இன்று 48வது “பொறியாளர் தினம்”- இந்தியாவின் முதல் பொறியாளர் விஸ்வேஸ்வரையா நினைவாக!
இந்தியாவில் வேலை இல்லாத் திண்டாடத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டாலும், மாணவர்கள் சாரை சாரையாக படையெடுக்கும் துறை பொறியியல். அத்தகைய சிறப்பு பெற்ற பொறியாளர்களுக்கான 48வது "பொறியாளர்கள் தினம்" இன்று கொண்டாடப்படுகின்றது.
அப்படி பொறியாளர்கள் அனைவருக்கும் முதன்மைப் பொறியாளராக இருந்த ஒருவரின் பிறந்தநாளே இந்தியாவில் பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பிறந்த மோக்சகுந்தம் விஸ்வேஸ்வரையா தான் அந்தப் பெருமைக்குரிய பொறியாளர்.
"சர் எம்.வி" என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர். புனே பல்கலைக்கழகத்தின் காலேஜ் ஆப் எஞ்சினியரிங் கல்லூரியில் படித்த இவர், மும்பை பொதுப் பணித்துறையில் பணியாற்றி, பிறகு இந்திய நீர்பாசனத்துறை கமிஷனில் பொறியாளராக அரசால் நியமிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment