WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Monday 18 May 2015

படர்தாமரைக்கான சில எளிய கை வைத்தியங்கள்!!!

உங்கள் சருமத்தில் அழற்சி போன்று வட்ட வடிவில் சிவப்பாக ஏதேனும் இருந்தால், அது தான் படர்தாமரை. இந்த படர்தாமரையானது பூஞ்சையினால் ஏற்படக்கூடியது. மேலும் இந்த படர்தாமரை சருமம், நகம், ஸ்கால்ப், உள்ளங்கை அல்லது பாதங்களில் தான் அதிகம் ஏற்படும். இந்த நிலை முற்றினால், அது கடுமையான அரிப்புகளை ஏற்படுத்தும்.

மேலும் படர்தாமரை பரவக்கூடிய ஒன்று. அதிலும் சருமத்துடன் தொடர்பு கொண்டாலோ அல்லது அவர்கள் பயன்படுத்திய துணியை பயன்படுத்தினாலோ, இது பரவும். இது சருமத்தில் ஏற்படும் மற்ற பிரச்சனைகளைப் போன்றது அல்ல. எனவே படர்தாமரை உங்களுக்கு இருந்தால், அதனைப் போக்க உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதற்காக பல க்ரீம்கள், ஆயின்மெண்ட் போன்றவை கடைகளில் விற்கப்படுகிறது. இருப்பினும் இயற்கை மருத்துவத்தைப் போல் எதுவும் பலன் தருவதில்லை.

முக்கியமாக இந்த பிரச்சனை பெரியோர்களை விட குழந்தைகளுக்கு தான் அதிகம் ஏற்படும். எனவே குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

பூண்டு :-

பூண்டுகளில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களினால், இதன் நன்மைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அதிலும் படர்தாமரையை நீக்க, பூண்டு பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு பூண்டை அரைத்து சாறு எடுத்து, அதனை படர்தாமரை உள்ள இடங்களில் தடவி வர வேண்டும்.

தேங்காய் எண்ணெய் :-

தேங்காய் எண்ணெயிலும் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. இதனைக் கொண்டு பல பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். அதிலும் படர்தாமரை இருந்தால், அவ்விடத்தில் தேங்காய் எண்ணெயை தொடர்ந்து தடவி வர, படர்தாமரை நீங்குவதோடு, அது பரவுவதும் தடுக்கப்படும்.

ஆப்பிள் சீடர் வினிகர் :-

ஆப்பிள் சீடர் வினிகரில் பூஞ்சை காளான் எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ளது. இதனால் இவற்றைக் கொண்டு படர்தாமரைக்கு விரைவில் நிவாரணம் காணலாம்.

சூடம்/கற்பூரம் :-

படர்தாமரைக்கு நல்ல தீர்வை கற்பூரமும் வழங்கும். ஏனெனில் கற்பூரத்திலும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ளது.

கடுகு எண்ணெய் :-

கடுகு அல்லது அதன் எண்ணெயை தினமும் படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வந்தால், படர்தாமரை மறையும்.

உப்பு மற்றும் வினிகர் :-

உப்பை வினிகருடன் சேர்த்து கலந்து, படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வந்தால், நாளடைவில் படர்தாமரை மறைவதைக் காணலாம்.

ஆலிவ் எண்ணெய் :-

ஆவில் எண்ணெயை படர்தாமரையின் மீது தடவி வர, விரைவில் அது போய்விடும்.

மஞ்சள் தூள் :-

மஞ்சள் தூளின் மகிமையினால், பாக்டீரியாக்கள் மட்டுமின்றி, பூஞ்சையின் தாக்குதல்களையும் தடுக்கலாம். அதிலும் இதனை படர்தாமரை உள்ள இடத்தில் தினமும் தடவி வந்தால், படர்தாமரை நீங்கும்.

பப்பாளி :-

பப்பாளியில் உள்ள பூஞ்சை காளான் எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சரும பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தரும். அதிலும் பச்சை பப்பாளியை அரைத்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி வர வேண்டும்.

மிகவும் சோர்வாகத் தெரிகின்றதா? மாடி ஏறினால் சீக்கிரம் மூச்சு வாங்குகின்றதா?

மிகவும் சோர்வாகத் தெரிகின்றதா? மாடி ஏறினால் சீக்கிரம் மூச்சு வாங்குகின்றதா? உங்களுக்கு இரும்பு சத்து குறைவாக இருக்கின்றதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பெண்களாய் இருந்தால் இது மிகவும் அவசியம். இரும்பு சத்தே ஆக்ஸிஜனை உடல் முழுவதும் எடுத்துச் செல்கின்றது.

ரத்த சிவப்பணுவில் உள்ள முக்கியமான பொருள் இதுவே. ரத்த சிவப்பணு எண்ணிக்கை குறையும் பொழுது இரும்பு சத்து குறைவது ரத்த சோகை எனப்படும். தேவையான அளவு சிவப்பணுக்கள் இல்லாவிட்டால் தேவையான ஆக்ஸிஜன் உடலுக்குக் கிடைக்காது. தேவையான ஆக்ஸிஜன் இல்லாத போது உடல் சோர்வாகும்.

மூளை சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்படும். கர்ப்ப காலத்தில் ரத்த சோகை அதிகமாகும். இதனால் குழந்தை சிறிய அளவிலோ அல்லது உரிய காலத்திற்கு முன்பாகவோ பிறக்கலாம். இரும்பு சத்து திசுக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், சருமம், முடி, நகம் இவை நன்கு பராமரிக்கப்படுவதற்கும் அவசியமானது.

வயது மற்றும் ஆண், பெண், ஒருவரது உடல்நிலையை பொறுத்து இரும்பு சத்து தேவைப்படுகின்றது. குழந்தைகளுக்கு பெரியவர்களை விட அதிக இரும்பு சத்து தேவைப்படுகின்றது. ஏனெனில் அவர்கள் வேகமாக வளரும் பருவத்தில் இருக்கின்றனர். 4, 8 வயது வரை 10 மி.கி. இரும்பு சத்து அன்றாடம் அவசியம்.

9 முதல் 13 வயது வரை 8 மி.கி. அளவாவது தேவை. பெண்களுக்கு 19-50 வயது வரை தினம் 18 மி.கி. இரும்பு சத்து தேவை. ஏனெனில் மாத விடாய் காலத்தில் அவர்களுக்கு ரத்த இழப்பு ஏற்படுகின்றது. ஆனால் ஆண்களுக்கு இந்த வயதில் தினம் 8 மி.கி. இரும்பு சத்தே போதுமானது. பெண்களுக்கு மாத விடாய் நின்ற பிறகு அன்றாடம் 8 மி.கி. இரும்பு சத்தே போதுமானது. உணவிலிருந்தோ அல்லது ஊட்டசத்திலிருந்தோ ஒருவர் இரும்பு சத்தை பெற முடியும்.

கூடுதல் இரும்புச்சத்து தேவைப்படுவது எப்போது?

* கர்ப்பகாலம்.
* தாய் பால் கொடுக்கும் காலம்.
* வயிற்றில் புண் (ரத்த இழப்பு ஏற்படுத்தினால்).
* வயிறு, உணவுப் பாதையில் பிரச்சினை. அதனால் தேவையான அளவு இரும்பு சத்தினை உறிஞ்ச முடியாமல் போகுதல்.
* அதிக நெஞ்செரிச்சல் மாத்திரைகளை சாப்பிடுவது குடல் இரும்பு சத்து எடுத்துக் கொள்வதை தடுக்கும்.
* ஏதோ காரணத்தினால் (உ.ம். ஆபரேஷன்) எடை குறைந்த பிறகு.
* மிக அதிக உடற்பயிற்சி சிவப்பணுக்களை அழிக்கும்.
* சுத்த சைவமாக இருப்பவர்களுக்கு தாவர வகை இரும்பு சத்தினை உடலால் நன்கு எடுத்துக் கொள்ள முடிவதில்லை.

இரும்பு சத்து குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகள்:

* மூச்சுவாங்கும்.
* படபடப்பு இருக்கும்.
* கை, கால்கள் ‘ஜில்’லென இருக்கும்.
* குழந்தைகள் பல்பம், மண் சாப்பிடுவர்.
* வளைந்த உடையும் நகம், முடி கொட்டுதல்.
* வாய் ஓரங்களில் வறட்சி புண் காணப்படும்.

இரும்பு சத்தை மாத்திரையாக எடுத்துக் கொள்ளும் பொழுது...

* வயிறு பாதிப்பு
* கறுத்த வெளிப்போக்கு
* வாந்தி, பிரட்டல்
* மலச்சிக்கல்
* வயிற்றுப் போக்கு

போன்றவை ஏற்படலாம். நார்சத்தை கூட்டிக் கொண்டால் இப்பிரச்சினைகள் தீரும். உடலுக்கு ஆக்ஸிஜன் எந்த அளவு முக்கியமோ அந்த அளவு தாது உப்புக்களும் முக்கியம். உடலின் 5 சதவீத எடை இந்த தாது உப்புக்களே. இவை உடல் செயல்பாட்டுக்கும், மூளை செயல்பாட்டுக்கும் அவசியமானது.

பல், எலும்பு, திசுக்கள், ரத்தம், தசை, நரம்பு இவை அனைத்திற்கும் தாது உப்புக்கள் அவசியமாகின்றது. உடலில் பல செயல்களில் தாது உப்புக்கள் கிரியா ஊக்கி போல் வேலை செய்கின்றது. நரம்பின் மூலம் செய்திகள் பரவ, செரிமானம் நடைபெற வைட்டமின்கள் சீராக வேலை செய்ய தாது உப்புக்களே அவசியம். வைட்டமின் ‘சி’ சத்து உடலுக்கு நன்கு கிடைக்க கால்ஷியம் தேவை. வைட்டமின் ‘ஏ’ சத்து நன்கு உடலில் உறிஞ்சப்பட ‘ஸிங்க்’ தேவை.

பிகாம்ப்ளக்ஸ் வைட்டமின் சத்துக்கள் கிடைக்க ‘மக்னீஷியம்‘ தேவை. இப்படி பல உதாரணங்களைச் சொல்லலாம். ‘ஹீம்’ எனப்படும் இரும்பு சத்து அசைவ உணவிலிருந்து எளிதாக உடலில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. என்றாலும், தாவர வகை இரும்பு சத்தே சிறந்தது என ஆய்வுகள் கூறுகின்றன. இரும்பு சத்து உடைய சைவ உணவுகள்:

* உலர் திராட்சை - இதை நாள் ஒன்றுக்கு 4 டேபிள் ஸ்பூன் வரை எடுத்துக் கொள்ளலாம். பழங்களுடன் கலந்து உண்ணும் பொழுது இதில் உள்ள இரும்பு சத்து எளிதாக உடலில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

* பயிறு வகைகள்

* பரங்கி, பூசணி விதைகள்

* சோயா பீன்ஸ்

* கீரை வகைகள்

* எள்

* கை குத்தல் அரிசி

* ஓட்ஸ்

* உருளைக்கிழங்கு

* சோயா பன்னீர்

* முழு கோதுமை

* பச்சை காலிப்ளவர்

* சூரிய காந்தி விதை

* பச்சை பட்டாணி

* அடர்ந்த சாக்லெட். ஒரு தாது உப்பு செயல்பட மற்ற தாது உப்புகளும் உடலில் தேவையான அளவு இருக்க வேண்டும். இவைகளை ‘எலக்ட்ரலைட்ஸ்’ என்பர். இவை நம் உடலில் மின்சாரத்தை தாங்கிச் செல்பவை. பச்சை கீரை, பச்சை காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் இவைகளில் தாது உப்புக்கள் கிடைக்கின்றன.

தாது உப்புகள் விவரம்:

கால்ஷியம் க்ரோபியம் காப்பர் புளோரைட் அயோடின் இரும்பு மக்னீசியம் மங்கனீஸ் பாஸ்பரஸ் செலினியம் ஸிங்க் மேஸிமிடனம் என பிரிவுபடும்.

Thanks-PuradshiFm.

பாட்டி வைத்தியம் :-

* நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் குணமாகும். இதயமும் வலுவடையும்.

* இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குணமாகும்.

* குப்பை மேனி இலை, மஞ்சள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து உடலில் பூசி ஒரு மணிநேரம் கழித்து குளித்தால் தோல் நோய் குணமாகும்.

* நாய் கடித் தால், அந்த இடத் தில் எருக்கண் பாலை விட்டால் விஷம் முறியும்.

* ஒரு டம்பளர் நீரில் இஞ்சி, சீரகம், கருவேப்பிலை ஆகிய மூன்றையும் போட்டு கொதித்த பின்னர், ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜூரணம் குணமாகும்.

* ஆரஞ்ச் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ஈரல் சம்பந்தமான பிரச்னைகள் தீரும்.

* அன்னாசி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் கண் நோய் குணமாகும்.

* மஞ்சள் தூள், அருகம்புல் மற்றும் சுண்ணாம்பு கலந்து நகச்சுற்று உள்ள இடத்தில் பூசி வந்தால் குணமாகும்.

* அத்தி பழத்தை தினமும் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.

வைட்டமின் குறைபாடு உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்

வைட்டமின்கள் உணவில் கிடைக்கும் ஒரு வகை கூட்டுப் பொருள். உடலின் ஆரோக்யத்திற்கு இவை சிறிய அளவே

தேவைப்படுகின்றன. இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்படுகின்றது. அவை,

கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் - ஏ, டி, ஈ, கே.

தண்ணீரில் கரையும் வைட்டமின்கள் - பி1, பி6, பி7, பி12 பிரிவுகள், வைட்டமின் சி.

வைட்டமின் குறைபாடுகள் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

வைட்டமின்கள் எரிசக்தி போல் அதிக அளவில் தேவைப்படாது.

இருப்பினும், மருத்துவர்கள் சில சமயங்களில் வைட்டமின் மாத்திரைகளை சிபாரிசு செய்கின்றனர். மூன்று விஷயங்களுக்காக இது

சிபாரிசு செய்யப்படுகின்றது.

* உடலில் காணப்படும் வைட்டமின் சத்து குறைபாடு.

* குறைபாடு ஏற்படக் கூடிய காலங்களை தவிர்க்க. (உ.ம்) கர்ப்ப காலம், அறுவை சிகிச்சை, நோய் பாதிப்பு.

* சில நோய் பாதிப்புகளை தவிர்ப்பதற்கான முன் நடவடிக்கையாக.

மருத்துவரின் அறிவுரையின் பேரிலேயே வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். சைவ உணவு உண்பவர்களுக்கு

கண்டிப்பாக வைட்டமின் பி12 சத்து மாத்திரை தேவைப்படும்.

அன்றாடம் வைட்டமின் சத்து என்பது இன்சூரன்ஸ் பாலிஸி போன்றது. ஆகவேதான் ஒரு மல்டி வைட்டமின் என்பது அதிக சிபாரிசு

பெறுகின்றது.

பொதுவாக :

* ஆரோக்கியமான உணவிவை உட்கொள்ளுங்கள்.

* மருத்துவ ஆலோசனையோடு ஒரு சத்து மாத்திரையை எடுத்துக் கொள்ளுங்கள்.

* வைட்டமின் ‘டி’ சத்து தேவையா என அறிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

* மிக அதிக அளவிலான வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது சரியாகாது.

நீரில் கரையும் வைட்டமின்கள் :

9 வகை வைட்டமின்கள் நீரில் கரைபவை.

* போலேட் எனப்படும் இந்த வைட்டமின் பிறவி குறைபாடுகளை நீக்கும்.

* தயமின் எனப்படும் பி1 குறைபாட்டால் சோர்வு, நரம்பு பாதிப்பு, மூளை பாதிப்பு ஏற்படும். ஓட்ஸ், கைகுத்தல் அரிசி, காய்கறி,

உருளைக்கிழங்கு, முட்டை இவற்றிலிருந்து இந்த வைட்டமின் கிடைக்கும்.

* ரிபோப்ளேவின் எனப்படும் பி2 குறைபாட்டால் நாக்கு வீக்கம், வாய் ஓரத்தில் புண் ஏற்படும். இந்த வைட்டமின் பால் பொருட்கள்,

வாழைப்பழம், பச்சை வாழைப்பழம் இவற்றில் கிடைக்கும்.

* நியாசின் எனப்படும் பி3 சரும பாதுகாப்பு, ஜீரண செயல்பாடுமுறை, கெட்ட கொழுப்பு நீக்குதல் போன்றவற்றை கொடுக்கும். ஆயினும்

அதிகம் உட்கொண்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும். அசைவம், மீன், முட்டை, காய்கறி இவற்றில் பி3 வைட்டமின் சத்து கிடைக்கும்.

* பன்டோதினிக் ஆசிட் எனப்படும் பி5 வைட்டமின் உடல் உணவிலிருந்து சத்து எடுத்துக் கொள்ள உதவும். சில ஹார்மோன்கள்,

கொலஸ்டிரால் உருவாக்கவும் உதவுகின்றது. குறைபாடு ஏற்படும் பொழுது பராஸ்திஷியா என்ற பாதிப்பு ஏற்படும். வைட்டமின் பி5

அதிகமானால் வயிற்றுப் போக்கு, பிரட்டல், நெஞ்நெரிச்சல் பி5 சத்து அசைவ உணவு, மீன், முட்டை, காய்கறி இவற்றிலிருந்து

கிடைக்கின்றது.

* பிரிடாக்ஸின் எனப்படும் பி6 வைட்டமின் சத்து உடலின் ரசாயன மாற்றங்களுக்கு உதவுகின்றது. இரத்த சோகை இதன் குறைபாட்டால்

ஏற்படும். இந்த சத்து அதிகமானால் நரம்பு பாதிப்பு ஏற்படும். அசைவம் காய்கறி, கொட்டைகள், வாழைப்பழம் இவற்றில் பி6 வைட்டமின்

சத்து கிடைக்கிறது.

* பயோடின் எனப்படும் பி7 வைட்டமின் சத்தில் குறைபாடு ஏற்பட்டால் சரும பாதிப்பு, குடல் பாதிப்பு ஏற்படும். முட்டை, கடலை, கீரை

இவற்றில் எளிதாய் இச்சத்து கிடைக்கும்.

* சயன கோபாளமின் எனப்படும் வைட்டமின் பி12 ரத்த அணுக்கள் நரம்பு மண்டல செயல்பாடு ஆகியவற்றுக்கு அத்தியாவசமானது.

இதன் குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படும். அசைவ உணவிலேயே இது அதிகம் கிடைக்கின்றது.

* வைட்டமின் சி தான் உடலில் அதிகமாக காணப்படும் கொலாஜன் எனப்படும் புரதம் உருவாக காரணம் ஆகின்றது. பல், சருமம்,

எலும்பு, ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருக்க இந்த வைட்டமின் மிகவும் அவசியமாகின்றது. பழங்கள், காய்கறிகள், கல்லீரல்

இவற்றில் அதிகம் கிடைக்கின்றது.

ஆய்வுகள் பி வைட்டமின் பிரிவுகள் ஞாபகத்திறனை காப்பதாகக் கூறுகின்றன.

இதே போன்று வைட்டமின் சி, ஈ, பீட்டாகரோட்டின்

இவைகளும் மூளை நரம்புகளை காத்து வலிவூட்டுகின்றன. ஆயினும் ஆய்வுகள் கீரை, பருப்பு, ஆரஞ்சு, சோயா இந்த மாதிரி உணவுப்

பொருட்களின் மூலம் பெறுவதையே வலியுறுத்துகின்றன.

வைட்டமின் பி பிரிவு குறைபாடுகளை சோர்வு, அதிக படபடப்பு, வெளிர்ந்த சருமம், வறண்ட நாக்கு, ஈறில் இரத்த கசிவு, வயிறு

பாதிப்பு, எடை குறைதல் போன்ற அறிகுறிகளின் மூலம் அறிய முடியும்.

அதிக வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதும் ஆபத்தே என்பதனை நன்கு உணர வேண்டும். வைட்டமின் ஏ, டி, ஈ, கே

ஆகியவை கொழுப்பில் கரையும் வைட்டமின்களாகும். இவை அதிக நாட்கள் உடலில் தங்கும். அதிக அளவு எடுத்துக் கொள்வதும்

உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

வைட்டமின்.

சூரியன் வைட்டமின் டி

சூரியன்

வைட்டமின் டி என பொதுவாக சொல்லபட்டாலும் அதில் இரு வகைகள் உண்டு. ஒன்று தாவரங்களில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி2. இன்னொன்று சூரியன் மூலம் நமக்கு கிடைக்கும் வைட்டமின் டி3. இந்த இரண்டையும் ஒப்பிடவே முடியாது. டி2வால் நமக்கு எப்பலனும் கிடையாது. ஆனால் டி3 இருக்கே? அதுமட்டும் ஒரு மருந்தாக கடையில் விற்க்கபட்டால் அதை கண்டுபிடித்தவருக்கு நோபல் பரிசே கிடைக்கும் எனும் அளவுக்கு முக்கிய மருந்து இது

டயபடிஸ் என்பது இப்போது வைட்டமின் டி3 குறைபாட்டால் வருவது என கண்டறிந்து வருகிறார்கள். டைப் 1 டயபடிஸ் ஏன் வருகிறது, எதற்கு வருகிறது என புரியாமல் முழித்தார்கள். ஆனால் குழந்தை பிறந்தவுடன் அதை மதியம் வெயிலில் காட்டி எடுத்தால் அக்குழந்தைக்கு டைப் 1 டயபடிஸ் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. அதேபோல பிள்ளையின் தாய்க்கு வைட்டமின் டி3 பற்றாகுறை இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு டைப்1 டயபடிஸ் வரும் வாய்ப்பும் அதிகம்.

இது குறித்து பின்லாந்தில் ஒரு ஆய்வு நடத்தபட்டது. பின்லாந்து மிக குளிரான நாடு. சூரியன் அடிக்கடி எட்டிபார்க்காத தேசம். இங்கே தான் உலகிலேயே அதிக அளவில் டைப் 1 டயபடிஸ் இருக்கிறது. 1960ல் குழந்தைகளுக்கு தினம் 2000 ஐயு அளவு டி3 வைட்டமின் கொடுக்க பரிந்துரை செய்யபட்டது. 30 வருடம் கழித்து மறுஆய்வு செய்ததில் டைப்1 டயபடிஸ் வந்த குழந்தைகளின் தாய்மார்கள் பலரும் அவர்களுக்கு வைட்டமின் டி3 சப்ளிமெண்ட் கொடுக்கவேண்டும் என்பதே தமக்கு தெரியாது எனகூறீனார்கள்.

அதேசமயம் டி3 வைட்டமின் டைப் 1 டயபடிஸ் வராமல் தடுக்குமே ஒழிய, வந்த டைப் 1 டயபடிஸை குணபடுத்தாது. ஆக டைப்1 வராமல் தடுக்க வைட்டமின் டி3 மிக, மிக அவசியம்,..பிள்ளைக்கும், தாய்க்கும்.

சூரிய ஒளி நம் தோலில் படுகையில் நம் தோல் அதை வைத்து டி3 வைட்டமினை தயாரிக்கிறது. ஆனால் மருந்து, மாத்திரையில் கிடைக்கும் வைட்டமின் டி3க்கும் நம் உடல் உற்பத்தி செய்யும் டி3க்கும் இடையே வேறுபாடு உள்ளது. டி3 என்பது கொழுப்பில் கரையும் வைட்டமின். ஆக டி3 மாத்திரை எடுத்தால் அதனுடன் உறைகொழுப்பும் சேர்த்து எடுத்தால் தான் அது உடலில் சேரும். ஆனால் சூரிய ஒளியால் கிடைக்கும் டி3க்கு இச்சிக்கல் எல்லாம் இல்லை. உடல் நேரடியாக அதை ஹார்மோனாகவே தயாரிக்கிறது. அதனால் மருத்துவர்கள் இதை "சூரிய ஹார்மோன்" என அழைக்கிறார்கள். டி3 ஹார்மோன் தய்ராய்டு ஹார்மோன், டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோன் போல உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் மிக அவசியமான ஹார்மோன். அது நம் உடலில் சேர உறைகொழுப்பு எல்லாம் அவசியமில்லை.

கொழுப்பில் கரையும் ஹார்மோன் என்பதால் டி3 அளவுகள் அதிகரித்தால் அது சிறுநீரில் கலந்து வெளியே வந்துவிடாது. ஆக ஓவர்டோஸ் ஆகும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் சூரிய ஒளியால் கிடைக்கும் டி3ல் இப்பிரச்சனையும் இல்லை. நம் உடலுக்கு போதுமான அளவு டி3 கிடைத்தவுடன் உடல் தானாக டி3யை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடும்.

டி3 கால்ஷியம் மேலாண்மை மற்றும் க்ளுகோஸ் மேலாண்மையில் பெரும்பங்கு வகிக்கிறது. கால்ஷியம் இருந்தால் எலும்புகள் வலுப்பெறும் என முன்பு நம்பினார்கள். ஆனால் டி3 குறைபாடு இருந்தால் அதன்பின் நீங்கள் லிட்டர் லிட்டராக பால் குடித்தாலும் அதனால் பலனில்லை. பாலில் உள்ள கால்ஷியம் முழுக்க எலும்புகள், பற்களில் சென்று சேராமல் கிட்னி, இதயம் என படிந்துவிடுவதால் எலும்புகள் பலமிழந்து ஆத்ரைட்டிஸ், ஒஸ்டிரியோபொசிஸ் வரும்.

ஒருவருக்கு மாரடைப்பு ரிஸ்க் வருகிறதா என்பதை எப்படி அறிவது? கால்ஷியம் ஸ்கான் எடுத்தால் போதும். இதயநரம்பு சுவர்களில் கால்ஷியம் படிந்தால் அவருக்கு மாரடைப்பு வரும் என அறியலாம். ஆக ஆச்டிரியோபொசிஸ் சொசைட்டி இப்பல்லாம் "ஆச்டிரியோபொசிஸ் வராமல் இருக்க பால் குடி" என சொல்வதில்லை. மக்னிசியம், டி3, பி6 எடு எனத்தான் சொல்லிவருகிறது. இவை மூன்றும் இருந்தால் குறைந்த அளவு கால்ஷியம் எடுத்தாலும் நம் எலும்புகள் பலமாக இருக்கும். ஆதிமனிதன் பாலை குடித்ததே கிடையாது. அவனுக்கு ஏன் எலும்புகள் உறுதியாக இருந்தன? நமக்கு ஏன் இல்லை? டி3, மக்னிசியம், பி6 எனும் மும்மூர்த்திகளே இதற்கு காரணம்.

க்ளுகோஸ் மேலாண்மைக்கும் டி3 அவசியம் என்பதால் டி3 பற்றாகுறை டைப்1, டைப்2 என டயபடிஸ் வருவதில் பெரும்பங்கு வகிக்கிறது. ஜெர்மனியில் நிகழ்ந்த ஆய்வு ஒன்றில் டி3 வைட்டமினை கொடுத்து எடை குறையுமா என ஆய்வு செய்ததில் ஆய்வாளர்களே எதிர்பாராவிதமாக டி3 உட்கொண்ட ஆண்களுக்கு ஆண்மைதன்மையை அதிகரிக்கும் டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோனும் கணிசமாக அதிகரித்தது. ஆக ஆண்மைகுறைபாட்டுக்கும் டி3 அருமருந்து.

மற்றபடி டி3யின் பெருமைகளை முழுக்க விவரிப்பது சாத்தியமே இல்லை..ஆயிரம் நாவு படைத்த ஆதிசேஷனால் மட்டுமே அதைசெய்ய முடியுமே ஒழிய சாதாரண மனிதர்களான நம்மால் முடியாது. நாம் அடிப்படையில் ஆதிபகவனான சூரியனை நம்பி இருக்கும் உயிரினம். சூரியன் தன் பேரருளை நமக்கு டி3 மூலம் வழங்குகிறது.

டி3 நமக்கு முழுமையாக கிட்ட

ஆன்Dராய்டில் "டி மைன்டர்" எனும் ஆப்பை டவுன்லோடு செய்யுங்கள். உங்கள் ஊரில் எந்தெந்த சமயம் சூரிய ஒளியில் டி3 கிடைக்கும் என்பதை காட்டும்

சூரிய கதிர்களில் இருவகை புற ஊதா கதிர்கள் உண்டு. அல்ட்ராவயலட் ஏ, பி என. இதில் உச்சிவெயில் சமயம் இருக்கும் பி கதிரே நமக்கு டி3யை அள்ளிவழங்கும் அன்னதாதா. அல்ட்ராவயலட் ஏவால் பெரிதாக பலனில்லை. டி மைன்டரில் காலை 9 மணிக்கு வைட்டமின் டி கிடைக்கும் என கூறபட்டாலும் அதை நம்பவேண்டாம். உச்சிவெயிலில் 10 நிமிடம் நிற்பதே போதுமானது. அப்படி நிற்கையில்:

தலைக்கு தொப்பி அணியுங்கள். வெறும் வயிற்றில், தன்ணிகூட குடிக்காமல் சூரியனை பார்த்தபடி நின்று மயக்கம் போட்டுவிழுந்து பழியை என் மேல் போடவேண்டாம்

நிழலில் அமர்ந்து கை, காலை மட்டுமாவது காட்டலாம்.

நேரடி தோலில் சூரிய வெளிச்சம் படவேண்டும். கண்ணாடிக்கு பின்னிருந்து காட்டுவது கான்சரை தான் வரவழைக்கும்

எத்தனை தோல் எக்ஸ்போஸ் ஆகிறதோ அந்த அளவு டி3 உற்பத்தி கனஜோராக நடக்கும்

வைட்டமின் டியுடன், வைட்டமின் ஏ அளவுகளும் சரியாக இருப்பது அவசியம். வாரம் 1 முறை ஈரல் சாப்பிடுங்கள். தினம் முட்டை சாப்பிடுங்கள்.

குத்து மதிப்பாக சொல்வதெனில் தொப்பி, அரைகை சட்டை, ஆப்டிராயர் அணிந்திருந்தால் 25 நிமிடம் வெயிலில் நின்றால் போதும். சட்டை இல்லையெனில் 15 நிமிடம். சும்மா ஒரே நிமிடம் நின்றால் கடையில் விற்கும் டி3 மாத்திரையில் இருக்கும் அளவு டி3 கிடைத்துவிடும்....

அதிகாலை சூரிய ஒளி, மாலை சூரிய ஒளி இதமாக இருந்தாலும் அதனால் எப்பலனும் கிடையாது. அவற்றை தவிர்க்கவும்

என்ன டி3யை கனஜோராக வரவேற்க தயாராகிவிட்டீர்களா?

Related Posts Plugin for WordPress, Blogger...