Sunday, 17 May 2015

சிறுநீரகக் கல் நீங்க பாட்டி வைத்தியம்

பசலைக் கீரைச் சாற்றில் சிறுநெருஞ்சிமுள்ளை ஊற வைத்து உலர்த்தி, பிறகு பசும்பாலுடன் சேர்த்து வேக வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் என 20 நாட்களுக்கு சாப்பிட்டால்ச சிறுநீரகக் கற்கள் கரையும். சிறுநீரகம் தொடர்பான பிற நோய்களும் குணமாகும்.

முள்ளிங்கிக் கீரை சாறை 30 மிலி அளவில் தொடர்ந்து 21 நாள்கள் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்து போகும். சிறுநீர்ப்பை வீக்கமும் குணமாகும்.

காசினிக் கீரையை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் சிறுநீரகக் கற்கள் குறையும்.

சாணாக்கிக் கீரைச் சாறை, அதிகாலையில் 30 மிலி அளவு குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.

No comments:

Post a Comment