Monday, 9 March 2015

பழங்கால பழமொழிகள் :- Krtamilanz

பழங்கால பழமொழிகள் :-

* இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.

* இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.

* உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.

* உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?

* எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.

* எறும்பூரக் கல்லும் தேயும்.

* ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

* ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

* கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.

* கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.

கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?

* கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.

* கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.

* கழுதை அறியுமா கற்பூர வாசனை?

No comments:

Post a Comment