Sunday, 19 July 2015

வசூலில் மாரி புரிந்த மாபெரும் சாதனை!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாரி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தில் இப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ. 6 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தனுஷ் படங்களில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படமாக மாரி உருவெடுத்துள்ளது.

இதன்மூலம் மிகுந்த உற்சாகமடைந்துள்ள தனுஷ் டிவிட்டரில் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இது தனது வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சிகரமான நாள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாரி படத்தில் அனிருத்தின் இசையும் ரோபோ ஷங்கரின் நகைச்சுவை காட்சிகளும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment