WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Saturday 19 December 2015

2015ஆம் ஆண்டின் சூப்பர் ஹீரோக்கள்: கமல், அஜித், தனுஷ்!


   
இந்தாண்டு முடிய இன்னும் இரண்டு வாரங்களே கூட இல்லை. இந்நிலையில் இந்தாண்டின் சூப்பர் ஹீரோக்கள் யார்? என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டாமா?

உலகநாயகன் கமல்ஹாசன்.

இந்த வருடம் முழுவதும் தன் ரசிகர்களை பரபரப்பாக இருக்க செய்தவர் இவர். கமல் நடிப்பில் இவ்வருடம் மட்டும் மூன்று படங்கள் வெளியாகின.

உத்தமவில்லன் பாக்ஸ் ஆபிஸில் தோற்றாலும் கலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் மகா கலைஞன் இவன் என்பதை நிரூபித்தது அப்படம். படத்தின் ஒவ்வொரு ப்ரேமிலும் தன் கண்களை கூட நடிக்கச் செய்திருந்தார். கூடவே யூத் கமலாகவும் தோன்றி இளம் நடிகர்களுக்கு சவால் விட்டுக் கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மலையாள ரீமேக் பாபநாசம் படத்தை வெகு விரைவில் நடித்துக் கொடுத்தார். ஒரு மூத்த நடிகர் என்று பாராமல் எந்த ஹீரோயிசமும் காட்டாமல் க்ளைமாக்ஸில் போலீசிடம் அடிவாங்கி நம்மை கலங்கடித்தார். இப்படம் தமிழக குடும்பங்களை மிகவும் கவர்ந்தது.

இவற்றைத் தொடர்ந்து தூங்காவனம் என்ற மாறுபட்ட காவியத்தையும் கொடுத்தார். முதல்படத்தில் குடும்பத்திற்காக ஏங்கியவர் இதில் மகனுக்காக போராடி வெற்றியும் பெற்றார். ஒரு யதார்த்த போலீஸ் ஆக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அடுத்த ஹீரோ தல அஜித்…

இந்தாண்டின் தொடக்கத்திலும் இறுதியிலும் இரண்டு மாபெரும் ஹிட்டுக்களை கொடுத்துவிட்டு அமைதியாக இருக்கும் நடிகர் அஜித். என்னை அறிந்தால் என்ற குடும்ப சார்ந்த கதையை கம்பீரத்துடன் கொடுத்தார்.

வில்லனுக்கும் சமவாய்ப்பு கொடுத்து அதிலும் தன்னை உயர்த்தி காண்பித்தார். படத்தின் பாடல்களும் அஜித்தின் விதவிதமான கெட்டப்புகளும் படத்திற்கு பக்கபலமாய் அமைந்தது.

தனது அடுத்த வேதாளம் படத்தை தீபாவளிக்கு கொடுத்துவிட எண்ணி, தனக்கு ஏற்பட்ட விபத்தையும் பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்தார். படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்ததை போன்று படமும் வசூலில் தெறிக்க விட்டது.

இவர்களைத் அடுத்து தனுஷ்…

அனேகன், ஷமிதாப், மாரி ஆகிய 3 படங்களைத் தொடர்ந்து இன்று (டிச. 18) தங்கமகன் படத்தையும் வெளியிட்டுள்ளார். இதனிடையில் வை ராஜா வை படத்தில் கொக்கி குமார் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்து பரபரப்பை உண்டாக்கினார்.

இதில் மாரி படம் தனுஷ் ரசிகர்களுக்கான மாஸான படம் என்றால் தங்க மகன் ஒட்டு மொத்த குடும்பத்திற்கான படம் என்றே சொல்லலாம். இப்படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இவை மட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் தரமான படங்களை கொடுத்து வருகிறார் தனுஷ். தான் நடித்த படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை, விஜய்சேதுபதி நடித்த நானும் ரௌடிதான் உள்ளிட்ட கமர்ஷியல் வெற்றிப் படங்களையும் தயாரித்து இந்த வருடத்தில் கொடுத்திருந்தார்.

மேலும் தேசிய விருது பெற்ற காக்கா முட்டை கமர்ஷியலாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. வெனிஸ் திரைப்பட விழா உள்ளிட்ட பல விருதுகளை வென்ற விசாரணை படத்தையும் இவரே தயாரித்து இருக்கிறார். இம்மாத இறுதியில் வெளியாகவிருந்த விசாரணை தற்போது அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Friday 18 December 2015

பிறப்புச் சான்று முதல் இறப்புச் சான்று வரை Birth Certificate to Death Certificate


இந்தியா: தமிழகத்தில் சான்றிதழ்களைப் பெறுவதும் விண்ணப்பங்களை அளிப்பதும் எப்படி? வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் பொழுது, அவை ஒவ்வொன்றிற்கும் சரியான சான்றுகள் தேவைப்படுகின்றன. சான்றளிப்பதில், சான்றளிப்பவர் யாராகவேனும் இருக்கலாம். ஆனால், சான்றளிப்பதும், அதற்காக விண்ணப்பிப்பதும் ஒவ்வொரு தனி மனிதனின் முதன்மைத் தேவைகளில் ஒன்று. இப்படிச் சான்றளிப்பதில் பெரும்பாலும், பெரும்பாலான உரிமைகளை அரசுகள் தங்களகத்தே கொண்டுள்ளன. பிறப்புச் சான்று முதல் இறப்புச் சான்று வரை வாழ்க்கையின் பல நிலைகளில் பல சான்றுகள் நமக்குத் தேவைப்பட்டாலும், அவற்றைப் பெறுவதில் உள்ள நடைமுறைகள் பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை என்பதால் பல இன்னல்கள் ஏற்படுகின்றன.



பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு என்பது ஒவ்வொருவரின் சொந்த ஊரில் அல்லது நிலையான இருப்பிடத்தில் தான் பதிவு செய்யப்பட வேண்டும் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இது தவறு. ஒரு குழந்தை எங்கு பிறக்கிறதோ அங்கு தான் அதன் பிறப்புப் பதிவு செய்யப்பட வேண்டும். அதே போல், ஒருவர் இறந்து விட்டாலும் அவர் எங்கு இறக்கிறாரோ அங்குதான் அவரது இறப்புப் பதிவு செய்யப்பட வேண்டும். ஒருவர் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் பொழுது இறந்து விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், அவர் இறந்து விட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை என்ற நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற பிறகு அங்கு பரிசோதித்த மருத்துவர் நோயாளி ஏற்கனவே சுமார் அரைமணி நேரத்திற்கு முன்னரே இறந்து விட்டார் என்று சொன்னால்? சுமார் அரை மணி நேரத்திற்கு முன்னாள் தங்களது மருத்துவ அவசர கால இயக்கூர்தி எந்த ஊரில் வந்து கொண்டிருந்திருக்கும் என்றெல்லாம் குழம்பத் தேவையில்லை; மாறாக, எங்கு முதன் முதலில் ஒரு மருத்துவர் 'ஒருவர் இறந்து விட்டார்' என்று கருதுகிறாரோ அங்கேயே அந்த இறப்பைப் பதிவு செய்யலாம். இறந்தவர் வீட்டிலிருந்து கிளம்பியவுடன் கூட இறந்திருக்க முடியும். அதற்காக அங்கே சென்று தான் அவருடைய இறப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்றெல்லாம் இல்லை. அவருடைய இறப்பு எங்கு முதன் முதலில் ஒரு பதிவு பெற்ற மருத்துவரால் உறுதி செய்யப்படுகிறதோ அங்குதான் அவர் இறந்ததாகக் கருதப்படுவார்.


பிறப்புச் சான்றிதழ் அல்லது இறப்புச் சான்றிதழில் பிறந்தவர் அல்லது இறந்தவர் பெயர் உள்ளிட்ட தகவல்களைப் பதிவு செய்யும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிறந்த குழந்தையின் தாய் தந்தையர் அல்லது முகவரியில் ஏதேனும் தவறு இருந்தால், அதைச் சரியான சான்றுகள் அளித்து மாற்றிக்கொள்ளலாம்; அதே வேளையில் குழந்தையின் பெயரில் ஏதேனும் மாற்றம் தேவையென்றால் அப்படி மாற்ற முடியாது. எனவே, குழந்தையின் பெயரை உறுதி செய்த பின்னரே அதைப் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யவேண்டும். ஒருமுறை பதிவு செய்துவிட்டால், அதை மாற்றுவது அவ்வளவு ஒன்றும் எளிதானது அல்ல. பெற்றோர் சரியான தகவல்களை அளித்திருந்தும், பதிவு செய்யும் அலுவலர் ஏதேனும் தவறு செய்திருந்தால் மட்டும், பதிவு செய்கையில் பெற்றோர் அளித்த விண்ணப்பத்தில் உள்ள தகவல்களைப் பரிசோதித்துவிட்டு அதை மாற்றித் தருவர். எனவே, பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்யும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்



இந்தியப் பெற்றோர்களுக்கு வெளிநாட்டில் குழந்தைகள் பிறந்தால், அந்நாட்டில் உள்ள தூதரகம் வாயிலாகப் பதிவு செய்ய வேண்டும். அதாவது இந்தியாவில் உள்ள ஒரு கணவனும் மனைவியும் பணி நிமித்தமாக, அல்லது குழந்தைப்பேறு மருத்துவத் தேவைகளுக்காக வெளிநாட்டில் உள்ள ஒரு மருத்துவமனைய்ல் மருத்துவம் பார்த்து அங்கேயே குழந்தை பெற்றுக்கொண்டால், அக்குழந்தையின் பிறப்பு அங்குள்ள தூதரக அலுவலகம் வாயிலாகப் பதிவு செய்ய வேண்டும். இறப்பும் அவ்வாரே பதிவு செய்யப்படவேண்டும். ஒருவர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது அவருக்கு உயர் மருத்துவக் காரணங்களுக்காக அவருடைய உறவினர்கள் வெளிநாட்டில் உள்ள மருத்துவமனைகளை நாடுகின்றனர் என்று வைத்துக்கொள்வோம். அப்படி வெளிநாட்டில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ நடவடிக்கைகளின் போது அந்த நபர் இறந்து விட்டால், அங்குள்ள தூதரகம் வாயிலாகப் பதிவு செய்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளவேண்டும்.


வான் ஊர்தியில் அல்லது கப்பலில் பயணிக்கும் பொழுது குழந்தை பிறந்தால் அல்லது ஒருவர் இறந்துவிட்டால், அந்தப் பயணம் அதிகாரப்பூர்வமாக எங்கு முடிகிறதோ அங்குதான் அந்தப் பிறப்பு அல்லது இறப்புப் பதிவு செய்யப்படவேண்டும். எரிபொருள் நிரப்ப அல்லது அச்சுறுத்தல் காரணமாக அந்த வான் ஊர்தி அல்லது கப்பல் ஏதாவது ஒரு நிலையில் நிறுத்தப்பட்டால் அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. உண்மையில் பயணியை அதிகாரப்பூர்வமாக எங்கு இறக்கிவிடுகிறார்களோ அங்கு தான் பதிவு செய்யவேண்டும்.

Monday 14 December 2015

All semester exams postponed flood affected 4 districts

Anna University Chennai
Controller of Examination
**Official Notification **
As per the direction of Honourable Court, the Examinations for Anna University affiliated colleges other than the colleges situated in four flood affected districts, Chennai, Tiruvallur, Kanchipuram and Cuddalore will be conducted as per the schedule given by COE from 15.12.2015 onwards. For the students and 148 colleges of flood affected district, all the semester exams are postponed. Separate examinations will be conducted for these students of four flood affected districts from 28.12.2015 onwards. Revised timetable will be announced in Anna University website.
-------
Except that 4 flood affected districts, all exams begins tomorrow (15.12.2015) - also for R2013 first semester. 16th and 18th exams are postponed for R2013 First Semester only.
All other semester have their exams as scheduled which is available in student login of http://coe1.annauniv.edu > Exam Schedule tab.
Please share this info to reach maximum students!!

வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது.

Annauniversity students willingness before 14-12-2015 05.00PM

** OFFICIAL NOTIFICATION **
Anna University Affiliated Colleges Students cast your willingness before 5pm of 14.12.2015
The affiliated Engineering college students of flood affected districts Chennai , Tiruvallur , Kanchipuram and Cuddalore can either appear for current semester examinations or they can appear next semester. The students need not pay separate exam fees .If the students appear next semester , it will be treated as first appearance itself.The students are requested to provide their willingness before 5pm ,14.12.2015 to the Principals in their respective colleges..

Wednesday 9 December 2015

இந்திய தண்டனை சட்டம் 153A(1) Indian Punishment Act 153A (1)


தயவுசெய்து சிந்தனை வேண்டும் இந்திய தண்டனை சட்டம் 153A(1)
*********************************************************************

பிரிவு 153A(1): பேச்சாலோ எழுத்தாலோ அல்லது சைகையாலோ, மத இன மொழி சாதி சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளைத் தூண்டி விட முயற்சி செய்வது குற்றமாகும். குற்றத்தினை புரிபவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறைக்காவலுமடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்
Related Posts Plugin for WordPress, Blogger...