்பாக படித்தவர்கள் சொந்தமாக புகைப்படம் எடுக்கும் ஸ்டியோ வைத்து கொள்ளலாம்.
மேல்படிப்புகள்: இளநிலை முடித்தவர்கள் விருப்பப்பட்டால் முதுகலை மாஸ் கம்யூனிகேசன் மீடியா பட்டப்படிப்பை படிக்கலாம். முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் எம்பிஏ, பிஎச்டி போன்ற படிப்புகளை படிக்கலாம். இதில் பட்டம் பெறுபவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு உள்ளது. சிந்தனை திறனும், செயலாக்க முறையும் இருந்தால் இத்துறையில் சாதிக்கலாம்.