WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Monday 18 May 2015

இனி திருந்துமா இந்தியா?

ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் வசிக்கும் நண்பர் ஒருவர், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். பெங்களூர் தான் அவரது சொந்த ஊர். ஜெர்மனியில் குடியேறி 20ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அங்கு 'பென்ஸ்' தொழிற்சாலையில் பொருத்துனர் (fitter)ஆக வேலை செய்கிறார்.அரைகுறை தமிழில் பேசுவார்.
பிட்டராக இருந்தாலும் விவரமானவர்; பல துறைகளில் ஞானம் உள்ளவர் அவரிடம் பேசிக் கொண்டிருக்கையில்
பல அரிய தகவல்கள் கிடைத்தன.

அவர் கூறியது;
சார்.... இப்போது இந்தியாவிலே 'பென்ஸ்' கார் 45 லட்ச ரூபாய்க்கு கூட கிடைக்குது....
அஹா.... ஜெர்மன் நாட்டு கார் ன்னு பணக்காரர்களும், பெரிய தொழிலதிபர் களும் போட்டி போட்டுக்கிட்டு வாங்குறாங்க.இந்த கார்ல இருக்கற பல முக்கியமான பாகங்கள், கியர்பாக்ஸ் உள்பட, இந்தியாவில், இருக்கும்' டாடா'(TATA) கம்பெனியிலே செஞ்சு, ஜெர்மனிக்கு வருது.... நாங்க அதை அங்கே பொருத்தி,பல நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம்!
இதுக்கு காரணம் என்ன தெரியுமா? ஜெர்மனியிலே அந்த பாகங்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவில் கால்வாசி செலவு கூட ஆகாது நம் நாட்டில்..நாங்கள், எங்களுக்கு தேவையான டிசைன் மற்றும் மூல பொருட்களைக் கொடுத்து விடுகிறோம்....
இங்கே இந்தியாவில் லேபர், ரொம்ப "சீப்!' அது ஜெர்மானியர்களுக்கு பெரிய, "அட்வான்டேஜ்' ஆகிவிடுகிறது.
இந்தியாவில் லேபர் எவ்வளவு, "சீப்' எனபதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேட்டுக்குங்க சார்....' என்றவர், தன் சட்டைப் பையில் இருந்து, ஒரு காகிதத்தை எடுத்து படித்து காட்டினார். அப்படியே ஒரு கனம் அதிர்ந்து போனேன்!

ஒரு ஜெர்மன் தொழிலாளிக்கு குடுக்கற சம்பளத்திலே இரண்டு அமேரிக்க தொழிலாளியை வேலைக்கு அமரத்தலாம்.
இல்லையென்றால், தைவான் நாட்டு தொழிலாளி ஐந்து பேரையோ, பிரேசில் நாட்டு தொழிலாளி எட்டுப் பேரையோ வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்....
ஆனால், இந்தியத் தொழிலாளியின் நிலையோ பரிதாபம் ?
..ஒரு ஜெர்மன் தொழிலாளியின் சம்பளத்தில் "128" இந்திய தொழிலாளர்களை(வெட்ககேடு) வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்றால் பாருங்கள்.

இந்திய தொழிலாளியின் சம்பளம் மணிக்கு 25 ரூபாய் என்றால் ,ஜெர்மன் தொழிலாளியின் குறைந்தபட்ச சம்பளம் மணிக்கு 1,150 ரூபாய்!
அப்புறம் ஏன் ஜெர்மன் தொழில் அதிபர்கள் , புதிய பொருளாதாரக் கொள்கை வந்த பின்னே இங்கே மூலதனத்தைக் கொட்ட தயங்கப் போறாங்க!

கடந்த 20 ஆண்டுகளில், இந்தியாவில் பல தொழில்களில் முதலீடுகளை செய்துள்ளனர் ஜெர்மானியர்கள்... ஆனால், இதில் சோகமான விஷயம் என்னவென்றால், சுற்றுப்புறச் சூழ்நிலைக்கும், உடல் நலத்திற்க்கும் (கேன்ஸர்,ஆஸ்துமா போன்று)கேடு விளைவிக்க கூடிய பாதுகாப்பு அம்சம் குறைந்த, ஜெர்மனி நாட்டு சட்டப்படி அங்கு தடை செய்யப்பட்ட தொழில்கள் தான் இந்தியாவிற்கு வந்து உள்ளன; என்றார் அந்த நண்பர்.

புதிய பொருளாதார கொள்கை என்கிற பேரில் வெளிநாட்டு குப்பைகளை கொட்ட இந்தியா என்ன குப்பை தொட்டியா? நம் நாடு அந்நிய நாட்டின் குப்பைக்கொட்டும் கிடங்கு ஆகாமல் பார்த்துக்கொள்வது ஒவ்வொறு இந்தியனின் கடமை அல்லவா. ...நண்பர்களுக்கும் பகிருங்கள்
நன்றி உங்கள் சந்.பிரபு.

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...