WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Sunday 14 June 2015

ரோமியோ ஜூலியட் – திரை விமர்சனம்

எந்த ஒரு விஷயத்தையும் பாசிட்டிவாக நினைக்கும் ஒரு இளைஞன், அதேபோல் எந்தவொரு பாசிட்டிவான விஷயத்தையும் நெகட்டிவாகவே யோசனை செய்யும் ஒரு இளம்பெண். ரெண்டு பேருக்கும் காதல் வருகிறது. இந்த காதல் கடைசிவரை நிலைத்து நின்று கைகூடியதா? இல்லையா? என்பதுதான் ரோமியோ ஜூலியட் படத்தின் கதை.
ஒரு பெரிய ஜிம்மில் கோச்சராக இருக்கிறார் ஜெயம் ரவி. இவர் சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை அனைவருக்கும் கோச்சராக இருப்பதால், அனைவரும் இவரிடம் சகஜமாக பழகுகின்றனர்.
ஒருமுறை ஆர்யாவுக்கு டிரெயினிங் கொடுப்பதற்காக விமானத்தில் எகானமி கிளாஸில் பயணம் ஜெயம் ரவியை பார்க்கும் ஏர் ஹோஸ்டஸான ஹன்சிகா அவர் பெரிய பணக்காரர் என்று புரிந்து கொள்கிறார்.
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்ட ஹன்சிகா, பெரிய பணக்காரரை காதலித்து ஆடம்பர வாழ்க்கை வாழவேண்டும் என்ற கனவோடு இருக்கிறார். அதனால் பணக்காரரான ஜெயம் ரவியை காதலித்து தனது கனவை நிறைவேற்றிக் கொள்ள முடிவெடுக்கிறார்.
அவரிடம் காதல் சொல்ல ஒவ்வொரு முறை இவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிகிறது. ஒருகட்டத்தில் ஜெயம் ரவியே ஹன்சிகாவை நேரில் பார்த்து அவளது அழகில் மயங்கி, காதலில் விழுகிறார். அதன்பிறகு இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள்.
ஒருநாள் தங்களது காதலை, ஜெயம் ரவியின் பெற்றோரின் கவனத்துக்கு கொண்டு சென்று திருமணம் செய்துகொள்ள காதலர்கள் இருவரும் முடிவெடுக்கிறார்கள். அந்த சமயத்தில் ஜெயம் ரவி, பெரிய பணக்காரன் இல்லை, சாதாரண ஒரு ஜிம் கோச்தான் என்பது ஹன்சிகாவுக்கு தெரிய வருகிறது.
அவனை திருமணம் செய்துகொண்டால் தனது கனவு நிறைவேறாது என்பதால் அவனை வெறுத்து ஒதுக்குகிறாள். ஆனால், அவளது பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத ஜெயம் ரவி, அவளையே பின்தொடர்கிறார்.
ஆனால், வாழ்க்கையை சந்தோஷமாக வாழ பணம்தான் தேவை. அன்பு முக்கியமில்லை என்று ஜெயம் ரவியை முற்றிலுமாக வெறுத்து ஒதுக்கிவிட்டு செல்கிறாள் ஹன்சிகா.
இறுதியில், ஹன்சிகா தனக்கு விருப்பமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து சந்தோஷமாக வாழ்ந்தாரா? ஹன்சிகாவை மறந்து ஜெயம் ரவி வேறொரு வாழ்க்கையை தேடிக்கொண்டாரா? என்பதே மீதிக்கதை.
ஜெயம் ரவி, பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கிறார். இவரை பார்க்கும்போது யாரும் இவரை காதலிக்க முடியாது என்று கூறமுடியாது. அந்த அளவுக்கு இந்த படத்தில் இளமையாக இருக்கிறார்.
சற்று உடல் பெருத்திருந்தாலும் அவரை ரசிக்கமால் இருக்க முடியவில்லை. அதேபோல், நடிப்பையும் ரொம்ப ஜாலியாக எடுத்துக் கொண்டு நடித்திருக்கிறார்.
படத்தில் ஜெயம் ரவியைவிட ஹன்சிகாவுக்குத்தான் காட்சிகள் அதிகம் வைத்திருக்கிறார் இயக்குனர். அவருக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகளும் கொடுத்திருக்கிறார். அனைத்தையும் கவனமாக கையாண்டு சிறப்பாக நடித்திருக்கிறார் ஹன்சிகா.
ஜெயம் ரவியை கழட்டி விடுவதற்காக இவர் செய்யும் கலாட்டாக்கள் எல்லாம் ரசிக்க வைக்கிறது. அதேபோல், ஜெயம் ரவியை மறக்க முடியாமல் தவிக்கும் காட்சிகள், அவருக்கு இன்னொரு பெண்ணை ஏற்பாடு செய்துகொடுக்கும் காட்சிகள் என எல்லாவற்றிலும் வெவ்வேறு விதமான முகபாவனையுடன் அழகாக நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார்.
பெரிய பணக்காரராக வரும் வம்சி கிருஷ்ணா ஆர்ப்பாட்டமில்லாமல் அசத்தலாக நடித்திருக்கிறார். பூனம் பாஜ்வா கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார். ஒரு சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார்.
இயக்குனர் லக்ஷமன் ஒரு நல்ல காதல் கதையை தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு அழகான காதல் கதையை திரையில் பார்த்த உணர்வு நமக்கு கிடைத்திருக்கிறது.
வாழ்க்கையில் சந்தோஷம் நிலைத்து நிற்க பணம் தேவையில்லை. உண்மையான அன்புதான் தேவை என்பதை ஒவ்வொரு காதலருக்கும் புரிய வைத்திருக்கிறார்.
இந்த படத்துக்கு பிறகு ஏனோ தானோவென்று காதலிப்பவர்கள்கூட உண்மையான காதலர்களாக மாறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் படத்தை எடுத்திருக்கிறார்.
அந்த நம்பிக்கை வீண்போகாது என்று சொல்லலாம். படம் முழுக்க காதலை மட்டுமே சொல்லாமல், கதையோடு ஒட்டிய காமெடியையும் புகுத்தியிருப்பது படத்திற்கு மேலும் சிறப்பு.
இமான் இசையில் பெரும் சர்ச்சையை சந்தித்த ‘டண்டணக்கா’ பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது. அதேபோல், ‘அரக்கி’ பாடலும் துள்ளி ஆட வைக்கிறது. ‘தூவானம்’ பாடல் நல்ல மெலோடி ரகம்.
வைக்கம் விஜயலட்சுமி பாடிய ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ பாடல் நல்ல மெசேஜாக அமைந்துள்ளது. பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார்.
படத்திற்கு மற்றொரு பெரிய பலம் சவுந்தரராஜனின் ஒளிப்பதிவுதான். இவருடைய ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கலர் புல்லாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘ரோமியோ ஜூலியட்’ அழகான காதல்.

நல்ல படங்களில் தொடர்ந்து நடிப்பேன்: சோனியா அகர்வால்

சோனியா அகர்வால் ‘காதல் கொண்டேன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, திருட்டுபயலே உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தார்.
தற்போது விவேக் ஜோடியாக நடித்த பாலக்காட்டு மாதவன் படம் ரிலீசுக்கு தயாராகிறது. மேலும் இரு தமிழ் படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
சோனியா அவர் கூறியதாவது:–
பன்னிரெண்டு வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். சிறிய இடைவெளிக்கு பிறகு ‘பாலக்காட்டு மாதவன்’ படத்தில் நடித்தேன். காமெடி படமாக தயாராகியுள்ளது. இதற்கு முன்பு இப்படி கலகலப்பான காமெடி படத்தில் நடித்தது இல்லை.
சினிமாவுக்கு மீண்டும் வந்ததை தொடர்ந்து கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பை குறைத்துள்ளேன். தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். பாலக்காட்டு மாதவன் படத்தில் கொஞ்சம் குண்டாக தெரிய வேண்டும் என்பதற்காக உணவில் ‘சிக்கன்’ சேர்த்து சாப்பிட்டேன்.
நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. அதுமாதிரி படங்களில் தொடர்ந்து நடிப்பேன்.
இப்வாறு சோனியா அகர்வால் கூறினார்.

Friday 12 June 2015

2G, E , 3G , H ,H+

தெரிந்து கொள்வோம்
நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன்
2G, E , 3G , H ,H+
Symbol வருவதை பார்த்திருக்கிற
ோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.
➖➖➖➖➖
1). "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol.
இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும்.
இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம்.
இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும்,
1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.
➖➖➖➖➖
2). "E" இதுவும் 2G(2.5G)
EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இன்டர்நெட் ஆகும்.
2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது.
இதன்மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44மணி நேரமும்,
1GB dataவை அனுப்ப 89மணி நேரமும் ஆகும்.
இந்த "E" பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
➖➖➖➖➖
3). "3G" இது 3G மொபைல் இன்டர்நெட்
UMTS (Universal Mobile Telecom System) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.
இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 6மணி நேரத்தில் டவுன்லோடும்,
அதே 1GB dataவை 18மணி நேரத்தில் அனுப்ப இயலும்.
➖➖➖➖➖
4. Symbol "H" இது 3G மொபைல் இன்டர்நெட்
HSPA (High Speed Packet Aceess) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.
இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்
இதன் மூலம் நாம் 1GB dataவை 25நிமிட நேரத்தில் டவுன்லோடும்,
அதே 1GB dataவை 45நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.
➖➖➖➖➖
5). "H+" இதுவும் 3G மொபைல் இன்டர்நெட்
(Evolved High Speed Packet Access) கனெக்ட் செய்வதன் மூலம் வரும் குறியீடு
இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 5-20நிமிடங்களில் டவுன்லோடும்,
1GB dataவை 15-39 நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.
➖➖➖➖➖
6). "4G" இச்சேவை 3G network internet - LTE (Long Term Evolution) இந்தியாவில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது.
இதன் வேகம் மிகவும் அதிகம்.
இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 3நிமிடத்தில் டவுன்லோடிங் செய்திடலாம்.
அதே 1GB dataவை அனுப்ப 5நிமிடம் மட்டுமே போதும்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு முழுவமும் இச்சேவை வரும் என எதிர்பார்க்க படுகிறது.

Sunday 7 June 2015

லஞ்சம்! - நாடுகளும் தண்டனைகளும்:


# ஜஸ்லாந்து:
இங்கு தண்டனை என்னவோ 2 வருட
சிறைச்சாலைதான்.அதற்கு முன்பு லஞ்சம்
வாங்கிச் சேர்த்த பணம் முழுவதும் பறிமுதல்
செய்யப்படும். (ஊழல் குறைவான நாடுகள்
வரிசையில் இதற்கு முதலிடம்).
# எகிப்து:
இங்கு லஞ்சம் வாங்குவது கிரிமினல்
குற்றம். நிரூபிக்கப்பட்டால் ஆயுள்
முழுவதும் சிறைதான். அதுவும் உள்ளே
கடுமையான வேலைகளைச் செய்யவைத்து
பெண்டு நிமிர்த்துவார்கள்.
# அர்ஜெண்டினா:
சிறை தண்டனையோடு வேலையும்
பறிபோய்விடும். விடுதலையான பிறகும்
சாகும் வரை வேறு வேலை தர மாட்டார்கள்.
# செக் குடியரசு:
சிறை தண்டனை, வேலை காலி, வீடு மற்றும்
பிற சொத்துக்கள் பறிக்கப்படும்.
# நைஜர்:
இங்கு தண்டனை கொஞ்சம்
வித்தியாசமானது.லஞ்சம் பெற்றது
உறுதியானால் அரசியல் மற்றும் குடி
உரிமைகள் பறிக்கப்படும்.
# இங்கிலாந்து:
சிறை தண்டனையுடன் வாக்களிக்கும்
உரிமையும் ரத்து செய்யப்படும்.
# சீனா:
கீழ்மட்ட அரசாங்க அலுவலர்களுக்கு சிறை
தண்டனை. உயர் பொறுப்பில்
இருப்பவர்களுக்கு மரண தண்டனையும்
உண்டு. விஷ ஊசி போட்டு நொடிகளில்
சாகடித்து விடுவார்கள். முன்பெல்லாம்
துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுச்
சாகடிப்பார்கள்.துப்பாக்கி குண்டுக்கான
செலவு உறவினர்களிடம் வசூலிக்கப்படும்.
# இந்தியா:
லஞ்சம்னா என்ன...?

Saturday 6 June 2015

MASSU-Thiraivimarsanam

சூர்யாவும் பிரேம்ஜியும் ராயப்பேட்டை பகுதியில் திருட்டுத் தொழில் செய்து வருகிறார்கள். இவர்கள் ஒருநாள் டாஸ்மாக் கடையில் சென்று கொள்ளையடித்து வருகிறார்கள். அதில், நிறைய பேர் கூட்டு இருப்பதால், இவர்களுக்கு குறைந்த அளவே பணம் கிடைக்கிறது. அதிக பணம் வேண்டும் என நினைக்கும் இவர்கள், கஸ்டமஸ் அதிகாரிகள் போல் நடித்து கப்பலில் பணம் வைத்திருக்கும் ஒரு கும்பலிடம் சென்று பணத்தை எடுத்து வந்து விடுகிறார்கள்.
பணத்தை பறிகொடுத்த கும்பல், சூர்யாவை அடையாளம் கண்டுகொள்கிறது. அவன் கஸ்டம்ஸ் அதிகாரி இல்லை என்பதை அறிந்து, அவனை தேடி கண்டுபிடித்து, அவனிடமிருந்து பணத்தை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்கிடையில், சூர்யா தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் நயன்தாரா மீது காதல் கொள்கிறார். நயன்தாராவிடம் தனது காதலை சொல்ல ஒவ்வொரு முறையும் முயற்சிக்கிறார்.
நயன்தாரா ஒரு மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். அவர் அதே மருத்துவமனையில் நிரந்தர பணியாளராக பணியாற்ற துடிக்கிறார். ஆனால், மருத்துவமனை டீனோ மூன்றரை லட்சம் கொடுத்தால் அவளை பணியில் நிரந்தரம் செய்வதாக கூறுகிறார். இதனால் அந்த பணத்தை எப்படியாவது புரட்ட முடிவெடுக்கிறாள். ஒருகட்டத்தில் இதை தெரிந்துகொண்ட சூர்யா, அவளுக்கு உதவி செய்வதாக உறுதிகொள்கிறார். அப்போது, சூர்யாவின் காதலையும் நயன்தாரா ஏற்றுக்கொள்கிறார்.
இந்நிலையில், பணத்தை பறிகொடுத்த கும்பல் சூர்யாவை தேடி கண்டுபிடித்து, தங்களுடைய இருப்பிடத்திற்கு கொண்டு சென்று விசாரிக்கிறார்கள். ஆனால், சூர்யாவோ தன்னிடம் பணம் இல்லை என்று அவர்களிடம் கூறுகிறார். கடைசியில், அந்த கும்பலிடம் சண்டை போட்டு அங்கிருந்து தப்பிக்கிறார்கள். சண்டையின் முடிவில், கொள்ளையடித்த பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு காரில் செல்லும்போது, விபத்துக்குள்ளாகி இவர்களது கார் சின்னாபின்னாமாகிறது.
சூர்யாவும், பிரேம்ஜியும் இறந்துவிட்டதாக இவர்களை துரத்தி வந்த கும்பல் திரும்பிச் செல்கிறது. இந்நிலையில், சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு வாரம் கடந்ததும், அங்கிருக்க பிடிக்காமல், மருத்துவமனையில் இருந்து வெளியே வருகிறார். அப்போது, கருணாஸ், சண்முகராஜ், ஸ்ரீமன் ஆகியோர் கொண்ட ஒரு கும்பல் சூர்யா மீது ஒரு கண் வைக்கிறது. அவர்கள் பணத்தை தேடி வந்த கும்பல்தான் என்று நினைத்து, அவர்களிடமிருந்து சூர்யாவும் பிரேம்ஜியும் தப்பித்து சென்று தங்கள் வீட்டை அடைகின்றனர்.
அப்போது அந்த வீட்டில் ஏதோ உருவம் நடமாடுவதுபோல் சூர்யாவுக்கு தெரிகிறது. சூர்யாவை துரத்தி வந்த கருணாஸ், ஸ்ரீமன் கும்பல் அவரது வீட்டுக்கும் வந்துவிடுகிறது. அவர்களிடமிருந்து தப்பித்து செல்ல முடிவெடுக்காமல் நேருக்கு நேர் சந்திக்க புறப்படும் சூர்யாவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர்கள் அனைவரும் பேய் என்பது அவருக்கு தெரிய வருகிறது. உடனே, அங்கிருந்து பயந்து ஓடி ஒரு கோவிலுக்குள் செல்கிறார்.
அப்போது, கோவிலில் இருக்கும் பெரியவர் சூர்யாவை பார்த்து, நீ செத்துப் பிழைத்தவன் என்பதால்தான் பேய்களெல்லாம் உன் கண்களுக்கு தெரிகிறது. அவர்களுடைய ஆசையை உன் மூலம் தீர்த்துக் கொள்ள உன்னைத் தேடி வந்திருக்கிறார்கள். இது உனக்கு ஒரு வரம் என்று கூறி, சூர்யாவை மேலும் வியப்படைய வைக்கிறார்.
பேய்கள் தங்கள் கண்களுக்கு மட்டுமே தெரியும் என்பதால், சூர்யாவும், பிரேம்ஜியும் நிஜவாழ்க்கையில் பேய்களை தெரிந்துகொள்ளும் ஆதிகாலத்து டெக்னிக்கை பயன்படுத்துகிறார்கள். செல்போனில் போட்டோ எடுத்தால் பேய்கள் போட்டோவில் தெரியாது. அதனால் செல்போனில் போட்டோ எடுத்து யார் பேய், யார் மனிதன் என்பதை தெரிந்துகொள்கிறார்கள். அப்போது பிரேம்ஜியையும் சூர்யா போட்டோ எடுக்கிறார். ஆனால், அந்த போட்டோவில் பிரேம்ஜி தெரிவதில்லை. அப்போதுதான் சூர்யாவுக்கு பிரேம்ஜி இறந்துவிட்டான் என்பது தெரிகிறது. இருப்பினும் ஆவியாக தன் பக்கத்திலேயே இருப்பதால் சூர்யாவுக்குள் எந்த மாற்றமும் தெரிவதில்லை. எப்பவும் போல் ஜாலியாக இருக்கிறார்.
ஒருகட்டத்தில் நயன்தாராவுக்கு உதவி செய்வதாக கூறிய சூர்யாவிடம் தற்போது எந்த பணமும் இல்லாததால், பேய்களின் உதவியை நாடி அந்த பணத்தை சம்பாதிக்க முடிவெடுக்கிறார். அதன்படி, பேய்களை எல்லாம் ஒன்றுதிரட்டி, அவர்களிடம் ஒரு சந்திப்பு ஏற்படுத்துகிறார். எனக்கு உதவி செய்தால், உங்களுக்கும் உதவி செய்கிறேன் என்று கூறுகிறார்.
இறுதியில், பேய்கள் எல்லாம் சூர்யாவுக்கு உதவி செய்து நயன்தாராவுக்கு வேண்டிய பணத்தை பெற்றுக் கொடுத்ததா? பேய்களின் ஆசைகளை சூர்யா நிறைவேற்றினாரா? என்பதை விறுவிறுப்புடனும், திகிலுடனும் சொல்லியிருக்கிறார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...